Skip to main content

புதுக் கவிதை - கவிஞர் மு. மேத்தா வாழ்க்கை வரலாறு...

 புதுக்கவிதை - கவிஞர் மு. மேத்தா

இயற்பெயர்: முகமது மேத்தா

பிறந்த ஊர்: பெரியகுளம் (தேனி மாவட்டம்)

பிறந்த வருடம்: 05 - 09 - 1945

பணி: சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார்.


மு. மேத்தா பற்றிய முக்கிய குறிப்புகள்:

1." வானம்பாடி" எனும் புதுக்கவிதை ஏட்டின் மூலம் அறிமுகமானவர் கவிஞர் மு. மேத்தா.

2. "தேசப்பிதாவுக்கு ஒரு தெருப்பாடகனின் அஞ்சலி" எனும் கவிதைத் இவருக்கு புகழ் தேடித்தந்த கவிதைகளில் முக்கியமான ஒன்று.

3. இவர் எழுதிய "ஊர்வலம்" எனும் கவிதை நூல் தமிழக அரசின் பரிசைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

4. "சோழநிலா" எனும் வரலாற்று நாவல் ஆனந்த விகடன் இதழ் நடத்திய பொன்விழா இலக்கியப் போட்டியில் முதல் பரிசை பெற்றுள்ளது.

5. தமிழக அரசு வழங்கும் "பாவேந்தர்" விருதினை பெற்றார் கவிஞர்                     மு. மேத்தா.

6. இவர் எழுதிய "ஆகாயத்திற்கு அடுத்த வீடு" எனும் நூல் சாகித்திய அகடமி விருது (2006) பெற்ற நூலாகும்.

7. சமூக சிக்கல்களை மையக்கருவாக வைத்து எழுதும் புதுக்கவிஞர் கவிஞர்   மு .மேத்தா ஆவார்.

8. தமிழகக் கவிஞர் பேரவையின் தலைவராக பணியாற்றியவர் கவிஞர்           மு. மேத்தா. 

9. "படிமக் கவிஞர்" என்று கவிஞர் மு. மேத்தா அழைக்கப்படுகிறார்.

10. இவர் திரைப்பட பாடல் ஆசிரியர் ஆவார்.


மு. மேத்தா இயற்றிய நூல்கள்:

1. மு. மேத்தா கவிதைகள்

2. ஆகாயத்துக்கு அடுத்த வீடு

3. திருவிழாவில் ஒரு தெருப்பாடகன்

4. ஊர்வலம்

5. நந்தவன நாட்கள்

6. வெளிச்சம் வெளியே இல்லை

7. ஒற்றை தீக்குச்சி

8. என் பிள்ளை தமிழ்

9. மனச்சிறகு (1978)

10. கண்ணீர் பூக்கள் (மு.மேத்தா - வின் முதல் கவிதை நூல்) 

11. பித்தன்

12. புதுக்கவிதை போராட்டம்

13. பக்கம் பார்த்து பேசுகிறேன் (2008)

14. கிழிந்த கோடு

15. மு. மேத்தா சிறுகதைகள்


கவிஞர் மு. மேத்தா எழுதிய நாவல் நூல்கள்:

1. சோழ நிலா

2. மகுட நிலா


கவிஞர் மு. மேத்தா எழுதியக் கட்டுரை நூல்கள்:

1. திறந்த புத்தகம் 


கவிஞர் மு. மேத்தா பெற்ற பரிசுகள் மற்றும் விருதுகள்:

1. ஊர்வலம் (கவிதை நூல்) தமிழக அரசின் முதல் பரிசு பெற்றது.

2. சோழ நிலா (நாவல்) ஆனந்தவிகடன் பொன்விழா இலக்கியப் போட்டியில் முதல் பரிசு பெற்றது.


 கவிஞர் மு .மேத்தா - வின் நாயகம் ஒரு காவியம்:

கவிஞர் வாலியின் "அவதார புருஷன்" எழுதுவதற்கு விதை போட்டது முதன்முதலாக கவிஞர் மு. மேத்தா எழுதிய நாயகம் ஒரு காவியம் என்கிற நூல்தான் காரணம். அதற்கு கவிஞர் வாலி "அவதார புருஷர் அவதரிக்க நாயகம் காரணம்" என்று  கூறினார்.

ஆனால் பதுருப்போருடன்  உடன் அந்நூல்  முற்றுப் பெற்றிருக்கிறது. அதன் பிறகான நபிகளாரின் வரலாற்றை ஏன் மு மேத்தா அவர்கள் எழுதவில்லை என்றால் அவரது உடல் நிலை அதற்கு ஒத்துழைக்கவில்லை என்றும் எனவே அவரால் இனி அதை எழுத முடியாது என்றும் நல்ல தமிழ் நடையில் எழுதும் ஆற்றல் கொண்ட இளைஞர்கள் யாரேனும் அப்பணியை தொடர்வதாக இருந்தால் நாளைக்கே வேலையை தொடங்கி விடலாம் என்றும் அதை பதிப்பித்த ரஹ்மத் டிரஸ்ட் முஸ்தபா அவர்கள் கூறினார்.


கவிஞர் மு. மேத்தா வின் சிறந்த மேற்கோள்கள்:

"நான் வெட்ட வெட்ட தலை பேன்

இறப்பினில் கண் விழிப்பேன் 

மரங்களில் நான் ஏழை 

எனக்கு வைத்த பெயர் வாழை"

போன்ற வரிகள் இவர் போக்கினைக் காட்டும்.

* வயதாகி போனதால் தர்ம ஸ்தூபிகள் தள்ளுகின்றன என்று கூறியவர் கவிஞர் மு. மேத்தா.

*  "மரங்களில் நான் ஏழை எனக்கு வைத்த பெயர் வாழை" என்று கூறியவர் கவிஞர் மு. மேத்தா.

* விழிகள் நட்சத்திரங்களை வருடினாள் விரல்கள் என்னவோ ஜன்னல் கம்பிகளோடுதான்  என்று கூறியவர் கவிஞர் மு. மேத்தா.








Comments

Popular posts from this blog

சீறாப்புராணம் - உமறுப் புலவர்.

  தமிழில் எழுதப்பட்ட தலைசிறந்த இஸ்லாமிய இலக்கியம் "சீறாப்புராணம்" ஆகும். சீராபுராணம் இறைத்தூதர் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றினை மையமாகக்கொண்டு தமிழ் மரபுகளைப் பின்பற்றி எழுதப்பட்ட ஒரு காவியம் ஆகும். இத்தகைய நூலை இயற்றியவர் பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த உமறுப் புலவர் இயற்றிய நூல்தான் சீறாப்புராணம். மேலும் உமறுப்புலவர் அதே காலத்தில் வாழ்ந்த சீதக்காதியின் ஆதரவைப் பெற்றார். உமறுப் புலவர் வள்ளல் சீதக்காதியின் பெருமையை " செத்தும் கொடுத்தான் சீதக்காதி" என  சொற்றொடர் விளக்கும். சீறாப்புராணம் அமைவிடம்: சீராபுராணம் இரண்டு பாகங்களாக அமைந்துள்ளது. முதல் பாகத்தில் 44 படலங்களும், இரண்டாம் பாகத்தில் 47 பக்கங்களும் உள்ளன. சீறாப் புராணத்தில் இடம் பெறும் முதல் பாகம்: முதல் பாகத்தில் 3 காண்டங்கள் உள்ளன. இப்பாகத்தில் மொத்தம் 44 படலங்கள் உள்ளன. 1. விலாதத்துக் காண்டம். 2. நுபுவ்வத்துக் காண்டம். 3. ஷீலாஷது காண்டம். * விலாதத்துக் காண்டம்: 1. கடவுள் வாழ்த்துப் படலம் 2. நாட்டுப் படலம் 3. தலைமுறைப் படலம் 4. நபியவதாரப் படலம் 5. அலிமா முலையூர் படலம் 6. இலாஞ்சனை தரித்த படலம் 7. ...

தமிழ்விடு தூது - எத்தனை கண்ணிகள்.

தமிழ்விடு தூது - ஆசிரியர் பெயர் தெரியவில்லை. தமிழ் விடு தூது நூல் அமைப்பு: தமிழ் சிற்றிலக்கிய வகைகளுள் தூது என்பதும் ஒருவகை இலக்கியமாகும். இது வாயில் இலக்கியம், சந்து இலக்கியம் என்று வேறுு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இது 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று ஆகும். தமிழ்விடு தூது பாடல் அமைந்த விதம்: தமிழ்விடு தூது மதுரையில் கோயில் கொண்டிருக்கும் சொக்கநாதர் மீது காதல் கொண்ட பெண் ஒருத்தி தன் காதலி கூறி வருமாறு தமிழ் மொழியை தூது விடுவதாக அமைந்துள்ளதுதான் தமிழ்விடு தூது. தமிழ்விடு தூது சிறப்பு; தமிழின் பெருமையை பாட கவிஞர்கள் கையாளும் உத்திகள் பற்பல. கவிதை அதற்கு ஒரு கருவி, கிளி, அன்னம், விரலி, பணம், தந்தி என்று பல தூதுு வாயில்களை அறிந்துள்ளோம். ஆனால் தமிழையே தூதுப் பொருளாக்கிிி உள்ளது தமிழ்விடு தூது. தமிழின்   இனிமை,இலக்கிய வளம், சுவை,அழகு, திறன், தகுதி, ஆகியவற்றைை இச்சிற்றிலக்கியத்தில் தெளிவாக விளக்கியுள்ளது. தமிழ்விடு தூது முக்கிய வினா விடை குறிப்புகள்: * தமிழ்விடு தூது ஒரு சிற்றிலக்கிய வகையைச் சார்ந்தது. * தமிழ்விடு தூது வில் இடம்பெறும் கண்ணி என்பதன் பொருள் இரண்டு கண்களை போல் இ...

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்- அறநூல்கள்-நீதி நூல்கள் - புறநூல்கள் யாவை.

  பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அற நூல்கள் (அல்லது) நீதி நூல்கள் பின்வருமாறு: * நாலடியார் * நான்மணிக்கடிகை * இன்னா நாற்பது * இனியவை நாற்பது * திருக்குறள் * திரிகடுகம் * ஆசாரக்கோவை * பழமொழி நானூறு * சிறுபஞ்சமூலம் * முதுமொழிக்காஞ்சி * ஏலாதி பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அக நூல்கள் (அல்லது) அகத்திணை நூல்கள் பின்வருமாறு: * கார் நாற்பது * ஐந்திணை ஐம்பது * ஐந்திணை எழுபது * திணைமொழி ஐம்பது * திணைமாலை நூற்றைம்பது * கைந்நிலை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் புற நூல்(அல்லது) புறத்திணை நூல்கள் பின்வருமாறு: * களவழி நாற்பது பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் மற்றும் பாடல்களின் எண்ணிக்கை: நூல்கள்                                       பாடல்கள் நாலடியார்                                  400                நான்மணிக்கடிகை                ...