விக்கிரம சோழன் முதலாம் குலோத்துங்கனுக்கும், இரண்டாம் ராஜேந்திர சோழனின் மகள் மதுராந்திக்கும் நான்காவது மகனாக பிறந்தவர் “விக்கிரம சோழன்”ஆவார். மூத்தவர்களை விட்டுு இவனே சோழ ராஜ்யத்தின் அரசனாக கங்கைகொண்ட சோழபுரத்தில் முடிசூட்டப்பட்டான். பெரும்பாலும் இவன் ஆட்சியை போர்் இன்றியே அமைந்துள்ளது. விக்கிரம சோழன் உலா இயற்றியவர் ஒட்டக்கூத்தர் ஆவார். மேலும் இந் நூலின் அமைப்பு பற்றிிி சற்று விரிவாக பின்வருமாறுு காண்போம். விக்கிரம சோழனின் வரலாறு: விக்ரம சோழனின் தந்தை – முதலாம் குலோத்துங்க […]
Month: January 2021
நந்திக் கலம்பகத்தின் வரலாறு: கிபி 3 நூற்றாண்டு முதல் கிபி ஒன்பதாம் நூற்றாண்டு வரை தமிழகத்தை ஆண்டனர் பல்லவர்கள். இவர்கள் தமிழ் மொழியை வளர்த்துு தமிழ் மொழியைை ஆதரித்தனர்். ஆனால் தமிழ் மொழியை ஆதரித்து வளர்த்த பல்லவ மன்னர்களில் மூன்றாம் நந்திவர்மன் குறிப்பிடத்தக்கவர். ஆகையால் மூன்றாம் நந்திவர்மன் மீது பாடப்பட்டதே “நந்திக்கலம்பகம்” ஆகும். இந்நூல் மற்ற நூல்களை போல அல்லாமல் வரலாற்றில் மிகவும் முக்கியம் வாய்ந்த நூலாக திகழ்கிறது.“உள்ளதை உள்ளவாறு கூறுவது வரலாறு”, உள்ளதை உயர்த்தி கூறுவது “இலக்கியம்” […]
தமிழ்விடு தூது – ஆசிரியர் பெயர் தெரியவில்லை. தமிழ்விடு தூது: தமிழ்விடு தூது என்ற நூல் மதுரையில் எழுந்தருளி உள்ள சோமசுந்தரக் கடவுளிடம் ஒரு பெண் தன் காதல் துன்பத்தை கூறி தமிழ்மொழியை தூது அனுப்பியதாக அமைந்துள்ளது. தமிழ்விடு தூது யார்மீது பாடப்பட்டது – மதுரையில் எழுந்தருளியுள்ள சோமசுந்தரக் கடவுள். இந்த நூலில் தூது பெறுவோர் கடவுள். அதாவது சோமசுந்தரக் கடவுள். தூது விடுவோர் ஒரு பெண் தூது செல்லும் பொருள் தமிழ்மொழி. இந்நூல் 268 கண்ணிகள் […]
முத்தொள்ளாயிரம்
முத்தொள்ளாயிரம் என்பது ஒரு சுவையான கவிதை தொகுப்பு ஆகும். மூவேந்தர்கள் ஆன சேரர், சோழர், பாண்டியர் இம்மூன்று மன்னர்களைப் பற்றியும் மற்றும் அந்நாட்டின் வளம்,போர்த்திறன், போர் நெறி, வள்ளல் தன்மை, பண்பு நலன்கள், நாட்டின் இயற்கை வளங்கள், படை யானைகளின் வலிமை, வேல் முதலிய கருவிகளின் சக்தி ஆகியவைை பற்றியும், அந்த மன்னர்களின் பால் ஒரு தலை காதல் கொண்டு உள்ளம் வாடுகின்ற பெண்ணின் உணர்ச்சிகளை பற்றி சொல்லும் சொல் ஓவியங்கள் பற்றியும் முத்தொள்ளாயிரம்எனும் சொல்லிற்கேற்ப 2700 […]
கலிங்கத்துப்பரணி – ஜெயங்கொண்டார்.
முதல் குலோத்துங்கச் சோழரின் அரசவைப் புலவராகத் திகழ்ந்த பரணிக்கோர் செயங்கொண்டார் என பலபட்டடை சொக்கநாத புலவரால் பாராட்டப்பட்ட மற்றும் இசையாயிரம், உலா மடல் ஆகிய நூல்களைைை இயற்றிய ஜெயங்கொண்டார் இயற்றிய நூலான “கலிங்கத்துப்பரணி”பற்றிி சற்று விரிவாக இங்கே காணலாம். ஜெயங்கொண்டார் கிபி 12ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவர். பரணி என்பது ஆயிரக்கணக்கான யானைகளைப் போரில் கொன்ற வீரனை புகழ்ந்து பாடும் இலக்கியத்திற்கு “பரணி என்று பொருள்”. கலிங்கத்துப்பரணிிிிி 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்றாகும். பரணி இலக்கியங்களில் தமிழில் தோன்றிய […]