Skip to main content

மரபுக் கவிதை - வாணிதாசன் TNPSC GROUP 4

 மரபுக்கவிதை  - வாணிதாசன் : 

தோற்றம்: 22-07-1915  மறைவு: 07-08-1974


1. வாணிதாசன் வாழ்க்கை குறிப்பு:

புதுச்சேரி மாநிலத்தை அடுத்துள்ள வில்லியனூரில் ,22-07-1915  ஆம் ஆண்டுு  தெலுங்கை தாய்மொழியாக கொண்ட அரங்க. திருகாமு மற்றும் துளசியம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தவர் தான் கவிஞர் வாணிதாசன். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் அரங்கசாமி என்ற எத்திராசலு. மேலும் இவர் ""ரமி"" என்ற புனைப் பெயர் கொண்டவர். 

* வாணிதாசன் பாவேந்தர் பாரதிதாசனிடம் தொடக்கக் கல்வி பெற்றவர் 

* வாணிதாசனின் பாடல்கள் சாகித்திய அகாதெமி வெளியிட்ட "தமிழ் கவிதை களஞ்சியம்" என்ற நூலிலும் , தென் மொழிகள் புத்தக வெளியீட்டுக் கழகம் வெளியிட்ட  "புதுத்தமிழ் கவிமலர்கள்" என்ற நூலிலும்  மற்றும் பற்பல தொகுப்பு நூல்களிலும் இடம் பெற்றுள்ளன. 

* வாணிதாசன் "தமிழ் பிரெஞ்சு கையகர முதலி " என்ற நூலை வெளியிட்டார். 

* பிரெஞ்சுக் குடியரசு தலைவர் இவருக்கு "செவ்வா லியர் விருது வழங்கிப் பெருமைப்படுத்தியது"

* வாணிதாசனின் முதல் பாடல் பாரதி நாள்.


2. வாணிதாசனின் சிறப்பு பெயர்கள்:

* புதுமைக் கவிஞர்

* பாவலரேறு

* பாவலர் மணி

* தமிழ்நாட்டுத் தாகூர் ( மயிலை சிவமுத்து)

தமிழ்நாட்டின் வேர்ட்ஸ்வொர்த் 



3. வாணிதாசன் இயற்றிய நூல்கள்:

* தமிழச்சி

* கொடி முல்லை

* எழிலோவியம்

* தீர்த்த யாத்திரை

* இன்ப இலக்கியம்

* பொங்கல் பரிசு

* இரவு வரவில்லை

* சிரித்த நுணா

* வாணிதாசன் கவிதைகள்

* பட்டாரங்கா பாடல்கள் 

* இனிக்கும் பாட்டு

* தொடுவானம்

* பாட்டு பிறக்குமடா (தமிழக அரசு பரிசு கிடைத்தது)

* பெரிய இடத்துச் செய்தி

* பொங்கல் பரிசு

* வாணிதாசன் கவிதைகள் முதல் தொகுதி

* வாணிதாசன் கவிதைகள் இரண்டாம் தொகுதி

* வாணிதாசன் கவிதைகள் மூன்றாம் தொகுதி 



4. வாணிதாசனின் புனைப்பெயர்:

                      ரமி 



5. வாணிதாசன் பற்றிய சிறப்பு :

* பாரதிதாசன் பரம்பரையில் மூத்தவர்

* பாவேந்தர் பாரதிதாசன் பரிசு பெற்றவர்

* மயிலை சிவமுத்து வால் தமிழ்நாட்டின் தாகூர் என அழைக்கப்பட்டார்.

* சிலேடை, இடக்கரடக்கல் அமைத்து பாடுவதில் வல்லவர். 

* குற்றியலுகரத்தின் ஒலியை உவமையாக கையாண்ட முதல் கவிஞர் வாணிதாசன். 


** பாரதிதாசன் பெயரை உரைத்திட        பாட்டு பிறக்குமடா .







Comments

Popular posts from this blog

சீறாப்புராணம் - உமறுப் புலவர்.

  தமிழில் எழுதப்பட்ட தலைசிறந்த இஸ்லாமிய இலக்கியம் "சீறாப்புராணம்" ஆகும். சீராபுராணம் இறைத்தூதர் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றினை மையமாகக்கொண்டு தமிழ் மரபுகளைப் பின்பற்றி எழுதப்பட்ட ஒரு காவியம் ஆகும். இத்தகைய நூலை இயற்றியவர் பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த உமறுப் புலவர் இயற்றிய நூல்தான் சீறாப்புராணம். மேலும் உமறுப்புலவர் அதே காலத்தில் வாழ்ந்த சீதக்காதியின் ஆதரவைப் பெற்றார். உமறுப் புலவர் வள்ளல் சீதக்காதியின் பெருமையை " செத்தும் கொடுத்தான் சீதக்காதி" என  சொற்றொடர் விளக்கும். சீறாப்புராணம் அமைவிடம்: சீராபுராணம் இரண்டு பாகங்களாக அமைந்துள்ளது. முதல் பாகத்தில் 44 படலங்களும், இரண்டாம் பாகத்தில் 47 பக்கங்களும் உள்ளன. சீறாப் புராணத்தில் இடம் பெறும் முதல் பாகம்: முதல் பாகத்தில் 3 காண்டங்கள் உள்ளன. இப்பாகத்தில் மொத்தம் 44 படலங்கள் உள்ளன. 1. விலாதத்துக் காண்டம். 2. நுபுவ்வத்துக் காண்டம். 3. ஷீலாஷது காண்டம். * விலாதத்துக் காண்டம்: 1. கடவுள் வாழ்த்துப் படலம் 2. நாட்டுப் படலம் 3. தலைமுறைப் படலம் 4. நபியவதாரப் படலம் 5. அலிமா முலையூர் படலம் 6. இலாஞ்சனை தரித்த படலம் 7. ...

தமிழ்விடு தூது - எத்தனை கண்ணிகள்.

தமிழ்விடு தூது - ஆசிரியர் பெயர் தெரியவில்லை. தமிழ் விடு தூது நூல் அமைப்பு: தமிழ் சிற்றிலக்கிய வகைகளுள் தூது என்பதும் ஒருவகை இலக்கியமாகும். இது வாயில் இலக்கியம், சந்து இலக்கியம் என்று வேறுு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இது 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று ஆகும். தமிழ்விடு தூது பாடல் அமைந்த விதம்: தமிழ்விடு தூது மதுரையில் கோயில் கொண்டிருக்கும் சொக்கநாதர் மீது காதல் கொண்ட பெண் ஒருத்தி தன் காதலி கூறி வருமாறு தமிழ் மொழியை தூது விடுவதாக அமைந்துள்ளதுதான் தமிழ்விடு தூது. தமிழ்விடு தூது சிறப்பு; தமிழின் பெருமையை பாட கவிஞர்கள் கையாளும் உத்திகள் பற்பல. கவிதை அதற்கு ஒரு கருவி, கிளி, அன்னம், விரலி, பணம், தந்தி என்று பல தூதுு வாயில்களை அறிந்துள்ளோம். ஆனால் தமிழையே தூதுப் பொருளாக்கிிி உள்ளது தமிழ்விடு தூது. தமிழின்   இனிமை,இலக்கிய வளம், சுவை,அழகு, திறன், தகுதி, ஆகியவற்றைை இச்சிற்றிலக்கியத்தில் தெளிவாக விளக்கியுள்ளது. தமிழ்விடு தூது முக்கிய வினா விடை குறிப்புகள்: * தமிழ்விடு தூது ஒரு சிற்றிலக்கிய வகையைச் சார்ந்தது. * தமிழ்விடு தூது வில் இடம்பெறும் கண்ணி என்பதன் பொருள் இரண்டு கண்களை போல் இ...

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்- அறநூல்கள்-நீதி நூல்கள் - புறநூல்கள் யாவை.

  பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அற நூல்கள் (அல்லது) நீதி நூல்கள் பின்வருமாறு: * நாலடியார் * நான்மணிக்கடிகை * இன்னா நாற்பது * இனியவை நாற்பது * திருக்குறள் * திரிகடுகம் * ஆசாரக்கோவை * பழமொழி நானூறு * சிறுபஞ்சமூலம் * முதுமொழிக்காஞ்சி * ஏலாதி பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அக நூல்கள் (அல்லது) அகத்திணை நூல்கள் பின்வருமாறு: * கார் நாற்பது * ஐந்திணை ஐம்பது * ஐந்திணை எழுபது * திணைமொழி ஐம்பது * திணைமாலை நூற்றைம்பது * கைந்நிலை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் புற நூல்(அல்லது) புறத்திணை நூல்கள் பின்வருமாறு: * களவழி நாற்பது பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் மற்றும் பாடல்களின் எண்ணிக்கை: நூல்கள்                                       பாடல்கள் நாலடியார்                                  400                நான்மணிக்கடிகை                ...