Skip to main content

கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை - வாழ்க்கை வரலாறு

 கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை வாழ்க்கை வரலாறு:


கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை 1876 ஆம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து நான்குு மைல் தொலைவில் உள்ள தேரூர் எனும் சிற்றூரில் ஜூலை மாதம் 27 ஆம் நாள் திங்கட்கிழமை  "சிவதாணுுுு பிள்ளை என்பவருக்கும் ஆதிலட்சுமிி அம்மையாருக்கும் மூன்றாவது குழந்தையாக பிறந்தார் "கவிமணிிிிி தேசிய விநாயகம் பிள்ளை".


ஆசிரியர் பணி:

கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை நாகர்கோயிலில் உள்ள கோட்டார் ஆரம்பப்பள்ளி, நாகர்கோவில் ஆசிரியர் பயிற்சி பள்ளி மற்றும் திருவனந்தபுரம் பெண்கள் கல்லூரியில் 36 ஆண்டுகள் ஆசிரியராக பணிபுரிந்தார்.


குழந்தைகளுக்கான இலக்கியப் பணி:

தமிழில் குழந்தைகளுக்கான முதன்முதலில் பாடல்களை எழுதிய இவர்.1938 ஆம் ஆண்டு வெளிவந்த மலரும் மாலையும் தொகுதியில் 25 இ க்கும் மேற்பட்ட குழந்தை பாடல்கள்,7 கதைப்பாடல்கள் இடம்பெற்றிருந்தது.  தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு எனும்  பாடல் இன்றளவும் பேசப்படுகிறது.


சிறந்த மொழிபெயர்ப்பாளர்:

1. எட்வின் அர்னால்டின் "ஆசிய ஜோதி"  எனும் நூலை தமிழில் தழுவி எழுதினார்.

2. பாரசீக கவிஞர் உமர் கய்யாம் நூலை தமிழில்  ரூபாயத் என்ற தலைப்பில் மொழிபெயர்த்து தழுவி எழுதினார்.

3. மும்மொழிப் புலமை வாய்ந்தவர்.


ஆராய்ச்சியில் பங்கு:

1. ஆராய்ச்சியிலும் தேசிய விநாயகம் பிள்ளை பல்வேறு பங்கினை அளித்துள்ளார்.

2. 1922 இல் "மனோன்மணியம் மறுபிறப்பு" எனும் திறனாய்வுு கட்டுரை எழுதியுள்ளார். 

3. காந்தளூர் சாலை எனும் ஆய்வுு   நூலினை எழுதியுள்ளார்.


கவிமணி பெற்ற விருதுகள்:

1. 1954 இல் தேரூரில் நினைவு இல்லம் அமைக்கப்பட்டுள்ளது.


2. இந்திய அரசு அக்டோபர் 2005 ஆம் ஆண்டு இந்திய அரசு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.


கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை இயற்றிய நூல்கள்:

1. அழகம்மை ஆசிரிய விருத்தம்                     ( கவிமணி இயற்றிய முதல் நூல்)

2. ஆசிய ஜோதி - 1941 ( அர்னால்டு எழுதிய "லைட் ஆப் ஏசியா" எனும் நூலின் மொழிபெயர்ப்பு நூல்)

3. மலரும் மாலையும் - 1938 ( கவிதை நூல்) 

4. மருமக்கள் வழி மான்மியம் - 1942             ( நகைச்சுவை நூல்)

5. கதர் பிறந்த கதை - 1947

6. உமர்கய்யாம் பாடல்கள் - 1945                     ( மொழிபெயர்ப்பு நூல்)

7. தேசிய கீர்த்தனங்கள்

8. குழந்தை செல்வம்

9. கவிமணியின் உரைமணிகள்

10. காந்தர் சாலை ( வரலாற்று நூல்) 

11. தீண்டாதார் விண்ணப்பம் 


கவிமணியின் சிறப்பு பெயர்கள்:

1. கவிமணி

2. குழந்தை கவிஞர்

3. தேவி

4. நாஞ்சில் நாட்டுக் கவிஞர்

5. தழுவல் கவிஞர் 


கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையின் முக்கிய பாடல் வரிகள்:

""மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா ""









Comments

Popular posts from this blog

சீறாப்புராணம் - உமறுப் புலவர்.

  தமிழில் எழுதப்பட்ட தலைசிறந்த இஸ்லாமிய இலக்கியம் "சீறாப்புராணம்" ஆகும். சீராபுராணம் இறைத்தூதர் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றினை மையமாகக்கொண்டு தமிழ் மரபுகளைப் பின்பற்றி எழுதப்பட்ட ஒரு காவியம் ஆகும். இத்தகைய நூலை இயற்றியவர் பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த உமறுப் புலவர் இயற்றிய நூல்தான் சீறாப்புராணம். மேலும் உமறுப்புலவர் அதே காலத்தில் வாழ்ந்த சீதக்காதியின் ஆதரவைப் பெற்றார். உமறுப் புலவர் வள்ளல் சீதக்காதியின் பெருமையை " செத்தும் கொடுத்தான் சீதக்காதி" என  சொற்றொடர் விளக்கும். சீறாப்புராணம் அமைவிடம்: சீராபுராணம் இரண்டு பாகங்களாக அமைந்துள்ளது. முதல் பாகத்தில் 44 படலங்களும், இரண்டாம் பாகத்தில் 47 பக்கங்களும் உள்ளன. சீறாப் புராணத்தில் இடம் பெறும் முதல் பாகம்: முதல் பாகத்தில் 3 காண்டங்கள் உள்ளன. இப்பாகத்தில் மொத்தம் 44 படலங்கள் உள்ளன. 1. விலாதத்துக் காண்டம். 2. நுபுவ்வத்துக் காண்டம். 3. ஷீலாஷது காண்டம். * விலாதத்துக் காண்டம்: 1. கடவுள் வாழ்த்துப் படலம் 2. நாட்டுப் படலம் 3. தலைமுறைப் படலம் 4. நபியவதாரப் படலம் 5. அலிமா முலையூர் படலம் 6. இலாஞ்சனை தரித்த படலம் 7. ...

தமிழ்விடு தூது - எத்தனை கண்ணிகள்.

தமிழ்விடு தூது - ஆசிரியர் பெயர் தெரியவில்லை. தமிழ் விடு தூது நூல் அமைப்பு: தமிழ் சிற்றிலக்கிய வகைகளுள் தூது என்பதும் ஒருவகை இலக்கியமாகும். இது வாயில் இலக்கியம், சந்து இலக்கியம் என்று வேறுு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இது 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று ஆகும். தமிழ்விடு தூது பாடல் அமைந்த விதம்: தமிழ்விடு தூது மதுரையில் கோயில் கொண்டிருக்கும் சொக்கநாதர் மீது காதல் கொண்ட பெண் ஒருத்தி தன் காதலி கூறி வருமாறு தமிழ் மொழியை தூது விடுவதாக அமைந்துள்ளதுதான் தமிழ்விடு தூது. தமிழ்விடு தூது சிறப்பு; தமிழின் பெருமையை பாட கவிஞர்கள் கையாளும் உத்திகள் பற்பல. கவிதை அதற்கு ஒரு கருவி, கிளி, அன்னம், விரலி, பணம், தந்தி என்று பல தூதுு வாயில்களை அறிந்துள்ளோம். ஆனால் தமிழையே தூதுப் பொருளாக்கிிி உள்ளது தமிழ்விடு தூது. தமிழின்   இனிமை,இலக்கிய வளம், சுவை,அழகு, திறன், தகுதி, ஆகியவற்றைை இச்சிற்றிலக்கியத்தில் தெளிவாக விளக்கியுள்ளது. தமிழ்விடு தூது முக்கிய வினா விடை குறிப்புகள்: * தமிழ்விடு தூது ஒரு சிற்றிலக்கிய வகையைச் சார்ந்தது. * தமிழ்விடு தூது வில் இடம்பெறும் கண்ணி என்பதன் பொருள் இரண்டு கண்களை போல் இ...

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்- அறநூல்கள்-நீதி நூல்கள் - புறநூல்கள் யாவை.

  பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அற நூல்கள் (அல்லது) நீதி நூல்கள் பின்வருமாறு: * நாலடியார் * நான்மணிக்கடிகை * இன்னா நாற்பது * இனியவை நாற்பது * திருக்குறள் * திரிகடுகம் * ஆசாரக்கோவை * பழமொழி நானூறு * சிறுபஞ்சமூலம் * முதுமொழிக்காஞ்சி * ஏலாதி பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அக நூல்கள் (அல்லது) அகத்திணை நூல்கள் பின்வருமாறு: * கார் நாற்பது * ஐந்திணை ஐம்பது * ஐந்திணை எழுபது * திணைமொழி ஐம்பது * திணைமாலை நூற்றைம்பது * கைந்நிலை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் புற நூல்(அல்லது) புறத்திணை நூல்கள் பின்வருமாறு: * களவழி நாற்பது பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் மற்றும் பாடல்களின் எண்ணிக்கை: நூல்கள்                                       பாடல்கள் நாலடியார்                                  400                நான்மணிக்கடிகை                ...