Skip to main content

நாட்டுப்புறப் பாடல் எத்தனை வகைப்படும்.....

 நாட்டுப்புற பாட்டு


* ஒருவர் பாடிக் கொண்டிருக்கும்போது கேட்டுக்கொண்டிருக்கும் இன்னொருவர் அப்படியே மனதில் வாங்கி தானும் பாடிப்பாடி பழகி விடுகிறார்.

* இப்படி தாளில் எழுதப்படாத பாடல்கள் "நாட்டுப்புற பாடல்கள்" எனப்படுகிறது.

* எழுத்து வழியாக வராமல் பாடிப்பாடி வாய்வழியாக பரவுகிற பாட்டு நாட்டுப்புற பாட்டு.

* இதைப்போல் எழுதப்படாத எல்லோருக்கும் தெரிந்த கதைகளும் உண்டு. இதனை "வாய்மொழி இலக்கியம்" என்று கூறுவர்.

* முன்னர் காலத்தில் நாட்டுப்புற பாடல் "கிராமிய பாடல்" என்று அழைக்கப்பட்டது.

* சென்னை போன்ற பெரு நகரங்களில் மக்கள் பாடும் நாட்டுப்புறப் பாடல் "கானா பாடல்" என்று அழைக்கப்படுகிறது.

* நாட்டுப்பறப்பாட்டு ஒருவர் பாடியது போல அப்படியே இன்னொருவர் பாடுவது இல்லை. இதுவே நாட்டுப்புறப் பாடலின் தனிச்சிறப்பு எனலாம்.


நாட்டுப்புறப் பாடல்  எத்தனை வகைகள்:

நாட்டுப்புற படல் ஏழு வகைப்படும் அவைகள் பின்வருமாறு காணலாம்.

1. தாலாட்டு பாட்டு

2. விளையாட்டு பாட்டு

3. தொழில் பாட்டு

4. சடங்கு பாட்டு

5. கொண்டாட்டப் பாட்டு

6. வழிபாட்டு பாட்டு

7. ஒப்பாரி பாட்டு


1. தாலாட்டு பாட்டு:

* பிறந்த குழந்தைக்காக தாய் தொட்டிலிட்டு பாடும் பாட்டு தாலாட்டு பாட்டு எனப்படும்.

* தாலாட்டு = தால் + ஆட்டு

தால் = நாக்கு

* தாலாட்டு என்றால் "நாக்கை அசைத்து பாடுதல்" என்பது பொருள்.


2. விளையாட்டு பாட்டு:

* கொஞ்சம் வளர்ந்த பிள்ளைகள் பாடுவது விளையாட்டு பாட்டு.


3. தொழில் பாட்டு:

* "களைப்பு நீங்க" வேலை செய்வோர் பாடுவது தொழில் பாட்டு ஆகும்.

* ஏற்றப்பாட்டு ( தொழில் பாட்டு) என்றும் அழைக்கப்படுகிறது.


4. சடங்கு பாட்டு & கொண்டாட்ட பாட்டு:

* திருமணம் மற்றும் பிற நிகழ்ச்சிகளில் பாடுவது சடங்கு மற்றும் கொண்டாட்ட பாட்டு என்று அழைக்கப்படுகிறது.


5. வழிபாட்டு பாட்டு:

"சாமி கும்பிடுவோர் பாடுவது" வழிபாட்டு பாடல் எனப்படும்.


6. ஒப்பாரி பாட்டு:

* இறந்தோர்க்கு பாடுவது "ஒப்பாரி பாட்டு" எனப்படும்.

* இவருக்கு ஒப்பாவர் ஒருவரும் இலர் என இறந்தவரை பாடுவது ஒப்பாரி பாடல் ஆகும்.


நாட்டுப்புற பாடல் பற்றிய முக்கிய சிறப்பம்சங்கள்:

1. நாட்டுப்புறப்பாட்டு தமிழர்கள் வாழ்க்கை முறையைப் படம்பிடித்துக் காட்டுகிறது.

2. "நாட்டுப்புற இயல் ஆய்வு" என்ற நூலைத் தொகுத்தவர் சு. சக்திவேல்.


நாட்டுப்புறப் பாடல்களுக்கு எடுத்துக்காட்டு:

"ஆராரோ ஆரிரரோ ஆராரோ 

ஆரிராரோ கண்ணே கண்மணியே

ஆரடிச்சு நீ அழுதே!

அடிச்சாரைச் சொல்லி அழு 

ஆராரோ ஆரிரரோ"......


நாட்டுப்புற பாடல்களில் விழிப்புணர்வு பாடலுக்கு எடுத்துக்காட்டு:

"ஊரான் ஊரான் தோட்டத்திலே

ஒருத்தன் போட்டானாம் வெள்ளரிக்கா 

காசுக்கு ரெண்டு விக்கச் சொல்லி

காயிதம் போட்டானாம் வெள்ளைக்காரன்"


நாட்டுப்புறப் பாடல்களில் விளையாட்டு பாடல்களுக்கு எடுத்துக்காட்டு:

1.  "ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரே பூ பூத்துச்சாம்

ரெண்டு குடம் தண்ணி ஊத்தி ரெண்டு பூ பூத்துச்சாம்" 


2.  "கொழுக்கட்டை கொழுக்கட்டை ஏன் வேலை?

அடுப்பு எரியல  நான் வேகல.

அடுப்பே அடுப்பே ஏன் எரியல?

மழை பெய்தது நான் எரியல.

மழையே மழையே ஏன் பெய்தே?

புல்லு வளர நான் பெய்தேன்.

புல்லே புல்லே ஏன் வளர்ந்தே?

மாடு திண்ண நான் வளர்ந்தேன்.

மாடு மாடு ஏன் தின்றாய்?

மாட்டுக்காரன் அவிழ்த்துவிட்டான் நான் தின்றேன்.

மாட்டுக்கார மாட்டுக்கார என் அவிழ்த்துவிட்டே?

குழந்தை அழுதது நான் அவிழ்த்து விட்டேன்.

குழந்தை குழந்தை ஏன் அழுதே?

எறும்பு கடிச்சது நான் அழுதேன்.

எரும்பே எரும்பே ஏன் கடிச்சே?

என் புற்றிலே கால்வச்சா, நான் சும்மா இருப்பேனா? 




Comments

Popular posts from this blog

சீறாப்புராணம் - உமறுப் புலவர்.

  தமிழில் எழுதப்பட்ட தலைசிறந்த இஸ்லாமிய இலக்கியம் "சீறாப்புராணம்" ஆகும். சீராபுராணம் இறைத்தூதர் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றினை மையமாகக்கொண்டு தமிழ் மரபுகளைப் பின்பற்றி எழுதப்பட்ட ஒரு காவியம் ஆகும். இத்தகைய நூலை இயற்றியவர் பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த உமறுப் புலவர் இயற்றிய நூல்தான் சீறாப்புராணம். மேலும் உமறுப்புலவர் அதே காலத்தில் வாழ்ந்த சீதக்காதியின் ஆதரவைப் பெற்றார். உமறுப் புலவர் வள்ளல் சீதக்காதியின் பெருமையை " செத்தும் கொடுத்தான் சீதக்காதி" என  சொற்றொடர் விளக்கும். சீறாப்புராணம் அமைவிடம்: சீராபுராணம் இரண்டு பாகங்களாக அமைந்துள்ளது. முதல் பாகத்தில் 44 படலங்களும், இரண்டாம் பாகத்தில் 47 பக்கங்களும் உள்ளன. சீறாப் புராணத்தில் இடம் பெறும் முதல் பாகம்: முதல் பாகத்தில் 3 காண்டங்கள் உள்ளன. இப்பாகத்தில் மொத்தம் 44 படலங்கள் உள்ளன. 1. விலாதத்துக் காண்டம். 2. நுபுவ்வத்துக் காண்டம். 3. ஷீலாஷது காண்டம். * விலாதத்துக் காண்டம்: 1. கடவுள் வாழ்த்துப் படலம் 2. நாட்டுப் படலம் 3. தலைமுறைப் படலம் 4. நபியவதாரப் படலம் 5. அலிமா முலையூர் படலம் 6. இலாஞ்சனை தரித்த படலம் 7. ...

தமிழ்விடு தூது - எத்தனை கண்ணிகள்.

தமிழ்விடு தூது - ஆசிரியர் பெயர் தெரியவில்லை. தமிழ் விடு தூது நூல் அமைப்பு: தமிழ் சிற்றிலக்கிய வகைகளுள் தூது என்பதும் ஒருவகை இலக்கியமாகும். இது வாயில் இலக்கியம், சந்து இலக்கியம் என்று வேறுு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இது 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று ஆகும். தமிழ்விடு தூது பாடல் அமைந்த விதம்: தமிழ்விடு தூது மதுரையில் கோயில் கொண்டிருக்கும் சொக்கநாதர் மீது காதல் கொண்ட பெண் ஒருத்தி தன் காதலி கூறி வருமாறு தமிழ் மொழியை தூது விடுவதாக அமைந்துள்ளதுதான் தமிழ்விடு தூது. தமிழ்விடு தூது சிறப்பு; தமிழின் பெருமையை பாட கவிஞர்கள் கையாளும் உத்திகள் பற்பல. கவிதை அதற்கு ஒரு கருவி, கிளி, அன்னம், விரலி, பணம், தந்தி என்று பல தூதுு வாயில்களை அறிந்துள்ளோம். ஆனால் தமிழையே தூதுப் பொருளாக்கிிி உள்ளது தமிழ்விடு தூது. தமிழின்   இனிமை,இலக்கிய வளம், சுவை,அழகு, திறன், தகுதி, ஆகியவற்றைை இச்சிற்றிலக்கியத்தில் தெளிவாக விளக்கியுள்ளது. தமிழ்விடு தூது முக்கிய வினா விடை குறிப்புகள்: * தமிழ்விடு தூது ஒரு சிற்றிலக்கிய வகையைச் சார்ந்தது. * தமிழ்விடு தூது வில் இடம்பெறும் கண்ணி என்பதன் பொருள் இரண்டு கண்களை போல் இ...

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்- அறநூல்கள்-நீதி நூல்கள் - புறநூல்கள் யாவை.

  பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அற நூல்கள் (அல்லது) நீதி நூல்கள் பின்வருமாறு: * நாலடியார் * நான்மணிக்கடிகை * இன்னா நாற்பது * இனியவை நாற்பது * திருக்குறள் * திரிகடுகம் * ஆசாரக்கோவை * பழமொழி நானூறு * சிறுபஞ்சமூலம் * முதுமொழிக்காஞ்சி * ஏலாதி பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அக நூல்கள் (அல்லது) அகத்திணை நூல்கள் பின்வருமாறு: * கார் நாற்பது * ஐந்திணை ஐம்பது * ஐந்திணை எழுபது * திணைமொழி ஐம்பது * திணைமாலை நூற்றைம்பது * கைந்நிலை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் புற நூல்(அல்லது) புறத்திணை நூல்கள் பின்வருமாறு: * களவழி நாற்பது பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் மற்றும் பாடல்களின் எண்ணிக்கை: நூல்கள்                                       பாடல்கள் நாலடியார்                                  400                நான்மணிக்கடிகை                ...