Skip to main content

தமிழ்விடு தூது - எத்தனை கண்ணிகள்.

தமிழ்விடு தூது - ஆசிரியர் பெயர் தெரியவில்லை.


தமிழ் விடு தூது நூல் அமைப்பு:

தமிழ் சிற்றிலக்கிய வகைகளுள் தூது என்பதும் ஒருவகை இலக்கியமாகும். இது வாயில் இலக்கியம், சந்து இலக்கியம் என்று வேறுு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இது 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று ஆகும்.

தமிழ்விடு தூது பாடல் அமைந்த விதம்:

தமிழ்விடு தூது மதுரையில் கோயில் கொண்டிருக்கும் சொக்கநாதர் மீது காதல் கொண்ட பெண் ஒருத்தி தன் காதலி கூறி வருமாறு தமிழ் மொழியை தூது விடுவதாக அமைந்துள்ளதுதான் தமிழ்விடு தூது.

தமிழ்விடு தூது சிறப்பு;

தமிழின் பெருமையை பாட கவிஞர்கள் கையாளும் உத்திகள் பற்பல. கவிதை அதற்கு ஒரு கருவி, கிளி, அன்னம், விரலி, பணம், தந்தி என்று பல தூதுு வாயில்களை அறிந்துள்ளோம். ஆனால் தமிழையே தூதுப் பொருளாக்கிிி உள்ளது தமிழ்விடு தூது. தமிழின்  இனிமை,இலக்கிய வளம், சுவை,அழகு, திறன், தகுதி, ஆகியவற்றைை இச்சிற்றிலக்கியத்தில் தெளிவாக விளக்கியுள்ளது.

தமிழ்விடு தூது முக்கிய வினா விடை குறிப்புகள்:

* தமிழ்விடு தூது ஒரு சிற்றிலக்கிய வகையைச் சார்ந்தது.

* தமிழ்விடு தூது வில் இடம்பெறும் கண்ணி என்பதன் பொருள் இரண்டு கண்களை போல் இரண்டு  பூக்களைக் கொண்டு தொடுக்கப்படும் மாலைக்கு கன்னி என்று பொருள்படும்.

* வாயில் இலக்கியம் மற்றும் சந்து இலக்கியம் என்று அழைக்கப்படும் நூல் தமிழ்விடு தூது.

* தூது இலக்கியத்திற்கு மற்றொரு பெயர் வாயில் இலக்கியம், சந்து இலக்கியம்.

* தமிழ்விடு தூது அமைந்துள்ள கண்ணிகள் எண்ணிக்கை 268 கண்ணிகள் உள்ளன.

* தமிழ்விடு தூது வை முதல் முதலில் பதிப்பித்தவர் 1930 ஆம் ஆண்டு உ.வே.சா பதிப்பித்தார்.

* தமிழ்விடு தூது இயற்றியவர் ஆசிரியர் பெயர் தெரியவில்லை.

* கலிவெண்பாவால் பாடப்பெறும் சிற்றிலக்கியம் தூது இலக்கியம்.

* தூதுவிடும் பொருட்கள் மொத்தம் 10.

* சிற்றிலக்கிய வகை சாராதது சீவக சிந்தாமணி.

* தாமஸம் என்பதன் பொருள் சோம்பல்.

* தமிழின் வண்ணங்கள் மொத்தம் 100 வண்ணங்கள்.

* உணவின் சுவை மொத்தம் 6 சுவை.

* தமிழின் சுவை மொத்தம் 9 சுவை.

* தேவர்கள் குணம் 3 குணம்.

* தமிழின் குணம் 10 குணம்.

* இனிக்கும் தெளிந்த அமுதம் என்று அழைக்கப்படும் மொழி தமிழ் மொழி.

* ஒளியா வனப்பு மொத்தம் எட்டு (8).

* அழியா வனப்பு ஒன்று (1).

* தமிழ்விடு தூது அமைந்துள்ள வெண்பா கலிவெண்பா.





Comments

Popular posts from this blog

சீறாப்புராணம் - உமறுப் புலவர்.

  தமிழில் எழுதப்பட்ட தலைசிறந்த இஸ்லாமிய இலக்கியம் "சீறாப்புராணம்" ஆகும். சீராபுராணம் இறைத்தூதர் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றினை மையமாகக்கொண்டு தமிழ் மரபுகளைப் பின்பற்றி எழுதப்பட்ட ஒரு காவியம் ஆகும். இத்தகைய நூலை இயற்றியவர் பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த உமறுப் புலவர் இயற்றிய நூல்தான் சீறாப்புராணம். மேலும் உமறுப்புலவர் அதே காலத்தில் வாழ்ந்த சீதக்காதியின் ஆதரவைப் பெற்றார். உமறுப் புலவர் வள்ளல் சீதக்காதியின் பெருமையை " செத்தும் கொடுத்தான் சீதக்காதி" என  சொற்றொடர் விளக்கும். சீறாப்புராணம் அமைவிடம்: சீராபுராணம் இரண்டு பாகங்களாக அமைந்துள்ளது. முதல் பாகத்தில் 44 படலங்களும், இரண்டாம் பாகத்தில் 47 பக்கங்களும் உள்ளன. சீறாப் புராணத்தில் இடம் பெறும் முதல் பாகம்: முதல் பாகத்தில் 3 காண்டங்கள் உள்ளன. இப்பாகத்தில் மொத்தம் 44 படலங்கள் உள்ளன. 1. விலாதத்துக் காண்டம். 2. நுபுவ்வத்துக் காண்டம். 3. ஷீலாஷது காண்டம். * விலாதத்துக் காண்டம்: 1. கடவுள் வாழ்த்துப் படலம் 2. நாட்டுப் படலம் 3. தலைமுறைப் படலம் 4. நபியவதாரப் படலம் 5. அலிமா முலையூர் படலம் 6. இலாஞ்சனை தரித்த படலம் 7. ...

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்- அறநூல்கள்-நீதி நூல்கள் - புறநூல்கள் யாவை.

  பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அற நூல்கள் (அல்லது) நீதி நூல்கள் பின்வருமாறு: * நாலடியார் * நான்மணிக்கடிகை * இன்னா நாற்பது * இனியவை நாற்பது * திருக்குறள் * திரிகடுகம் * ஆசாரக்கோவை * பழமொழி நானூறு * சிறுபஞ்சமூலம் * முதுமொழிக்காஞ்சி * ஏலாதி பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அக நூல்கள் (அல்லது) அகத்திணை நூல்கள் பின்வருமாறு: * கார் நாற்பது * ஐந்திணை ஐம்பது * ஐந்திணை எழுபது * திணைமொழி ஐம்பது * திணைமாலை நூற்றைம்பது * கைந்நிலை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் புற நூல்(அல்லது) புறத்திணை நூல்கள் பின்வருமாறு: * களவழி நாற்பது பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் மற்றும் பாடல்களின் எண்ணிக்கை: நூல்கள்                                       பாடல்கள் நாலடியார்                                  400                நான்மணிக்கடிகை                ...