Skip to main content

சி. சு. செல்லப்பா (வாடிவாசல் நாவல்) வாழ்க்கை வரலாறு..

 சி. சு. செல்லப்பா 


தோற்றம் :29-09-1912                                              மறைவு : 18-12-1998


சி. சு. செல்லப்பா ஒரு எழுத்தாளர் மற்றும் இலக்கிய விமர்சகர்." எழுத்து" என்ற பத்திரிக்கையை தொடங்கி நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி. சு. செல்லப்பா ஆவார்.

பல நல்ல எழுத்தாளர்களையும், விமர்சகர்களையும் தன் எழுத்து பத்திரிகையின் மூலம் ஊக்குவித்தவர். செல்லப்பா சிறந்த விமர்சகர்களாலும், எழுத்தாளர்களாகவும் கருதப்படும் வெங்கட்சமிநாதன், நா.முத்துசாமி , பிரமீள் மற்றும் பல எழுத்தாளர்கள் சி சு செல்லப்பாவின் ஆல் ஊக்குவிக்கப்பட்வர்கள்.

தமிழின் சிறந்த நாவல்களாக கருதப்படும் வாடிவாசல், சுதந்திர தாகம் போன்றவற்றை எழுதியவர் செல்லப்பா காந்தியக் கொள்கைகளில் மிகுந்த பற்றும் ஈடுபாடும் கொண்டவர் திகழ்ந்தவர். 


சி. சு. செல்லப்பா வாழ்க்கை வரலாறு:

தேனி மாவட்டம் சின்னமனூரில் 1912 ஆம் ஆண்டு செப்டம்பர் 29ஆம் தேதி சி சு செல்லப்பா தன் தாய் மாமாவின் ஊரான வத்தலகுண்டில் வளர்ந்தார்.

மதுரைக் கல்லூரியில் பி.ஏ படிப்பினை முடித்தார். அப்போதே மகாத்மா காந்தியின் கொள்கையில்  ஏற்பட்ட ஈடுபாட்டால் விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டார். 

"சுதந்திரச் சங்கு" இதழில் எழுதத் தொடங்கிய செல்லப்பாவுக்கு "மணிக்கொடி" இதழ் கை கொடுத்தது.

 சரசாவின் பொம்மை எனும் சிறுகதை சிறந்த எழுத்தாளர் என்ற தகுதியை சி. சு. செல்லப்பா வுக்கு அளித்தது.

1937 ஆம் ஆண்டு சென்னைக்கு வந்த சி. சு. செல்லப்பா மீனாட்சி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

1947 ஆம் ஆண்டு முதல் 1953 ஆம் ஆண்டு வரை தினமணி கதிரில் பிரபல எழுத்தாளர் துமிலனுக்கு உறுதுணையாக பணியாற்றினார். புதிய எழுத்தாளர்களை சி. சு. செல்லப்பா அறிமுகப்படுத்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 


சி. சு. செல்லப்பா தன் வாழ்நாளில் விமர்சக எழுத்தாளராக அவர் ஆற்றிய பங்கு:

சிறுகதை எழுத்தாளராக இருந்த சி. சு. செல்லப்பா விமர்சகர்களில் ஈடுபடலானார். விமர்சனத்துக்கு தனி இதழ் தொடங்க எண்ணினார் பத்திரிகைகளில் பணி புரிந்த அனுபவத்தால் தன் கொள்கைகளை வலியுறுத்தி எழுத்து என்ற இதழைத் தொடங்கினார். பலவித இன்னல்களுக்கு இடையே 1970ஆம் ஆண்டு வரை மொத்தம் 119 இதழ்களை அவர் வெளியிட்டார் ஆனால் 112 இதழ்கள் மிக சிரமப்பட்டு வெளிக்கொண்டுவந்து "எழுத்து" காலாண்டு இதழாக மாற்றப்பட்டது 119 இதழுடன் எழுதப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

சி. சு. செல்லப்பா 29 நூல்களை எழுதி வெளியிட்டிருக்கிறார்.

குறும் புதினம் என்றால் என்ன:

அளவில் சிறுகதையை விட நீளமாகவும் புதினத்தை விட சிறியதாகவும் இருக்கும் கதை தான் குறும் புதினம் அல்லது சிறுகதைக்கும் தினத்திற்கும் இடைப்பட்ட வடிவம் அல்லது குறுநாவல் என்று அழைக்கப்படுகிறது. 


சி. சு. செல்லப்பாவின் இலக்கணத்தின் பல்வேறு தளங்களில் பங்களிப்பு:

1. சிறுகதை

2. புதினம்

3. விமர்சனம் 

4. மொழிபெயர்ப்பு 


சி. சு. செல்லப்பா பணியாற்றிய இதழ்கள்:

1. சந்திரோதயம்

2. தினமணி ஆகிய இதழ்களில் உதவி ஆசிரியராக பணிபுரிந்தார்.

3. எழுத்து என்ற இதழைத் தொடங்கி நவீன தமிழ் இலக்கிய  மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர்.


சி. சு. செல்லப்பாவின் குறிப்பிடத்தக்க படைப்புகள்:

1. வாடிவாசல்

2. சுதந்திரதாகம்

3. ஜீவனாம்சம்

4. பி எஸ் ராமையாவின் சிறுகதை பாணி 

5. தமிழ் சிறுகதை பிறக்கிறது


 1. சிறுகதை தொகுதிகள்:

* சரசாவின் பொம்மை

* மணல் வீடு

* சி சு செல்லப்பாவின் கதைகள் 7 தொகுதிகள் 

2. குறும் புதினம்:

வாடிவாசல் 

3. புதினம்

* ஜீவனாம்சம்

 * சுதந்திர தாகம் 

4. நாடகம்

* முறைப்பெண்

5. கவிதைத் தொகுதி

* மாற்று இதயம்

6. குறுங்காப்பியம்

* இன்று நீ இருந்தால்

* 2000 வரிகளை கொண்ட நெடுங்கவிதை இல் மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைக்கும் இன்னூல் எழுத்து ஏற்றின் 114வது இதழில் வெளிவந்தது.

சி. சு. செல்லப்பா  படைப்பிற்கு கிடைத்த விருது:

இவரது "சுதந்திர தாகம்" புதினத்திற்கு 2001ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகதமி விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.


சி. சு. செல்லப்பாவின் மறைவு:

சி. சு. செல்லப்பா 1998ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் தேதி இவ்வுலகை விட்டு இயற்கை எய்தினார்.

சி. சு. செல்லப்பாவின் புகழ்பெற்ற வாடிவாசல் கவிதை புத்தகத்தைப் பற்றி ஒரு சிறு விளக்கம்:


சி. சு. செல்லப்பா எழுதிய வாடிவாசல் எனும் நாவலில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை அதன் அருகில் இருந்து பார்ப்பது போன்ற நெருக்கமான உணர்வை தத்துரூபமாக சொல்லப்பட்டுள்ளது. விறுவிறுப்பான முறையில் மிக இயல்பாக ஒரே நாளில் அந்த மாலை நேரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு அதை ஒட்டிய நிகழ்ச்சிகளையும் மட்டுமே பிரதானமாகக் கொண்டு 70 பக்கங்கள் மட்டுமே கொண்ட இந்த நாவலில் அதன் சொல்லப்பட்ட விஷயங்களும் ஆழமும் நேர்த்தியும் அதிகம் வாசிக்கும். அனைவரையும் அந்த சூழலுக்கு அழைத்துச் செல்லக் கூடிய அந்த வட்டார வழக்கு மொழி நடை ஒவ்வொருவரும் கண்டிப்பாக படிக்க வேண்டிய நாவல் என்பதை மிக உறுதியாக சொல்ல முடியும்.



Comments

Popular posts from this blog

சீறாப்புராணம் - உமறுப் புலவர்.

  தமிழில் எழுதப்பட்ட தலைசிறந்த இஸ்லாமிய இலக்கியம் "சீறாப்புராணம்" ஆகும். சீராபுராணம் இறைத்தூதர் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றினை மையமாகக்கொண்டு தமிழ் மரபுகளைப் பின்பற்றி எழுதப்பட்ட ஒரு காவியம் ஆகும். இத்தகைய நூலை இயற்றியவர் பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த உமறுப் புலவர் இயற்றிய நூல்தான் சீறாப்புராணம். மேலும் உமறுப்புலவர் அதே காலத்தில் வாழ்ந்த சீதக்காதியின் ஆதரவைப் பெற்றார். உமறுப் புலவர் வள்ளல் சீதக்காதியின் பெருமையை " செத்தும் கொடுத்தான் சீதக்காதி" என  சொற்றொடர் விளக்கும். சீறாப்புராணம் அமைவிடம்: சீராபுராணம் இரண்டு பாகங்களாக அமைந்துள்ளது. முதல் பாகத்தில் 44 படலங்களும், இரண்டாம் பாகத்தில் 47 பக்கங்களும் உள்ளன. சீறாப் புராணத்தில் இடம் பெறும் முதல் பாகம்: முதல் பாகத்தில் 3 காண்டங்கள் உள்ளன. இப்பாகத்தில் மொத்தம் 44 படலங்கள் உள்ளன. 1. விலாதத்துக் காண்டம். 2. நுபுவ்வத்துக் காண்டம். 3. ஷீலாஷது காண்டம். * விலாதத்துக் காண்டம்: 1. கடவுள் வாழ்த்துப் படலம் 2. நாட்டுப் படலம் 3. தலைமுறைப் படலம் 4. நபியவதாரப் படலம் 5. அலிமா முலையூர் படலம் 6. இலாஞ்சனை தரித்த படலம் 7. ...

தமிழ்விடு தூது - எத்தனை கண்ணிகள்.

தமிழ்விடு தூது - ஆசிரியர் பெயர் தெரியவில்லை. தமிழ் விடு தூது நூல் அமைப்பு: தமிழ் சிற்றிலக்கிய வகைகளுள் தூது என்பதும் ஒருவகை இலக்கியமாகும். இது வாயில் இலக்கியம், சந்து இலக்கியம் என்று வேறுு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இது 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று ஆகும். தமிழ்விடு தூது பாடல் அமைந்த விதம்: தமிழ்விடு தூது மதுரையில் கோயில் கொண்டிருக்கும் சொக்கநாதர் மீது காதல் கொண்ட பெண் ஒருத்தி தன் காதலி கூறி வருமாறு தமிழ் மொழியை தூது விடுவதாக அமைந்துள்ளதுதான் தமிழ்விடு தூது. தமிழ்விடு தூது சிறப்பு; தமிழின் பெருமையை பாட கவிஞர்கள் கையாளும் உத்திகள் பற்பல. கவிதை அதற்கு ஒரு கருவி, கிளி, அன்னம், விரலி, பணம், தந்தி என்று பல தூதுு வாயில்களை அறிந்துள்ளோம். ஆனால் தமிழையே தூதுப் பொருளாக்கிிி உள்ளது தமிழ்விடு தூது. தமிழின்   இனிமை,இலக்கிய வளம், சுவை,அழகு, திறன், தகுதி, ஆகியவற்றைை இச்சிற்றிலக்கியத்தில் தெளிவாக விளக்கியுள்ளது. தமிழ்விடு தூது முக்கிய வினா விடை குறிப்புகள்: * தமிழ்விடு தூது ஒரு சிற்றிலக்கிய வகையைச் சார்ந்தது. * தமிழ்விடு தூது வில் இடம்பெறும் கண்ணி என்பதன் பொருள் இரண்டு கண்களை போல் இ...

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்- அறநூல்கள்-நீதி நூல்கள் - புறநூல்கள் யாவை.

  பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அற நூல்கள் (அல்லது) நீதி நூல்கள் பின்வருமாறு: * நாலடியார் * நான்மணிக்கடிகை * இன்னா நாற்பது * இனியவை நாற்பது * திருக்குறள் * திரிகடுகம் * ஆசாரக்கோவை * பழமொழி நானூறு * சிறுபஞ்சமூலம் * முதுமொழிக்காஞ்சி * ஏலாதி பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அக நூல்கள் (அல்லது) அகத்திணை நூல்கள் பின்வருமாறு: * கார் நாற்பது * ஐந்திணை ஐம்பது * ஐந்திணை எழுபது * திணைமொழி ஐம்பது * திணைமாலை நூற்றைம்பது * கைந்நிலை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் புற நூல்(அல்லது) புறத்திணை நூல்கள் பின்வருமாறு: * களவழி நாற்பது பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் மற்றும் பாடல்களின் எண்ணிக்கை: நூல்கள்                                       பாடல்கள் நாலடியார்                                  400                நான்மணிக்கடிகை                ...