Skip to main content

ராசராச சோழன் உலா - ஒட்டக்கூத்தர்.

 


ராசராச சோழன் உலா  - ஒட்டக்கூத்தர்.

ஒட்டக்கூத்தர் இயற்றிய மூன்று உலாக்கள் யாவை:

1. விக்கிரம சோழன் உலா

2. குலோத்துங்க சோழன் உலா

3. ராசராச சோழன் உலா 

மேற்கூறிய மூன்று உலாக்கள் பாட்டன், தந்தை, மகன் போன்றோரை பற்றி பாடுவது. ஆகிய மூவரை பாடுவதால் "மூவருலா"என்றுுு அழைக்கப்படுகிறதுு. 


ராச ராச சோழன் உலா தெளிவான விளக்கம் பின்வருமாறு காணலாம்:

இராசராச சோழனுலா இந் நூலினை இயற்றியவர் "கவிச்சக்கரவர்த்தி என்று அழைக்கப்படும் ஒட்டக்கூத்தர்" ஆவார். கவிசக்கரவர்த்தி எனும் கல்வெட்டின் மூலம் இந்நூலை ஒட்டக்கூத்தர் இயற்றப்பட்டதாக வரலாற்றில் கூறுகிறதுு. 

இராசராச சோழனுலா சிறந்த கவி நயம் கொண்ட பாடல்களை கொண்டுள்ளதால் இப்பாடல்களை கண்ணிகள் என்றுு அழைக்கப்படும். 

கண்ணிகள் - இரண்டு அடிகளைக் கொண்டது.


ராசராச சோழன் உலா நூல் குறிப்பு:

ராசராச சோழன் உலாவில் 391 கண்ணிகள் உள்ளன. இந்நூலைை அரங்கேற்றும் போதுு கேட்ட ராசராசன்  ஒவ்வொரு கன்னிகளுக்கு ஓர் ஆயிரம் பொன் பரிசாகத் தந்தான் என்பது வரலாறு.

இரண்டாம் இராசராச சோழன் இரண்டாம் குலோத்துங்கனின் மகன் ஆவார். தக்கயாகப்பரணி உருவாக காரணம் இவனே ஆகும்.


இராசராச சோழனுலா வரலாறு:

இரண்டாம் இராசராச சோழன் காலத்தில் சேரர்கள் உடன் வஞ்சி மாநகரில் கடும் போர் நிகழ்ந்ததாக தகைய பரணியில் அறியலாம். ராசராச சோழன் உலாவில் சோழர்களுக்கு செலுத்த வேண்டிய வரியை சேரன் கட்ட மறுத்ததால் சோழர்கள் சேரன் மீது படை எடுத்ததாக இந்நூல் கூறுகிறது.

இத்தகைய போர் வஞ்சி மாநகரில் நிகழ்ந்ததாகவும், சோழர் படைதணை பல்லவராயன் பெருமாள் நம்பி தலைமை தாங்கி போரை வென்றுள்ளார் என்பது வரலாறு.


காவிரி பிரச்சினை தோன்றிய காலம் இவன் காலம் தான் என்று வரலாறு ராசராச சோழன் உலாவில் கூறுகிறது.

"சுழியிட்ட காவிரிக்கு சோணாடு வாழ 

வழியிட்ட வால் காண வாரீர்"

மேற்கூறிய வரிகளின் மூலம் காவிரி பிரச்சனையை பற்றி தெளிவாக அறிந்து கொள்ளலாம். 


இராசராச சோழனுலா முக்கிய வினா விடை குறிப்புகள்:

1. பிரபந்தம் எனும்  வடசொல்லுக்குு நன்கு கட்டப்பட்டது என்று பொருளாகும்.

2. சிற்றிலக்கியங்களின்் இலக்கியத்தைை  விளக்கிி கூறும் நூல் பாட்டியல் நூல்கள்.

3.  உலா என்பது  சிற்றிலக்கிய வகைகளில் ஒன்றாகும்.

4. ராசராசசோழன் உலாவை பாடியவர் ஒட்டக்கூத்தர்.

5. உலா என்பதற்கு பவனி வரல் எனப்படும்.

6.  ஒட்டக்கூத்தரின் இயற்பெயர் கூத்தர்.

7.   ஒட்டக்கூத்தரின் காலம் பன்னிரண்டாம் நூற்றாண்டு.

8. ஒட்டக்கூத்தரின் வேறுுுுபெயர்கள் 

கவிச்சக்கரவர்த்தி, கவிராட்சசன், சர்வ கவி, காலக் கவி.

9.  உலா பாவகை கலிவெண்பா.

10. மூவருலா என்னும் நூலைப் பாடியவர் ஒட்டக்கூத்தர்.

11. புயம் என்ற மங்கலச் சொல்லால் பாடப்பட்ட நூல் ராசராச சோழன் உலா.



 

Comments

Popular posts from this blog

சீறாப்புராணம் - உமறுப் புலவர்.

  தமிழில் எழுதப்பட்ட தலைசிறந்த இஸ்லாமிய இலக்கியம் "சீறாப்புராணம்" ஆகும். சீராபுராணம் இறைத்தூதர் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றினை மையமாகக்கொண்டு தமிழ் மரபுகளைப் பின்பற்றி எழுதப்பட்ட ஒரு காவியம் ஆகும். இத்தகைய நூலை இயற்றியவர் பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த உமறுப் புலவர் இயற்றிய நூல்தான் சீறாப்புராணம். மேலும் உமறுப்புலவர் அதே காலத்தில் வாழ்ந்த சீதக்காதியின் ஆதரவைப் பெற்றார். உமறுப் புலவர் வள்ளல் சீதக்காதியின் பெருமையை " செத்தும் கொடுத்தான் சீதக்காதி" என  சொற்றொடர் விளக்கும். சீறாப்புராணம் அமைவிடம்: சீராபுராணம் இரண்டு பாகங்களாக அமைந்துள்ளது. முதல் பாகத்தில் 44 படலங்களும், இரண்டாம் பாகத்தில் 47 பக்கங்களும் உள்ளன. சீறாப் புராணத்தில் இடம் பெறும் முதல் பாகம்: முதல் பாகத்தில் 3 காண்டங்கள் உள்ளன. இப்பாகத்தில் மொத்தம் 44 படலங்கள் உள்ளன. 1. விலாதத்துக் காண்டம். 2. நுபுவ்வத்துக் காண்டம். 3. ஷீலாஷது காண்டம். * விலாதத்துக் காண்டம்: 1. கடவுள் வாழ்த்துப் படலம் 2. நாட்டுப் படலம் 3. தலைமுறைப் படலம் 4. நபியவதாரப் படலம் 5. அலிமா முலையூர் படலம் 6. இலாஞ்சனை தரித்த படலம் 7. ...

தமிழ்விடு தூது - எத்தனை கண்ணிகள்.

தமிழ்விடு தூது - ஆசிரியர் பெயர் தெரியவில்லை. தமிழ் விடு தூது நூல் அமைப்பு: தமிழ் சிற்றிலக்கிய வகைகளுள் தூது என்பதும் ஒருவகை இலக்கியமாகும். இது வாயில் இலக்கியம், சந்து இலக்கியம் என்று வேறுு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இது 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று ஆகும். தமிழ்விடு தூது பாடல் அமைந்த விதம்: தமிழ்விடு தூது மதுரையில் கோயில் கொண்டிருக்கும் சொக்கநாதர் மீது காதல் கொண்ட பெண் ஒருத்தி தன் காதலி கூறி வருமாறு தமிழ் மொழியை தூது விடுவதாக அமைந்துள்ளதுதான் தமிழ்விடு தூது. தமிழ்விடு தூது சிறப்பு; தமிழின் பெருமையை பாட கவிஞர்கள் கையாளும் உத்திகள் பற்பல. கவிதை அதற்கு ஒரு கருவி, கிளி, அன்னம், விரலி, பணம், தந்தி என்று பல தூதுு வாயில்களை அறிந்துள்ளோம். ஆனால் தமிழையே தூதுப் பொருளாக்கிிி உள்ளது தமிழ்விடு தூது. தமிழின்   இனிமை,இலக்கிய வளம், சுவை,அழகு, திறன், தகுதி, ஆகியவற்றைை இச்சிற்றிலக்கியத்தில் தெளிவாக விளக்கியுள்ளது. தமிழ்விடு தூது முக்கிய வினா விடை குறிப்புகள்: * தமிழ்விடு தூது ஒரு சிற்றிலக்கிய வகையைச் சார்ந்தது. * தமிழ்விடு தூது வில் இடம்பெறும் கண்ணி என்பதன் பொருள் இரண்டு கண்களை போல் இ...

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்- அறநூல்கள்-நீதி நூல்கள் - புறநூல்கள் யாவை.

  பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அற நூல்கள் (அல்லது) நீதி நூல்கள் பின்வருமாறு: * நாலடியார் * நான்மணிக்கடிகை * இன்னா நாற்பது * இனியவை நாற்பது * திருக்குறள் * திரிகடுகம் * ஆசாரக்கோவை * பழமொழி நானூறு * சிறுபஞ்சமூலம் * முதுமொழிக்காஞ்சி * ஏலாதி பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அக நூல்கள் (அல்லது) அகத்திணை நூல்கள் பின்வருமாறு: * கார் நாற்பது * ஐந்திணை ஐம்பது * ஐந்திணை எழுபது * திணைமொழி ஐம்பது * திணைமாலை நூற்றைம்பது * கைந்நிலை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் புற நூல்(அல்லது) புறத்திணை நூல்கள் பின்வருமாறு: * களவழி நாற்பது பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் மற்றும் பாடல்களின் எண்ணிக்கை: நூல்கள்                                       பாடல்கள் நாலடியார்                                  400                நான்மணிக்கடிகை                ...