Skip to main content

கார் நாற்பது - அகநூல்களில் மிகவும் சிறியது - தெளிவான நூல் விளக்கம்

 


சங்கம் மருவிய காலத் தமிழ் இலக்கிய நூல் தொகுப்பான பதினெண் கழ்க்கணக்கு நூல்களுள் அகப்பொருள் சார்ந்த நூல்களுள் ஒன்றான "மதுரையைச் சார்ந்த கண்ணன் கூத்தனார்"எனும் புலவரால் பண்டையக்கால தமிழரின் "அக வாழ்க்கையின் அம்சங்களையும்"மற்றும் தன்னைப் பிரிந்து வேற்றூர் சென்ற தலைவனின் வருகைக்காக ஏக்கத்தோடு  "கார்காலப் பின்னணியில் எடுத்துரைக்கும் நூல்"தான் "கார் நாற்பது"பற்றி விரிவாக காண்போம்.

இந்நூல் கார்காலத்தின் இயற்கை நிகழ்வுகளையும் அக்காலத்தில் நிகழும் பண்பாட்டு நிகழ்வுகளையும் தலைவியின் மனநிலையோடு சேர்த்து இந்நூல் எடுத்துக் கூறுகிறது.


கார்நாற்பது எடுத்துக் கூறும் திருவிழா:


கார்கால திருவிழாக்களில் ஒன்றான கார்த்திகை தீபத் திருவிழா அன்று மக்கள் வீடுுுு வீடாக விளக்குகளை ஏற்றி வழிபடுவர்.

அதே போல வரிசையாக எங்கும் பூக்கள் பூக்கும் படியாக தலைவனின் வருகையை அறிவிக்கும் தூதாக" மழை வந்துள்ளது"எனும் பொருளில் வரும் பாடல் பின்வருமாறு.

நலமிகு  கார்த்திகை  நாட்டவ   ரிட்ட               தலைநாள்  விளக்கி  றகையுடைய   வாகிப்                     புலமெலாம்  பூத்தன   தோன்றி                        சிலமொழி   தூதொடு வந்த மொழி.


கார்நாற்பது முக்கிய குறிப்புகள்:

* பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அகநூல்களில் மிகவும் சிறியது "கார் நாற்பது".

* கார்நாற்பது இல் உள்ள பாடல்களின் எண்ணிக்கை 40 பாடல்களைக் கொண்டது.

* திருவண்ணாமலையில் மிகவும் புகழ்பெற்ற "கார்த்திகை தீபத் திருவிழா இந்நூலில் தான் விளக்கப்படுகிறது".

* கார் நாற்பது பாடல் "நாடக வடிவில் அமைந்துள்ளது".

* பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒரே ஒரு திணையை(முல்லைத்திணை) பற்றி பாடும் நூல் "கார் நாற்பது"

* கார்நாற்பது இடம்பெறும் ஒவ்வொரு பாடலிலும் "கார்கால வருணனை பற்றி கூறுகிறது".

* கார் நாற்பது ஆசிரியர் "மதுரையைச் சேர்ந்த கண்ணன் கூத்தனார்".

Comments

Popular posts from this blog

சீறாப்புராணம் - உமறுப் புலவர்.

  தமிழில் எழுதப்பட்ட தலைசிறந்த இஸ்லாமிய இலக்கியம் "சீறாப்புராணம்" ஆகும். சீராபுராணம் இறைத்தூதர் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றினை மையமாகக்கொண்டு தமிழ் மரபுகளைப் பின்பற்றி எழுதப்பட்ட ஒரு காவியம் ஆகும். இத்தகைய நூலை இயற்றியவர் பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த உமறுப் புலவர் இயற்றிய நூல்தான் சீறாப்புராணம். மேலும் உமறுப்புலவர் அதே காலத்தில் வாழ்ந்த சீதக்காதியின் ஆதரவைப் பெற்றார். உமறுப் புலவர் வள்ளல் சீதக்காதியின் பெருமையை " செத்தும் கொடுத்தான் சீதக்காதி" என  சொற்றொடர் விளக்கும். சீறாப்புராணம் அமைவிடம்: சீராபுராணம் இரண்டு பாகங்களாக அமைந்துள்ளது. முதல் பாகத்தில் 44 படலங்களும், இரண்டாம் பாகத்தில் 47 பக்கங்களும் உள்ளன. சீறாப் புராணத்தில் இடம் பெறும் முதல் பாகம்: முதல் பாகத்தில் 3 காண்டங்கள் உள்ளன. இப்பாகத்தில் மொத்தம் 44 படலங்கள் உள்ளன. 1. விலாதத்துக் காண்டம். 2. நுபுவ்வத்துக் காண்டம். 3. ஷீலாஷது காண்டம். * விலாதத்துக் காண்டம்: 1. கடவுள் வாழ்த்துப் படலம் 2. நாட்டுப் படலம் 3. தலைமுறைப் படலம் 4. நபியவதாரப் படலம் 5. அலிமா முலையூர் படலம் 6. இலாஞ்சனை தரித்த படலம் 7. ...

தமிழ்விடு தூது - எத்தனை கண்ணிகள்.

தமிழ்விடு தூது - ஆசிரியர் பெயர் தெரியவில்லை. தமிழ் விடு தூது நூல் அமைப்பு: தமிழ் சிற்றிலக்கிய வகைகளுள் தூது என்பதும் ஒருவகை இலக்கியமாகும். இது வாயில் இலக்கியம், சந்து இலக்கியம் என்று வேறுு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இது 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று ஆகும். தமிழ்விடு தூது பாடல் அமைந்த விதம்: தமிழ்விடு தூது மதுரையில் கோயில் கொண்டிருக்கும் சொக்கநாதர் மீது காதல் கொண்ட பெண் ஒருத்தி தன் காதலி கூறி வருமாறு தமிழ் மொழியை தூது விடுவதாக அமைந்துள்ளதுதான் தமிழ்விடு தூது. தமிழ்விடு தூது சிறப்பு; தமிழின் பெருமையை பாட கவிஞர்கள் கையாளும் உத்திகள் பற்பல. கவிதை அதற்கு ஒரு கருவி, கிளி, அன்னம், விரலி, பணம், தந்தி என்று பல தூதுு வாயில்களை அறிந்துள்ளோம். ஆனால் தமிழையே தூதுப் பொருளாக்கிிி உள்ளது தமிழ்விடு தூது. தமிழின்   இனிமை,இலக்கிய வளம், சுவை,அழகு, திறன், தகுதி, ஆகியவற்றைை இச்சிற்றிலக்கியத்தில் தெளிவாக விளக்கியுள்ளது. தமிழ்விடு தூது முக்கிய வினா விடை குறிப்புகள்: * தமிழ்விடு தூது ஒரு சிற்றிலக்கிய வகையைச் சார்ந்தது. * தமிழ்விடு தூது வில் இடம்பெறும் கண்ணி என்பதன் பொருள் இரண்டு கண்களை போல் இ...

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்- அறநூல்கள்-நீதி நூல்கள் - புறநூல்கள் யாவை.

  பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அற நூல்கள் (அல்லது) நீதி நூல்கள் பின்வருமாறு: * நாலடியார் * நான்மணிக்கடிகை * இன்னா நாற்பது * இனியவை நாற்பது * திருக்குறள் * திரிகடுகம் * ஆசாரக்கோவை * பழமொழி நானூறு * சிறுபஞ்சமூலம் * முதுமொழிக்காஞ்சி * ஏலாதி பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அக நூல்கள் (அல்லது) அகத்திணை நூல்கள் பின்வருமாறு: * கார் நாற்பது * ஐந்திணை ஐம்பது * ஐந்திணை எழுபது * திணைமொழி ஐம்பது * திணைமாலை நூற்றைம்பது * கைந்நிலை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் புற நூல்(அல்லது) புறத்திணை நூல்கள் பின்வருமாறு: * களவழி நாற்பது பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் மற்றும் பாடல்களின் எண்ணிக்கை: நூல்கள்                                       பாடல்கள் நாலடியார்                                  400                நான்மணிக்கடிகை                ...