Skip to main content

கலிங்கத்துப்பரணி - ஜெயங்கொண்டார்.

 


முதல் குலோத்துங்கச் சோழரின் அரசவைப் புலவராகத் திகழ்ந்த பரணிக்கோர் செயங்கொண்டார் என பலபட்டடை சொக்கநாத புலவரால் பாராட்டப்பட்ட மற்றும் இசையாயிரம், உலா மடல் ஆகிய நூல்களைைை இயற்றிய ஜெயங்கொண்டார் இயற்றிய நூலான "கலிங்கத்துப்பரணி"பற்றிி சற்று விரிவாக இங்கே காணலாம்.

ஜெயங்கொண்டார் கிபி 12ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவர்.


பரணி என்பது ஆயிரக்கணக்கான யானைகளைப் போரில் கொன்ற வீரனை புகழ்ந்து பாடும் இலக்கியத்திற்கு "பரணி என்று பொருள்". கலிங்கத்துப்பரணிிிிி 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்றாகும்.

பரணி இலக்கியங்களில் தமிழில் தோன்றிய முதல் நூல் கலிங்கத்துப்பரணி ஆகும்.


கலிங்கத்துப்பரணி நூலமைப்பு:

கலிங்க மன்னன் அனந்தப்பன் மண்மீது முதல் குலோத்துங்க சோழன் போர் தொடுத்து வெற்றி பெற்றான். வெற்றியை பாராட்டி பாடும் நூல் மேலும் தோல்வியுற்ற கலிங்க நாட்டின் பெயரால் அமைந்துள்ளதால் இந்நூலினை கலிங்கத்துப்பரணி என்று அழைக்கப்படுகிறது. மேலும் இந்நூலில் 599 தாழிசைகள் உள்ளன. ஜெயங்கொண்டார் இன் சமய காலப் புலவரான ஒட்டக்கூத்தர் கலிங்கத்துப் பரணியை "தென்தமிழ் தெய்வ பரணி"  என்று பாராட்டி உள்ளார்.



செயங்கொண்டார் பாடிய கலிங்கத்துப் பரணி சிறப்பு பார்வை:

முதலாம் குலோத்துங்கனின் படைத்தலைவன் கருணாகர தொண்டைமான் வடகலிங்க மன்னன்  அனந்த் அவன் மண்ணை வென்ற வீரத்தைப் பற்றிப் பாடுகிறது.


ஒட்டக்கூத்தர் பாடிய கலிங்கத்துப் பரணி சிறப்பு பார்வை:

முதலாம் குலோத்துங்கனின் மகன் விக்கிரம சோழன் தென் கலிங்க மன்னன் கலிங்க வீமனை என்ற பாடலை பாடுகிறது. மேலும் இந்நூல் நமக்கு கிடைக்கவில்லை.


கலிங்கத்துப்பரணி முக்கிய வினா விடைகள்:

* கலிங்கத்துப் பரணியை இயற்றியவர் செயங்கொண்டார்.

* கலிங்கத்துப்பரணி ஒரு 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று.

* பரணி இலக்கியங்களில் தமிழில் தோன்றிய முதல் நூல் கலிங்கத்துப்பரணி.

* கலிங்கத்துப் பரணியில் உள்ள தாழிசைகள் எத்தனை 599 தாழிசைகள் உள்ளன.

* செயங்கொண்டார் வாழ்ந்த காலம் கிபி 12ஆம் நூற்றாண்டு.

* முதல் குலோத்துங்க சோழனின் அரசவையில் புலவராக திகழ்ந்தவர் செயங்கொண்டார்.

* அறிஞர் அண்ணாவிற்கு பிடித்து இலக்கியங்களில் ஒன்று கலிங்கத்துப் பரணியை என்பர்.

* ஜெயங்கொண்டார் பிறந்த ஊர் தீபங்குடி, திருவாரூர் மாவட்டம்.

* ஜெயங்கொண்டார் இயற்றிய நூல்கள் பின்வருமாறு:

இசையாயிரம், உலாமடல்.

* பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் ஜெயங்கொண்டார் எவ்வாறு பாராட்டியுள்ளார் பரணிக்கோர் ஜெயங்கொண்டார்.

* பரணி இலக்கியங்கள் பின்வருமாறு:

தக்கயாகப் பரணி, இரணியன் வதைப் பரணி, பாசவதைப் பரணி, மோகவதைப் பரணி, திராவிடத்து பரணி, வங்கத்து பரணி, சீனத்து பரணி, திருச்செந்தூர பரணி, சூரன் வதைப் பரணி.

Comments

Popular posts from this blog

சீறாப்புராணம் - உமறுப் புலவர்.

  தமிழில் எழுதப்பட்ட தலைசிறந்த இஸ்லாமிய இலக்கியம் "சீறாப்புராணம்" ஆகும். சீராபுராணம் இறைத்தூதர் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றினை மையமாகக்கொண்டு தமிழ் மரபுகளைப் பின்பற்றி எழுதப்பட்ட ஒரு காவியம் ஆகும். இத்தகைய நூலை இயற்றியவர் பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த உமறுப் புலவர் இயற்றிய நூல்தான் சீறாப்புராணம். மேலும் உமறுப்புலவர் அதே காலத்தில் வாழ்ந்த சீதக்காதியின் ஆதரவைப் பெற்றார். உமறுப் புலவர் வள்ளல் சீதக்காதியின் பெருமையை " செத்தும் கொடுத்தான் சீதக்காதி" என  சொற்றொடர் விளக்கும். சீறாப்புராணம் அமைவிடம்: சீராபுராணம் இரண்டு பாகங்களாக அமைந்துள்ளது. முதல் பாகத்தில் 44 படலங்களும், இரண்டாம் பாகத்தில் 47 பக்கங்களும் உள்ளன. சீறாப் புராணத்தில் இடம் பெறும் முதல் பாகம்: முதல் பாகத்தில் 3 காண்டங்கள் உள்ளன. இப்பாகத்தில் மொத்தம் 44 படலங்கள் உள்ளன. 1. விலாதத்துக் காண்டம். 2. நுபுவ்வத்துக் காண்டம். 3. ஷீலாஷது காண்டம். * விலாதத்துக் காண்டம்: 1. கடவுள் வாழ்த்துப் படலம் 2. நாட்டுப் படலம் 3. தலைமுறைப் படலம் 4. நபியவதாரப் படலம் 5. அலிமா முலையூர் படலம் 6. இலாஞ்சனை தரித்த படலம் 7. ...

தமிழ்விடு தூது - எத்தனை கண்ணிகள்.

தமிழ்விடு தூது - ஆசிரியர் பெயர் தெரியவில்லை. தமிழ் விடு தூது நூல் அமைப்பு: தமிழ் சிற்றிலக்கிய வகைகளுள் தூது என்பதும் ஒருவகை இலக்கியமாகும். இது வாயில் இலக்கியம், சந்து இலக்கியம் என்று வேறுு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இது 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று ஆகும். தமிழ்விடு தூது பாடல் அமைந்த விதம்: தமிழ்விடு தூது மதுரையில் கோயில் கொண்டிருக்கும் சொக்கநாதர் மீது காதல் கொண்ட பெண் ஒருத்தி தன் காதலி கூறி வருமாறு தமிழ் மொழியை தூது விடுவதாக அமைந்துள்ளதுதான் தமிழ்விடு தூது. தமிழ்விடு தூது சிறப்பு; தமிழின் பெருமையை பாட கவிஞர்கள் கையாளும் உத்திகள் பற்பல. கவிதை அதற்கு ஒரு கருவி, கிளி, அன்னம், விரலி, பணம், தந்தி என்று பல தூதுு வாயில்களை அறிந்துள்ளோம். ஆனால் தமிழையே தூதுப் பொருளாக்கிிி உள்ளது தமிழ்விடு தூது. தமிழின்   இனிமை,இலக்கிய வளம், சுவை,அழகு, திறன், தகுதி, ஆகியவற்றைை இச்சிற்றிலக்கியத்தில் தெளிவாக விளக்கியுள்ளது. தமிழ்விடு தூது முக்கிய வினா விடை குறிப்புகள்: * தமிழ்விடு தூது ஒரு சிற்றிலக்கிய வகையைச் சார்ந்தது. * தமிழ்விடு தூது வில் இடம்பெறும் கண்ணி என்பதன் பொருள் இரண்டு கண்களை போல் இ...

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்- அறநூல்கள்-நீதி நூல்கள் - புறநூல்கள் யாவை.

  பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அற நூல்கள் (அல்லது) நீதி நூல்கள் பின்வருமாறு: * நாலடியார் * நான்மணிக்கடிகை * இன்னா நாற்பது * இனியவை நாற்பது * திருக்குறள் * திரிகடுகம் * ஆசாரக்கோவை * பழமொழி நானூறு * சிறுபஞ்சமூலம் * முதுமொழிக்காஞ்சி * ஏலாதி பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அக நூல்கள் (அல்லது) அகத்திணை நூல்கள் பின்வருமாறு: * கார் நாற்பது * ஐந்திணை ஐம்பது * ஐந்திணை எழுபது * திணைமொழி ஐம்பது * திணைமாலை நூற்றைம்பது * கைந்நிலை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் புற நூல்(அல்லது) புறத்திணை நூல்கள் பின்வருமாறு: * களவழி நாற்பது பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் மற்றும் பாடல்களின் எண்ணிக்கை: நூல்கள்                                       பாடல்கள் நாலடியார்                                  400                நான்மணிக்கடிகை                ...