அழகர் கிள்ளை விடு தூது - பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்

 அழகர் கிள்ளை விடு தூது - பலபட்டடை சொக்கநாதப் புலவர்.

அழகர் கிள்ளைவிடு தூது 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று. தூது வகை இலக்கியங்களில் ஒன்றான அழகர் கிள்ளைவிடு தூது பற்றி சற்று விரிவாக இங்கே காணலாம்.


அழகர் கிள்ளைவிடு தூது நூல் வரலாறு:

பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் ஆல் திருமாலிருஞ்சோலை மலையில் கோயில் கொண்டிருக்கும் அழகர் "கிளியை தூது விடுத்து "பாடிய பாடல் தான் "அழகர் கிள்ளை விடு தூது" நூல் ஆகும்.

அழகர் கிள்ளை விடு தூது காப்பு வெண்பா ஒன்றையும், 239 கன்னிகள் கொண்ட நூலாகும்.

இவர் மதுரை நகரை சேர்ந்தவர்.

இவர் ஏறக்குறைய 250  ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் ஆக கருதப்படுகிறார்.

பலபட்டடைச் சொக்கநாத புலவர் என் தந்தையின் பெயர் சொக்கலிங்கம் பிள்ளை.



பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் செய்யும் தொழில் யாது:

இவர் பலபட்டடை கணக்கு செய்யும் தொழில் செய்ததால் பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் எனும் பெயர் வந்தது.


பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் இயற்றிய வேறு நூல்கள்:

1. மதுரை மும்மணிக்கோவை

2. யமக அந்தாதி

3. தென்றல் விடு தூது

4. கன்னிவாடி நரசிங்கர் மேல் பாடிய வளமடல் 

5. தேவை உலா.



அழகர் மலைக்கு இருக்கும் வேறு பெயர்கள்:

1. திருமாலிருஞ்சோலை

2. இடப கிரி

3. தென் திருப்பதி

4. சஞ்சீவி பர்வதம்

5. பழமுதிர்ச்சோலை.

மேலும் கிள்ளைவிடு தூது வில் அழகர்மலை சிறப்புகள், இறைவன் சிறப்புகள் ஆகியவற்றை இடம்பெறுகின்றன.


கிள்ளைவிடு தூது நூல் அமையக் காரணம்:

அழகர்மலை கடவுள் மீது காதல் கொண்ட பெண்ணொருத்தி தன் காதலை அவளிடம் கூற கிளியை தூது அனுப்புவதாக அமைய பாடப்பட்ட நூல் தான் " அழகர் கிள்ளை விடு தூது".



அழகர் கிள்ளைவிடு தூது வின் சிறப்புகள்:

அழகர் கிள்ளை விடு தூது நூலில் முதலில் கிளியின் பெருமையை உணர்த்துகிறது.

அடுத்து கோடை திருவிழாவில் அழகர் உலா வரும் அழகும், அப்பெருமான் இடம் தலைவி தன் உள்ளம் இழந்த வரலாற்றை கூறப்படுகிறது.

இறுதியாக அழகரிடம் தன் காதலைத் தெரிவித்து அவருடைய மாலை ஒன்றை வாங்கி வருமாறு கிளியிடம் தூது விடுவதாக நூல் அமைகிறது.


இம்மலையை பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ள நூல்கள் பின்வருமாறு:

1. சாமி கவி காளருந்திரர் பாடிய பிள்ளைத்தமிழ் 

2. கவிகுஞ்சர பாரதியார் இன் அழகர் குறவஞ்சி.


அழகர் கிள்ளைவிடு தூது நூலின் தனிச்சிறப்புகள்:

இந்நூலில் பல்வேறு புராண இதிகாச செய்திகள், பழக்க வழக்கங்கள், அழகர் கோயில் பூஜை வழிபாட்டு முறைகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

இந்நூலின் மூலத்தை முதன் முதலில் பதிப்பித்தவர் 1905 ஆண்டு 

மூ. வேணுகோபாலசாமி நாயுடு.

இந்நூலை பழைய ஏட்டுச் சுவடிகள் உடன் ஒப்பிட்டு அரிய குறிப்பு உரைகளுடன் 1837 ஆம் ஆண்டு உ. வே சாமிநாதையர் பதிப்பித்தார்.





Post a Comment

Previous Post Next Post