Skip to main content

காவடிச் சிந்து - அண்ணாமலை ரெட்டியார்

 காவடிச் சிந்து - சிந்து பாவகை



சிந்து என்பது யாது:

இசைத்தமிழ் பாகுபாடுகளில் ஒன்றான சிந்து ஐந்து இசை உறுப்புகளால் ஆன யாப்பு ஆகும்.

5 இசை உறுப்புக்கள் பின்வருமாறு:

*  எடுப்பு 1

*  துடுப்பு 1

*  உறுப்புக்கள் 3 

சிந்துவின் 3 உறுப்புக்கள் பின்வருமாறு:

* பல்லவி

* அநுபல்லவி

* கண்ணிகள் அடங்கிய சரணம்.


காவடிச்சிந்து பற்றி சிறு குறிப்பு:

காவடிச்சிந்து இசை பா வகைகளில் ஒன்றான சிந்து பாவகை வடிவங்களில் ஒன்றாகும். மேலும் காவடிச்சிந்து தமிழ் பண்பாட்டுக் கூறுகளில் ஒன்றாகும். தமிழ்நாட்டில் பண்டைய காலம் முதல் நாட்டார் வழக்கில் உள்ள இசை மரபே காவடிச்சிந்து என்று அழைக்கப்படுகிறது.

முருகப்பெருமானின் வழிபாட்டிற்காக பால் முதலிய பொருட்களைக் கொண்டு செல்லும்போது வழிநடைப் பாடலாக "காவடிச்சிந்து" பாடப்படுகிறது.

திருநெல்வேலிக்கு அருகே உள்ள கழுகு மலையில் எழுந்தருளியிருக்கும் முருகப்பெருமானைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பெறும் நூல் தான் "காவடி சிந்து".

காவடிச்சிந்து பல்லவியும், அநுபல்லவியும்   சரணங்கள் உரிய கண்ணிகளை மாத்திரம் பெற்று வரும்.


காவடிச்சிந்து ஆசிரியர் குறிப்பு:

காவடிச் சிந்து என்ற இலக்கியத்தின் ஆசிரியர் அண்ணாமலை ரெட்டியார். இவரின் காலம் கிபி(1865-1891). அருணகிரியாரின் திருப்புகழ் தாக்கத்தால்  விளைந்த சங்க இலக்கியம் காவடிச்சிந்து ஆகும்.காவடிச் சிந்து என்ற இலக்கியத்தின் ஆசிரியர் அண்ணாமலை ரெட்டியார் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள "சென்னிகுளம்"என்ற ஊரில் பிறந்தார்.

அண்ணாமலை ரெட்டியாரின் தந்தையின் பெயர் செண்ணவர், தாயாரின்  பெயர் ஓவு அம்மாள்.


அண்ணாமலை ரெட்டியாரின் சிறப்பு:

தமிழில் முதல் முதலில் வண்ணச்சிந்து பாடியதால் காவடிச் சிந்துவின் தந்தை என அழைக்கப்படுகிறார். மேலும் சிந்துக்குத் தந்தை என அழைக்கப்படுபவர்"பாரதியார்".

பதினெட்டு வயதிலேயே ஊற்று மலைக்குச் சென்று அங்கு குறுநிலத் தலைவராக இருந்த இருதாலய மருதப்ப தேவரின் அரசவைப் புலவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


அண்ணாமலை ரெட்டியார் எழுதிய வேறு நூல்கள் அல்லது படைப்புகள்:

* வீரை அந்தாதி

* கோமதி அந்தாதி

* சங்கரன்கோயில் திரிபு அந்தாதி

* வீரை பிள்ளைத்தமிழ்

* வீரை தலபுராணம்

* வீரை நவநீத கிருஷ்ணசாமிபதிகம்

* கருவை மும்மணிக்கோவை.











Comments

Popular posts from this blog

சீறாப்புராணம் - உமறுப் புலவர்.

  தமிழில் எழுதப்பட்ட தலைசிறந்த இஸ்லாமிய இலக்கியம் "சீறாப்புராணம்" ஆகும். சீராபுராணம் இறைத்தூதர் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றினை மையமாகக்கொண்டு தமிழ் மரபுகளைப் பின்பற்றி எழுதப்பட்ட ஒரு காவியம் ஆகும். இத்தகைய நூலை இயற்றியவர் பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த உமறுப் புலவர் இயற்றிய நூல்தான் சீறாப்புராணம். மேலும் உமறுப்புலவர் அதே காலத்தில் வாழ்ந்த சீதக்காதியின் ஆதரவைப் பெற்றார். உமறுப் புலவர் வள்ளல் சீதக்காதியின் பெருமையை " செத்தும் கொடுத்தான் சீதக்காதி" என  சொற்றொடர் விளக்கும். சீறாப்புராணம் அமைவிடம்: சீராபுராணம் இரண்டு பாகங்களாக அமைந்துள்ளது. முதல் பாகத்தில் 44 படலங்களும், இரண்டாம் பாகத்தில் 47 பக்கங்களும் உள்ளன. சீறாப் புராணத்தில் இடம் பெறும் முதல் பாகம்: முதல் பாகத்தில் 3 காண்டங்கள் உள்ளன. இப்பாகத்தில் மொத்தம் 44 படலங்கள் உள்ளன. 1. விலாதத்துக் காண்டம். 2. நுபுவ்வத்துக் காண்டம். 3. ஷீலாஷது காண்டம். * விலாதத்துக் காண்டம்: 1. கடவுள் வாழ்த்துப் படலம் 2. நாட்டுப் படலம் 3. தலைமுறைப் படலம் 4. நபியவதாரப் படலம் 5. அலிமா முலையூர் படலம் 6. இலாஞ்சனை தரித்த படலம் 7. ...

தமிழ்விடு தூது - எத்தனை கண்ணிகள்.

தமிழ்விடு தூது - ஆசிரியர் பெயர் தெரியவில்லை. தமிழ் விடு தூது நூல் அமைப்பு: தமிழ் சிற்றிலக்கிய வகைகளுள் தூது என்பதும் ஒருவகை இலக்கியமாகும். இது வாயில் இலக்கியம், சந்து இலக்கியம் என்று வேறுு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இது 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று ஆகும். தமிழ்விடு தூது பாடல் அமைந்த விதம்: தமிழ்விடு தூது மதுரையில் கோயில் கொண்டிருக்கும் சொக்கநாதர் மீது காதல் கொண்ட பெண் ஒருத்தி தன் காதலி கூறி வருமாறு தமிழ் மொழியை தூது விடுவதாக அமைந்துள்ளதுதான் தமிழ்விடு தூது. தமிழ்விடு தூது சிறப்பு; தமிழின் பெருமையை பாட கவிஞர்கள் கையாளும் உத்திகள் பற்பல. கவிதை அதற்கு ஒரு கருவி, கிளி, அன்னம், விரலி, பணம், தந்தி என்று பல தூதுு வாயில்களை அறிந்துள்ளோம். ஆனால் தமிழையே தூதுப் பொருளாக்கிிி உள்ளது தமிழ்விடு தூது. தமிழின்   இனிமை,இலக்கிய வளம், சுவை,அழகு, திறன், தகுதி, ஆகியவற்றைை இச்சிற்றிலக்கியத்தில் தெளிவாக விளக்கியுள்ளது. தமிழ்விடு தூது முக்கிய வினா விடை குறிப்புகள்: * தமிழ்விடு தூது ஒரு சிற்றிலக்கிய வகையைச் சார்ந்தது. * தமிழ்விடு தூது வில் இடம்பெறும் கண்ணி என்பதன் பொருள் இரண்டு கண்களை போல் இ...

நாலடியார் நூல் விளக்கம் மற்றும் ஆசிரியர்கள் முழு விளக்கம்

  1. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் முதன்மையான பாடப்படும் நூல் "நாலடியார்" 2. தமிழ் மொழிகளில் திருக்குறளோடு ஒப்பிட்ட பாடப்படும் நூல் "நாலடியார்" 3. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் உள்ள ஒரே ஒரு தொகை நூல் "நாலடியார்" 4 . முப்பெரும் அற நூல்களில் ஒன்றாக திகழும் நூல் "நாலடியார்" 5. முப்பெரும் நூல்கள் யாவை "திருக்குறள்" "நாலடியார்" "பழமொழி நானூறு" 6. துறவறத்தையும், நிலையாமையும் அதிகமாக வலியுறுத்தி பாடப்பட்ட நூல் "நாலடியார்" 7. திருக்குறளைப் போன்று வகை தொகை கொண்டு வடிவமைக்கப்பட்ட நூல் "நாலடியார்" 8 . நாலடியார் பிரித்து எழுதுக "நாலடி  + ஆர்" 9. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் அறம் சார்ந்த நூல் எது "நாலடியார்" 10 . நாலடியார் என பெயர் வரக் காரணம் "நாலடி கொண்ட வெண்பாவால் எழுதப்பட்டதால் நாலடியார் என பெயர் பெற்றது" 11. நாலடியார் பாடலைப் பாடியவர்கள் "சமணமுனிவர்கள் பலரால்" 12 . நாலடியார் அடி எல்லை "4 அடிகள்" 13. நாலடியார் பாடல் உணர்த்தும் பொருள் "அறம் -...