Skip to main content

முத்தொள்ளாயிரம்


 முத்தொள்ளாயிரம் என்பது ஒரு சுவையான கவிதை தொகுப்பு ஆகும். மூவேந்தர்கள் ஆன சேரர், சோழர், பாண்டியர் இம்மூன்று மன்னர்களைப் பற்றியும் மற்றும் அந்நாட்டின் வளம்,போர்த்திறன், போர் நெறி, வள்ளல் தன்மை, பண்பு நலன்கள், நாட்டின் இயற்கை வளங்கள், படை யானைகளின் வலிமை, வேல் முதலிய கருவிகளின் சக்தி ஆகியவைை பற்றியும், அந்த மன்னர்களின் பால் ஒரு தலை காதல் கொண்டு உள்ளம் வாடுகின்ற பெண்ணின் உணர்ச்சிகளை பற்றி சொல்லும் சொல் ஓவியங்கள் பற்றியும் முத்தொள்ளாயிரம்எனும் சொல்லிற்கேற்ப 2700 பாடல்கள் இருந்திருக்க வேண்டும்.

ஆனால் பலவித கால அழிவிற்குப் பின்னர் நமக்குக் கிடைத்துள்ளவை 108 பாடல்கள் மட்டுமே. இவைகள் புறத்திரட்டு என்னும் தொகுப்பு நூலில் இடம் பெற்றுள்ளது.

21 பாடல்கள் சேர மன்னனைப் பற்றியும்,

30 பாடல்கள் சோழ மன்னனைப் பற்றியும்,

57 பாடல்கள் பாண்டிய மன்னனைப் பற்றியும் எடுத்துரைக்கின்றது.



முத்தொள்ளாயிரம் நூல் அமைப்பு:

வெண்பாவால் எழுதப்பட்ட நூல் முத்தொள்ளாயிரம். இந்நூல் மன்னர்களின் பெயர்களை குறிப்பிடாமல் சேரர், சோழர், பாண்டியர் எனப் பொதுவாக பாடுகிறது. மூன்று மன்னர்களை பற்றி பாடப்பட்டு 900 பாடல்களைக் கொண்டதால்  இந்நூல் முத்தொள்ளாயிரம் என பெயர் பெற்றது.இந்நூல் முழுமையாக கிடைக்கவில்லை. புறத்திரட்டு என்னும் நூலிலிருந்து 108 செய்யுள்கள் மட்டுமே கிடைத்துள்ளன. இந் நூல் முத்தொள்ளாயிரம் எனும் பெயரில் பதிக்கப்பட்டுள்ளது.  இந்நூலின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை.

இந் நூலினை இயற்றிய ஆசிரியர் ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் ஆக கருதப்படுகிறது. இந்நூல் சேரநாட்டினை -அச்சம் இல்லாத நாடு.

சோழ நாட்டினை -ஏற்கல சிறப்பு போர்க்கள சிறப்பு.

பாண்டிய நாட்டினை -முத்துடை நாடாகவும் இந்நூல் எடுத்துரைக்கிறது.


முத்தொள்ளாயிரம் முக்கிய வினா விடைகள்:

* மூவேந்தர்கள் பற்றியும் பாடும் நூல் முத்தொள்ளாயிரம்.

* சேர மன்னனின் அடையாளச் சின்னம் வில்.

* சோழ மன்னனின் அடையாளச் சின்னம் புலி.

* பாண்டிய மன்னனின் அடையாளச் சின்னம் மீன்.

* சோழ மன்னன் புறாவின் வினை காக்க தன் தசையை அளித்தான்.

*  மார்போலையில் எழுதும் எழுத்தாணி - தந்தம்.

* விசும்பு என்பதன் பொருள் வானம்.

 முத்தொள்ளாயிரத்தில் உள்ள புறத்திரட்டு வெண்பாக்களின் வாயிலாக கிடைத்துள்ள வெண்பாக்கள் 108 வெண்பாக்கள் கிடைத்துள்ளன.

* முத்தொள்ளாயிரத்தில் உள்ள நூல்களில் மேற்கோள்களாக கிடைத்த வெண்பாக்கள் 22 வெண்பாக்கள் கிடைத்துள்ளன.




Comments

Popular posts from this blog

சீறாப்புராணம் - உமறுப் புலவர்.

  தமிழில் எழுதப்பட்ட தலைசிறந்த இஸ்லாமிய இலக்கியம் "சீறாப்புராணம்" ஆகும். சீராபுராணம் இறைத்தூதர் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றினை மையமாகக்கொண்டு தமிழ் மரபுகளைப் பின்பற்றி எழுதப்பட்ட ஒரு காவியம் ஆகும். இத்தகைய நூலை இயற்றியவர் பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த உமறுப் புலவர் இயற்றிய நூல்தான் சீறாப்புராணம். மேலும் உமறுப்புலவர் அதே காலத்தில் வாழ்ந்த சீதக்காதியின் ஆதரவைப் பெற்றார். உமறுப் புலவர் வள்ளல் சீதக்காதியின் பெருமையை " செத்தும் கொடுத்தான் சீதக்காதி" என  சொற்றொடர் விளக்கும். சீறாப்புராணம் அமைவிடம்: சீராபுராணம் இரண்டு பாகங்களாக அமைந்துள்ளது. முதல் பாகத்தில் 44 படலங்களும், இரண்டாம் பாகத்தில் 47 பக்கங்களும் உள்ளன. சீறாப் புராணத்தில் இடம் பெறும் முதல் பாகம்: முதல் பாகத்தில் 3 காண்டங்கள் உள்ளன. இப்பாகத்தில் மொத்தம் 44 படலங்கள் உள்ளன. 1. விலாதத்துக் காண்டம். 2. நுபுவ்வத்துக் காண்டம். 3. ஷீலாஷது காண்டம். * விலாதத்துக் காண்டம்: 1. கடவுள் வாழ்த்துப் படலம் 2. நாட்டுப் படலம் 3. தலைமுறைப் படலம் 4. நபியவதாரப் படலம் 5. அலிமா முலையூர் படலம் 6. இலாஞ்சனை தரித்த படலம் 7. ...

தமிழ்விடு தூது - எத்தனை கண்ணிகள்.

தமிழ்விடு தூது - ஆசிரியர் பெயர் தெரியவில்லை. தமிழ் விடு தூது நூல் அமைப்பு: தமிழ் சிற்றிலக்கிய வகைகளுள் தூது என்பதும் ஒருவகை இலக்கியமாகும். இது வாயில் இலக்கியம், சந்து இலக்கியம் என்று வேறுு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இது 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று ஆகும். தமிழ்விடு தூது பாடல் அமைந்த விதம்: தமிழ்விடு தூது மதுரையில் கோயில் கொண்டிருக்கும் சொக்கநாதர் மீது காதல் கொண்ட பெண் ஒருத்தி தன் காதலி கூறி வருமாறு தமிழ் மொழியை தூது விடுவதாக அமைந்துள்ளதுதான் தமிழ்விடு தூது. தமிழ்விடு தூது சிறப்பு; தமிழின் பெருமையை பாட கவிஞர்கள் கையாளும் உத்திகள் பற்பல. கவிதை அதற்கு ஒரு கருவி, கிளி, அன்னம், விரலி, பணம், தந்தி என்று பல தூதுு வாயில்களை அறிந்துள்ளோம். ஆனால் தமிழையே தூதுப் பொருளாக்கிிி உள்ளது தமிழ்விடு தூது. தமிழின்   இனிமை,இலக்கிய வளம், சுவை,அழகு, திறன், தகுதி, ஆகியவற்றைை இச்சிற்றிலக்கியத்தில் தெளிவாக விளக்கியுள்ளது. தமிழ்விடு தூது முக்கிய வினா விடை குறிப்புகள்: * தமிழ்விடு தூது ஒரு சிற்றிலக்கிய வகையைச் சார்ந்தது. * தமிழ்விடு தூது வில் இடம்பெறும் கண்ணி என்பதன் பொருள் இரண்டு கண்களை போல் இ...

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்- அறநூல்கள்-நீதி நூல்கள் - புறநூல்கள் யாவை.

  பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அற நூல்கள் (அல்லது) நீதி நூல்கள் பின்வருமாறு: * நாலடியார் * நான்மணிக்கடிகை * இன்னா நாற்பது * இனியவை நாற்பது * திருக்குறள் * திரிகடுகம் * ஆசாரக்கோவை * பழமொழி நானூறு * சிறுபஞ்சமூலம் * முதுமொழிக்காஞ்சி * ஏலாதி பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அக நூல்கள் (அல்லது) அகத்திணை நூல்கள் பின்வருமாறு: * கார் நாற்பது * ஐந்திணை ஐம்பது * ஐந்திணை எழுபது * திணைமொழி ஐம்பது * திணைமாலை நூற்றைம்பது * கைந்நிலை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் புற நூல்(அல்லது) புறத்திணை நூல்கள் பின்வருமாறு: * களவழி நாற்பது பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் மற்றும் பாடல்களின் எண்ணிக்கை: நூல்கள்                                       பாடல்கள் நாலடியார்                                  400                நான்மணிக்கடிகை                ...