Skip to main content

மலைபடுகடாம் நூல் விளக்கம் மற்றும் அடிகள் வரையறை

 

1. பண்டைய கால இசை கருவிகள் குறித்து மிகுதியாக விளக்கம் நூல்

"மலைபடுகடாம்"

2. சிவபெருமானை காரி உண்டிக் கடவுள் (நஞ்சு உண்ட சிவன்) எனக் குறிப்பிடும் பத்துப்பாட்டு நூல்

"மலைபடுகடாம்"

3. ஆற்றுப்படை நூல்களுள் மிகவும் பெரிய நூல்

"மலைபடுகடாம்"

4. கூத்தர்-ஐ களம் பெரு கண்ணுளர் எனக் குறிப்பிடப்படும் பத்துப்பாட்டு நூல்

"மலைபடுகடாம்"

5. பல்குன்றக் கோட்டத்துச் செங்கண்  மாத்துவேன் நன்னன்சேய் நன்னன் என்பவரைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்ட பத்துப்பாட்டு நூல்

"மலைபடுகடாம்"

6. மலைபடுகடாம் பாடல் ஆசிரியர்

"இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர் பெருங்கௌசிகனார்"

7. மலைப்படுகடாம் அடிகள்

"583 அடிகள்"

8. மலைபடுகடாம் ஒரு

"புறப்பொருள் நூலாகும்"

9. மலைபடுகடாம் பாடல் பாவகை

"ஆசிரியப்பா"

10. மலைபடுகடாம் பாடலின் பொருள்

"பரிசு பெற்ற ஒருவர் தன்னைப் போல் பரிசு பெறச் செல்லும் இன்னொருவரை தன்னைப்போல் பயன்அடைய வேண்டி தான் பரிசுபெற்ற வள்ளல் இடமோ அரசர் இடமோ வழிபடுதலே ஆற்றுப்படை ஆகும் அவ்வகையில் இப்பாடல்


பரிசில் பெற்ற கூத்தன் ஒருவன் பரிசில் பெற கருதிய கூத்தனை தான் பரிசு பெற்ற நன்னன்சேய் நன்னன் இடம் ஆற்றுபடுத்துவதாக அமைந்தத என்பதால் மலைபடுகடாம்

"கூத்தராற்றுப்படை என்று பெயர் பெற்றது"


11. கூத்தர் என்பவர் யார்

"ஆடுகளம் அமைத்து ஆடுபவர் (நாடக கலைஞர்)

12. மலைபடுகடாம் என்று பெயர் வரக் காரணம்

"மலைக்கு யானையை உவமித்து

                         அதனிடத்தே

பிறந்த பல்வகையான ஓசையை

                       கடாம் (மதம்)

என சிறப்பித்து பாராட்டு இருத்தலால்

"மலைபடுகடாம் என பெயர் பெற்றது"


13. மலைபடுகடாம் இல் குறிப்பிடப்படும் பண்டையகால இசைக்கருவிகள்

                "முழவு"

               "ஆகுளி"

               "பாண்டில்"

              "கோட்டு"

              "தும்பு"

              "குழல்"

              "அரி"

              "தட்டை"

              "எல்லரி"

              "பதலை"


14. மலைபடுகடாம் வேறு பெயர்கள்

"கூத்தராற்றுப்படை"

15. மலைபடுகடாம் இன் பாட்டுடைத் தலைவன்

"நன்னன்சேய் நன்னன்"

16. மலைபடுகடாம் இடம் பெறும் திணை

"பாடாண் திணை"

17. நன்னன்சேய் நன்னனின் மற்றொரு பெயர்

"நவிரமலை வேந்தன்"

18. "நவிரமலை" தமிழ்நாட்டில் எங்கு உள்ளது

"வேலூர் மற்றும் திருவண்ணாமலை க்கு இடையில்"


19. மலைபடுகடாம் இல் இடம்பெறும் சொற் பொருட்கள்

"அசைஇ - இளைப்பாறி"

"அல் - இரவு"

"அல்கி - இரவில் தங்கி"

"கடும்பு - சுற்றம்"

"சேர்ந்த - சிவந்த"

"செப்பம் - பொருத்தமான"

"அலங்கு - அசையும்"





                 

Comments

Popular posts from this blog

சீறாப்புராணம் - உமறுப் புலவர்.

  தமிழில் எழுதப்பட்ட தலைசிறந்த இஸ்லாமிய இலக்கியம் "சீறாப்புராணம்" ஆகும். சீராபுராணம் இறைத்தூதர் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றினை மையமாகக்கொண்டு தமிழ் மரபுகளைப் பின்பற்றி எழுதப்பட்ட ஒரு காவியம் ஆகும். இத்தகைய நூலை இயற்றியவர் பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த உமறுப் புலவர் இயற்றிய நூல்தான் சீறாப்புராணம். மேலும் உமறுப்புலவர் அதே காலத்தில் வாழ்ந்த சீதக்காதியின் ஆதரவைப் பெற்றார். உமறுப் புலவர் வள்ளல் சீதக்காதியின் பெருமையை " செத்தும் கொடுத்தான் சீதக்காதி" என  சொற்றொடர் விளக்கும். சீறாப்புராணம் அமைவிடம்: சீராபுராணம் இரண்டு பாகங்களாக அமைந்துள்ளது. முதல் பாகத்தில் 44 படலங்களும், இரண்டாம் பாகத்தில் 47 பக்கங்களும் உள்ளன. சீறாப் புராணத்தில் இடம் பெறும் முதல் பாகம்: முதல் பாகத்தில் 3 காண்டங்கள் உள்ளன. இப்பாகத்தில் மொத்தம் 44 படலங்கள் உள்ளன. 1. விலாதத்துக் காண்டம். 2. நுபுவ்வத்துக் காண்டம். 3. ஷீலாஷது காண்டம். * விலாதத்துக் காண்டம்: 1. கடவுள் வாழ்த்துப் படலம் 2. நாட்டுப் படலம் 3. தலைமுறைப் படலம் 4. நபியவதாரப் படலம் 5. அலிமா முலையூர் படலம் 6. இலாஞ்சனை தரித்த படலம் 7. ...

தமிழ்விடு தூது - எத்தனை கண்ணிகள்.

தமிழ்விடு தூது - ஆசிரியர் பெயர் தெரியவில்லை. தமிழ் விடு தூது நூல் அமைப்பு: தமிழ் சிற்றிலக்கிய வகைகளுள் தூது என்பதும் ஒருவகை இலக்கியமாகும். இது வாயில் இலக்கியம், சந்து இலக்கியம் என்று வேறுு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இது 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று ஆகும். தமிழ்விடு தூது பாடல் அமைந்த விதம்: தமிழ்விடு தூது மதுரையில் கோயில் கொண்டிருக்கும் சொக்கநாதர் மீது காதல் கொண்ட பெண் ஒருத்தி தன் காதலி கூறி வருமாறு தமிழ் மொழியை தூது விடுவதாக அமைந்துள்ளதுதான் தமிழ்விடு தூது. தமிழ்விடு தூது சிறப்பு; தமிழின் பெருமையை பாட கவிஞர்கள் கையாளும் உத்திகள் பற்பல. கவிதை அதற்கு ஒரு கருவி, கிளி, அன்னம், விரலி, பணம், தந்தி என்று பல தூதுு வாயில்களை அறிந்துள்ளோம். ஆனால் தமிழையே தூதுப் பொருளாக்கிிி உள்ளது தமிழ்விடு தூது. தமிழின்   இனிமை,இலக்கிய வளம், சுவை,அழகு, திறன், தகுதி, ஆகியவற்றைை இச்சிற்றிலக்கியத்தில் தெளிவாக விளக்கியுள்ளது. தமிழ்விடு தூது முக்கிய வினா விடை குறிப்புகள்: * தமிழ்விடு தூது ஒரு சிற்றிலக்கிய வகையைச் சார்ந்தது. * தமிழ்விடு தூது வில் இடம்பெறும் கண்ணி என்பதன் பொருள் இரண்டு கண்களை போல் இ...

நாலடியார் நூல் விளக்கம் மற்றும் ஆசிரியர்கள் முழு விளக்கம்

  1. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் முதன்மையான பாடப்படும் நூல் "நாலடியார்" 2. தமிழ் மொழிகளில் திருக்குறளோடு ஒப்பிட்ட பாடப்படும் நூல் "நாலடியார்" 3. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் உள்ள ஒரே ஒரு தொகை நூல் "நாலடியார்" 4 . முப்பெரும் அற நூல்களில் ஒன்றாக திகழும் நூல் "நாலடியார்" 5. முப்பெரும் நூல்கள் யாவை "திருக்குறள்" "நாலடியார்" "பழமொழி நானூறு" 6. துறவறத்தையும், நிலையாமையும் அதிகமாக வலியுறுத்தி பாடப்பட்ட நூல் "நாலடியார்" 7. திருக்குறளைப் போன்று வகை தொகை கொண்டு வடிவமைக்கப்பட்ட நூல் "நாலடியார்" 8 . நாலடியார் பிரித்து எழுதுக "நாலடி  + ஆர்" 9. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் அறம் சார்ந்த நூல் எது "நாலடியார்" 10 . நாலடியார் என பெயர் வரக் காரணம் "நாலடி கொண்ட வெண்பாவால் எழுதப்பட்டதால் நாலடியார் என பெயர் பெற்றது" 11. நாலடியார் பாடலைப் பாடியவர்கள் "சமணமுனிவர்கள் பலரால்" 12 . நாலடியார் அடி எல்லை "4 அடிகள்" 13. நாலடியார் பாடல் உணர்த்தும் பொருள் "அறம் -...