Skip to main content

புதுக்கவிதை - கவிஞர் (கல்யாண்ஜி) வாழ்க்கை வரலாறு....

 புதுக்கவிதை - கவிஞர் (கல்யாண்ஜி) 


"வண்ணதாசன்
என்ற புனைபெயரில் சிறுகதைகளும், கல்யாண்ஜி என்ற புனைப்பெயரில் கவிதைகள் எழுதுபவரின் இயற்பெயர்                                          "சி. கல்யாணசுந்தரம்"

இயற்பெயர்: S. கல்யாணசுந்தரம்

பிறந்த ஊர்: திருநெல்வேலி மாவட்டம்

பிறந்த வருடம்: 1946 

புனைப்பெயர்கள் : வண்ணதாசன் (சிறுகதை), கல்யாண்ஜி (கவிதை).


கல்யாண்ஜி இதழ்:

கல்யாண்ஜி முதன் முதலில் "தீபம்" என்ற  இதழில் கவிதைகளை எழுதினார்.


கல்யாண்ஜி பற்றிய முக்கிய குறிப்புகள்:

1.  கல்யாண்ஜியின் தந்தை; தி. க. சிவசங்கரன் ஒரு "இலக்கியவாதி".

2. இவரது தந்தைக்கு 2000ம் ஆண்டில் "சாகித்திய அகடமி விருது" வழங்கப்பட்டது.

3. கல்யாண்ஜி வங்கியில் பணிபுரிந்தார்.

4. கல்யாண்ஜி சிறுகதை எழுதுவதில் வல்லவர் ஆவார்.

5. கல்யாண்ஜி "1962ல் சிறுகதை எழுதத் தொடங்கினார்" என்பது குறிப்பிடத்தக்கது.

6. புதுக்கவிதைக் கவிஞர் கல்யாண்ஜியின் சிறுகதைகள் பல்கலைக்கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டுள்ளது.

7. நவீன தமிழ் சிறுகதை உலகில் மிகுந்த கவனம் பெற்ற எழுத்தாளர் புதுக்கவிதைக் கவிஞர் கல்யாண்ஜி ஆவார்.


கல்யாண்ஜி பெற்ற விருதுகள்:

* இவரது ஒரு "சிறுஇசை" என்ற சிறுகதை நூலுக்காக இந்திய அரசின் 2016ம் ஆண்டுக்கான சாகித்திய அகடமி விருது கிடைத்தது. 

* இலக்கிய சிந்தனை உள்ளிட்ட பல முக்கிய விருதுகளைப் பெற்றிருக்கிறார் வண்ணதாசன் என்கின்ற கல்யாண்ஜி.

* 2016ஆம் ஆண்டு "விஷ்ணுபுரம் விருது" இவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

*  2018 - ல் கனடா தமிழ் இலக்கியத்தோட்டம் எனும் அமைப்பு தமிழ் இலக்கியத்திற்கான வாழ்நாள் சாதனையாளர் விருதினை இவருக்கு வழங்கியது.2

* தமிழக அரசு வண்ணதாசனுக்கு (கல்யாண்ஜி) "கலைமாமணி" என்ற விருதை வழங்கியுள்ளது.


கல்யாண்ஜி எழுதிய நூல்கள்:

* கவிதை நூல்கள்:

1. மணல் உள்ள ஆறு

2. அந்நியமற்ற நதி

3. ஆதி

4. முன்பின்

5. புலரி


* கட்டுரைத் தொகுப்பு நூல்:

1. அகமும் புறமும்


* கல்யாண்ஜியின் கடிதங்கள்:

1. பல கடிதங்கள் தொகுக்கப்பட்டு "சில இறகுகள் சில பறவைகள்" என்ற பெயரில் வெளியானது.

2. வண்ணதாசன் கடிதங்கள்


* கல்யாண்ஜி எழுதிய புதினங்கள்:

1. சின்னு முதல் சின்னு வரை


* கல்யாண்ஜி எழுதிய சிறுகதை நூல்கள்:

1. சமவெளி

2. கிருஷ்ணன் வைத்த வீடு

3. மனுஷா மனுஷா

4. ஒளியிலே தெரிவது (உயிர்மை சுஜாதா அறக்கட்டளை இணைந்து வழங்கிய 2011ஆம் ஆண்டின் சிறுகதைக்கான சுஜாதா விருதினை இந்நூல் பெற்றது) 

5. தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்கள்

6. பெயர் தெரியாமல் ஒரு பறவை

7. ஒரு சிறு இசை

8. கனிவு

9. சில இறகுகள் சில பறவைகள்

10. நடுகை

11. உயரப் பறத்தல்

12. கலைக்க முடியாத ஒப்பனைகள்


புதுக்கவிதைக் கவிஞர் கல்யாண்ஜி பற்றிய முக்கிய மேற்கோள்கள்:

"சைக்கிளில் வந்த

தக்காளி கூடை சரிந்து

முக்கால் சிவப்பில் உருண்டது

அனைத்துத் திசைகளிலும் பழங்கள்

தலைக்கு மேலே

வேலை இருப்பதாய்க் 

கடந்தும் நடந்தும்

அனைவரும் போயினர்

பழங்களை விடவும்

நசுங்கி போனது

அடுத்த மனிதர்கள்

மீதான அக்கறை"

       கவிஞர் கல்யாண்ஜி .....


Comments

Popular posts from this blog

சீறாப்புராணம் - உமறுப் புலவர்.

  தமிழில் எழுதப்பட்ட தலைசிறந்த இஸ்லாமிய இலக்கியம் "சீறாப்புராணம்" ஆகும். சீராபுராணம் இறைத்தூதர் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றினை மையமாகக்கொண்டு தமிழ் மரபுகளைப் பின்பற்றி எழுதப்பட்ட ஒரு காவியம் ஆகும். இத்தகைய நூலை இயற்றியவர் பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த உமறுப் புலவர் இயற்றிய நூல்தான் சீறாப்புராணம். மேலும் உமறுப்புலவர் அதே காலத்தில் வாழ்ந்த சீதக்காதியின் ஆதரவைப் பெற்றார். உமறுப் புலவர் வள்ளல் சீதக்காதியின் பெருமையை " செத்தும் கொடுத்தான் சீதக்காதி" என  சொற்றொடர் விளக்கும். சீறாப்புராணம் அமைவிடம்: சீராபுராணம் இரண்டு பாகங்களாக அமைந்துள்ளது. முதல் பாகத்தில் 44 படலங்களும், இரண்டாம் பாகத்தில் 47 பக்கங்களும் உள்ளன. சீறாப் புராணத்தில் இடம் பெறும் முதல் பாகம்: முதல் பாகத்தில் 3 காண்டங்கள் உள்ளன. இப்பாகத்தில் மொத்தம் 44 படலங்கள் உள்ளன. 1. விலாதத்துக் காண்டம். 2. நுபுவ்வத்துக் காண்டம். 3. ஷீலாஷது காண்டம். * விலாதத்துக் காண்டம்: 1. கடவுள் வாழ்த்துப் படலம் 2. நாட்டுப் படலம் 3. தலைமுறைப் படலம் 4. நபியவதாரப் படலம் 5. அலிமா முலையூர் படலம் 6. இலாஞ்சனை தரித்த படலம் 7. ...

தமிழ்விடு தூது - எத்தனை கண்ணிகள்.

தமிழ்விடு தூது - ஆசிரியர் பெயர் தெரியவில்லை. தமிழ் விடு தூது நூல் அமைப்பு: தமிழ் சிற்றிலக்கிய வகைகளுள் தூது என்பதும் ஒருவகை இலக்கியமாகும். இது வாயில் இலக்கியம், சந்து இலக்கியம் என்று வேறுு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இது 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று ஆகும். தமிழ்விடு தூது பாடல் அமைந்த விதம்: தமிழ்விடு தூது மதுரையில் கோயில் கொண்டிருக்கும் சொக்கநாதர் மீது காதல் கொண்ட பெண் ஒருத்தி தன் காதலி கூறி வருமாறு தமிழ் மொழியை தூது விடுவதாக அமைந்துள்ளதுதான் தமிழ்விடு தூது. தமிழ்விடு தூது சிறப்பு; தமிழின் பெருமையை பாட கவிஞர்கள் கையாளும் உத்திகள் பற்பல. கவிதை அதற்கு ஒரு கருவி, கிளி, அன்னம், விரலி, பணம், தந்தி என்று பல தூதுு வாயில்களை அறிந்துள்ளோம். ஆனால் தமிழையே தூதுப் பொருளாக்கிிி உள்ளது தமிழ்விடு தூது. தமிழின்   இனிமை,இலக்கிய வளம், சுவை,அழகு, திறன், தகுதி, ஆகியவற்றைை இச்சிற்றிலக்கியத்தில் தெளிவாக விளக்கியுள்ளது. தமிழ்விடு தூது முக்கிய வினா விடை குறிப்புகள்: * தமிழ்விடு தூது ஒரு சிற்றிலக்கிய வகையைச் சார்ந்தது. * தமிழ்விடு தூது வில் இடம்பெறும் கண்ணி என்பதன் பொருள் இரண்டு கண்களை போல் இ...

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்- அறநூல்கள்-நீதி நூல்கள் - புறநூல்கள் யாவை.

  பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அற நூல்கள் (அல்லது) நீதி நூல்கள் பின்வருமாறு: * நாலடியார் * நான்மணிக்கடிகை * இன்னா நாற்பது * இனியவை நாற்பது * திருக்குறள் * திரிகடுகம் * ஆசாரக்கோவை * பழமொழி நானூறு * சிறுபஞ்சமூலம் * முதுமொழிக்காஞ்சி * ஏலாதி பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அக நூல்கள் (அல்லது) அகத்திணை நூல்கள் பின்வருமாறு: * கார் நாற்பது * ஐந்திணை ஐம்பது * ஐந்திணை எழுபது * திணைமொழி ஐம்பது * திணைமாலை நூற்றைம்பது * கைந்நிலை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் புற நூல்(அல்லது) புறத்திணை நூல்கள் பின்வருமாறு: * களவழி நாற்பது பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் மற்றும் பாடல்களின் எண்ணிக்கை: நூல்கள்                                       பாடல்கள் நாலடியார்                                  400                நான்மணிக்கடிகை                ...