Skip to main content

புதுக்கவிதை - கவிக்கோ அப்துல் ரகுமான் வாழ்க்கை வரலாறு..

 புதுக்கவிதை -  கவிஞர்  (அப்துல் ரகுமான் )


இயற்பெயர்: அப்துல் ரகுமான்

பிறந்த ஊர்: மதுரை கிழக்கு சந்தைப்பேட்டை

வாழ்ந்த காலம்: 09 - 11 - 1937 முதல் 02 - 06 - 2017

பெற்றோர் பெயர்கள்: மஹி என்னும் (சையத் அகமத்)  மற்றும் ஜைனத் பேகம் 


வேறு பெயர்கள்: 

அருள் வண்ணண், விண்மீன்கள் இடையே ஒரு முழு மதி, தமிழ்நாட்டில் இக்பால், வானத்தை வென்ற கவிஞன், சூரியக் கவிஞன், மரபுக் கவிதையில் வேர் பார்த்தவர், புதுக்கவிதையில் மலர் பார்த்தவர்.


கவிக்கோ அப்துல் ரகுமான் பற்றிய முக்கிய குறிப்புகள்: 

1. "கவிக்கோ" என்று சிறப்பாக குறிப்பிடப்படுபவர் கவிஞர் அப்துல் ரகுமான்.

2. வானம்பாடி இயக்கக் கவிஞர்களோடு இணைந்து செயலாற்றியவர்.

3. வாழும் கவிஞரான இவர் மரபுக்கவிதையின் வேர் பார்த்தவர், புதுக்கவிதையில் மலர் பார்த்தவர் என்று பாராட்டபடுகிறார்கள்.

4. தமிழில் கவிதைக் குறியீடுகள் குறித்து ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றவர் கவிக்கோ அப்துல் ரகுமான் ஆவார்.

5. தமிழில் ஹைக்கூ, கஜல் ஆகிய பிற மொழி இலக்கியங்களை முனைந்து செயல்பட்டதிலும், பரப்பியதிலும் இவர் குறிப்பிடத்தக்கவர்.

6. வாணியம்பாடி இஸ்லாமியக் கலை கல்லூரியில் தமிழ் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

7. தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றதும் தியாகராசர் நடத்திய "தமிழ்நாடு" எனும் நாளிதழில் மெய்ப்பு திருத்துநராக சிலகாலம் பணியாற்றினார்.

8. "தொன்மம்" என்ற இலக்கிய உத்தியை அதிகமாக கையாண்டவர் கவிக்கோ அப்துல் ரகுமான் ஆவார்.

9. "கவிக்கோ" எனும் இதழை நடத்தியவர் இவர்தான்.


கவிக்கோ அப்துல் ரகுமானின் தன் வாழ்நாள் கல்வி பயணம்:

* மதுரை தியாகராசர் கல்லூரியில் சேர்ந்து இடைநிலை வகுப்பில் தேறினார்.

* தொடர்ந்து அக்கல்லூரியில் சேர்ந்து இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டம் பெற்றார்.

* மா. ராசமாணிக்கனார், அவ்வை துரைசாமி, ஆ. கி. பரந்தாமனார், அவ்வை நடராசன், ஆர். பரமசிவானந்தம் ஆகிய தமிழர் அறிஞர்களிடம் பயின்றார்.

* வக்பு வாரிய தலைவராக (தமிழ்நாடு) 2009 முதல் 2011 வரை பணியாற்றி வந்தார்.


கவிஞர் அப்துல் ரகுமான் பெற்ற விருதுகள்:

1. 1989 தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் "தமிழன்னை விருது" வழங்கியது.

2. 1989 தமிழக அரசு "பாரதிதாசன் விருது" வழங்கிப் பெருமைப்படுத்தியது.

3. 1989 இல் தமிழக அரசு "கலைமாமணி விருது" வழங்கியது.

4. 1996இல் சிற்பி அறக்கட்டளை விருது பெற்றார்.

5. 1999 "ஆலாபனை" என்றும் நூலுக்கு சாகித்ய அகாடமி விருது பெற்றார்.

6. 2007இல் "கம்பன் விருது" பெற்றுள்ளார்.

7. 2008 இல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை வழங்கும் "உமறுப்புலவர் விருது" பெற்றுள்ளார்.

8. சிலேடைகளாக  கவிதை தந்து சிரிக்கவும், சிந்திக்கவும் செய்தவர் கவிக்கோ அப்துல் ரகுமான் ஆவார்.


கவிக்கோ அப்துல் ரகுமான் எழுதிய நூல்கள்:

1. பால்வீதி (அப்துல் ரகுமான் எழுதிய முதல் கவிதை) 

2. நிலவில் இருந்து வந்தவன்

3. அவளுக்கு நிலா என்று பெயர்

4. சுட்டுவிரல்

5. தீபங்கள் எரியட்டும்

6. பித்தன்

7. முட்டை வாசிகள்

8. கடவுளின் முகவரி

9. தொலைபேசி கண்ணீர்

10. மின்மினிகளால் ஒரு கடிதம்

11. கரைகள் ஓர் நதியாவதில்லை 

12. இன்றிரவு பகலில்

13. சலவை மொட்டு

14. விலங்குகள் இல்லாத கவிதை

15. காக்கைச் சோறு

16. பசி எந்த சாதி

17. இது சிறகுகளின் நேரம்

18. சொந்த சிறைகள்

19. கால வழு

20. ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை

21. ரகசியப் பூ

22. மகரந்த சிறகு

23. விதையில் விழுந்தவன்

24. நேயர் விருப்பம்

25. ஆலாபனை (சாகித்திய அகடமி விருது பெற்றது)

26. நெருப்பை அணைக்கும் நெருப்பு

27. முத்தங்கள் ஓய்வதில்லை

28. உன் கண்ணில் தூங்கிக் கொள்கிறேன்

29. மரணம் முற்றுப்புள்ளி அல்ல







Comments

Popular posts from this blog

சீறாப்புராணம் - உமறுப் புலவர்.

  தமிழில் எழுதப்பட்ட தலைசிறந்த இஸ்லாமிய இலக்கியம் "சீறாப்புராணம்" ஆகும். சீராபுராணம் இறைத்தூதர் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றினை மையமாகக்கொண்டு தமிழ் மரபுகளைப் பின்பற்றி எழுதப்பட்ட ஒரு காவியம் ஆகும். இத்தகைய நூலை இயற்றியவர் பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த உமறுப் புலவர் இயற்றிய நூல்தான் சீறாப்புராணம். மேலும் உமறுப்புலவர் அதே காலத்தில் வாழ்ந்த சீதக்காதியின் ஆதரவைப் பெற்றார். உமறுப் புலவர் வள்ளல் சீதக்காதியின் பெருமையை " செத்தும் கொடுத்தான் சீதக்காதி" என  சொற்றொடர் விளக்கும். சீறாப்புராணம் அமைவிடம்: சீராபுராணம் இரண்டு பாகங்களாக அமைந்துள்ளது. முதல் பாகத்தில் 44 படலங்களும், இரண்டாம் பாகத்தில் 47 பக்கங்களும் உள்ளன. சீறாப் புராணத்தில் இடம் பெறும் முதல் பாகம்: முதல் பாகத்தில் 3 காண்டங்கள் உள்ளன. இப்பாகத்தில் மொத்தம் 44 படலங்கள் உள்ளன. 1. விலாதத்துக் காண்டம். 2. நுபுவ்வத்துக் காண்டம். 3. ஷீலாஷது காண்டம். * விலாதத்துக் காண்டம்: 1. கடவுள் வாழ்த்துப் படலம் 2. நாட்டுப் படலம் 3. தலைமுறைப் படலம் 4. நபியவதாரப் படலம் 5. அலிமா முலையூர் படலம் 6. இலாஞ்சனை தரித்த படலம் 7. ...

தமிழ்விடு தூது - எத்தனை கண்ணிகள்.

தமிழ்விடு தூது - ஆசிரியர் பெயர் தெரியவில்லை. தமிழ் விடு தூது நூல் அமைப்பு: தமிழ் சிற்றிலக்கிய வகைகளுள் தூது என்பதும் ஒருவகை இலக்கியமாகும். இது வாயில் இலக்கியம், சந்து இலக்கியம் என்று வேறுு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இது 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று ஆகும். தமிழ்விடு தூது பாடல் அமைந்த விதம்: தமிழ்விடு தூது மதுரையில் கோயில் கொண்டிருக்கும் சொக்கநாதர் மீது காதல் கொண்ட பெண் ஒருத்தி தன் காதலி கூறி வருமாறு தமிழ் மொழியை தூது விடுவதாக அமைந்துள்ளதுதான் தமிழ்விடு தூது. தமிழ்விடு தூது சிறப்பு; தமிழின் பெருமையை பாட கவிஞர்கள் கையாளும் உத்திகள் பற்பல. கவிதை அதற்கு ஒரு கருவி, கிளி, அன்னம், விரலி, பணம், தந்தி என்று பல தூதுு வாயில்களை அறிந்துள்ளோம். ஆனால் தமிழையே தூதுப் பொருளாக்கிிி உள்ளது தமிழ்விடு தூது. தமிழின்   இனிமை,இலக்கிய வளம், சுவை,அழகு, திறன், தகுதி, ஆகியவற்றைை இச்சிற்றிலக்கியத்தில் தெளிவாக விளக்கியுள்ளது. தமிழ்விடு தூது முக்கிய வினா விடை குறிப்புகள்: * தமிழ்விடு தூது ஒரு சிற்றிலக்கிய வகையைச் சார்ந்தது. * தமிழ்விடு தூது வில் இடம்பெறும் கண்ணி என்பதன் பொருள் இரண்டு கண்களை போல் இ...

நாலடியார் நூல் விளக்கம் மற்றும் ஆசிரியர்கள் முழு விளக்கம்

  1. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் முதன்மையான பாடப்படும் நூல் "நாலடியார்" 2. தமிழ் மொழிகளில் திருக்குறளோடு ஒப்பிட்ட பாடப்படும் நூல் "நாலடியார்" 3. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் உள்ள ஒரே ஒரு தொகை நூல் "நாலடியார்" 4 . முப்பெரும் அற நூல்களில் ஒன்றாக திகழும் நூல் "நாலடியார்" 5. முப்பெரும் நூல்கள் யாவை "திருக்குறள்" "நாலடியார்" "பழமொழி நானூறு" 6. துறவறத்தையும், நிலையாமையும் அதிகமாக வலியுறுத்தி பாடப்பட்ட நூல் "நாலடியார்" 7. திருக்குறளைப் போன்று வகை தொகை கொண்டு வடிவமைக்கப்பட்ட நூல் "நாலடியார்" 8 . நாலடியார் பிரித்து எழுதுக "நாலடி  + ஆர்" 9. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் அறம் சார்ந்த நூல் எது "நாலடியார்" 10 . நாலடியார் என பெயர் வரக் காரணம் "நாலடி கொண்ட வெண்பாவால் எழுதப்பட்டதால் நாலடியார் என பெயர் பெற்றது" 11. நாலடியார் பாடலைப் பாடியவர்கள் "சமணமுனிவர்கள் பலரால்" 12 . நாலடியார் அடி எல்லை "4 அடிகள்" 13. நாலடியார் பாடல் உணர்த்தும் பொருள் "அறம் -...