Skip to main content

பட்டினப்பாலை நூல் குறிப்பு மற்றும் அடிகள் வரையறை

 

1. காவிரியின் பெருமையைப் பற்றி சிறப்பித்து கூறும் பத்துப்பாட்டு நூல்

"பட்டினப்பாலை"

2. மருதநிலத்தின் வளமையை நிலையாக கூறும் நூல்

"பட்டினப்பாலை"

3. காவிரிப்பூம்பட்டினத்தின் செல்வ செழிப்பு களை மிகுதியாகக் கூறும் பத்துப்பாட்டு நூல்

"பட்டினப்பாலை"

4. கரிகால் பெருவளத்தான் இன் வீரச் செயல்களை பற்றி விரிவாய் கூறும் நூல்

"பட்டினப்பாலை"

5. கரிகால் பெருவளத்தான் உறையூர் ஐ வளப்படுத்திய வரலாற்று இடம்பெறும் நூல்

"பட்டினப்பாலை"

6.காவிரிப்பூம்பட்டினத்தை பற்றிய வரலாற்றுக் களஞ்சியம் எனும் சிறப்பித்துப் போற்றபபடும் பத்துப்பாட்டு நூல்

"பட்டினப்பாலை"

7. பட்டினப்பாலை என பெயர் வரக் காரணம்

"பட்டினத்தில் (காவிரிப்பூம்பட்டினத்தின்) சிறப்பைக் கூறும் பாலைத்திணை செய்யுள் என்பதால் பட்டினப் பாலை எனப் பெயர் பெற்றது"

8. பட்டினப்பாலையின் பாட்டுடைத் தலைவன்

"சோழன் கரிகால் பெருவளத்தான் (திருமாவளவன்)

9. பட்டினப்பாலையின் பாடலாசிரியர்

"கடியலூர் உருத்திரங்கண்ணனார்"

10. பட்டினப்பாலை அடிவரையரை

"301 அடிகள்"

11. பட்டினப்பாலை ஒரு

"அகப்பொருள் நூல் ஆகும்"

12. பட்டினப்பாலையின் பாவகை சிறப்பு

"இடையிடையே வஞ்சிப்பா அடிகள்விரவி வர ஆசிரியப்பாவால் பாடப்பட்டது"

13. பட்டினப்பாலை உணர்த்தும் திணை

"பாலைத் திணை"

14. பாலைத் திணையின் சிறப்பு

"பிரிதலும் பிரிதல் நிமித்தமும்"

15. பட்டினப்பாலையின் பாலைத் திணையின் பாடல் விளக்கம்

"தலைவியைப் பிரிந்து செல்ல நினைத்த தலைவன் தன் மனைவியைப் பிரிய மனமின்றி தன் நெஞ்சத்திற்கு காரணத்தையும் கூறுவதையம் பிரிதலை தவிர்ப்பதாலும் அமைந்த திணை பாலைத் திணை"

16. பட்டினப்பாலையில் இடம்பெறும் அகப்பொருள் விளக்கம்

"செலவழுங்கல் என அர்த்தம்"

17. பட்டினப்பாலை நூலைக் குறித்து கலிங்கத்துப்பரணி எவ்வாறு விவரிக்கின்றது

"கரிகால் பெருவளத்தான் பட்டினபாலை பாடிய கடியலூர் உருத்திரங்கண்ணனார்க்கு பதினாறு நூறாயிரம் பொன் பரிசளித்தான் என்று கலிங்கத்துப்பரணி கூறுகின்றது"

 

18. பட்டினப்பாலைைை அரங்கேற்றப்பட்ட மண்டபம்

"பதினாறு கால் மண்டபம்"

19. பட்டினப்பாலையின் வேறு பெயர்கள்

"பாலை பாட்டு"

"வஞ்சி நெடும்பாட்டு"



Comments

Popular posts from this blog

சீறாப்புராணம் - உமறுப் புலவர்.

  தமிழில் எழுதப்பட்ட தலைசிறந்த இஸ்லாமிய இலக்கியம் "சீறாப்புராணம்" ஆகும். சீராபுராணம் இறைத்தூதர் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றினை மையமாகக்கொண்டு தமிழ் மரபுகளைப் பின்பற்றி எழுதப்பட்ட ஒரு காவியம் ஆகும். இத்தகைய நூலை இயற்றியவர் பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த உமறுப் புலவர் இயற்றிய நூல்தான் சீறாப்புராணம். மேலும் உமறுப்புலவர் அதே காலத்தில் வாழ்ந்த சீதக்காதியின் ஆதரவைப் பெற்றார். உமறுப் புலவர் வள்ளல் சீதக்காதியின் பெருமையை " செத்தும் கொடுத்தான் சீதக்காதி" என  சொற்றொடர் விளக்கும். சீறாப்புராணம் அமைவிடம்: சீராபுராணம் இரண்டு பாகங்களாக அமைந்துள்ளது. முதல் பாகத்தில் 44 படலங்களும், இரண்டாம் பாகத்தில் 47 பக்கங்களும் உள்ளன. சீறாப் புராணத்தில் இடம் பெறும் முதல் பாகம்: முதல் பாகத்தில் 3 காண்டங்கள் உள்ளன. இப்பாகத்தில் மொத்தம் 44 படலங்கள் உள்ளன. 1. விலாதத்துக் காண்டம். 2. நுபுவ்வத்துக் காண்டம். 3. ஷீலாஷது காண்டம். * விலாதத்துக் காண்டம்: 1. கடவுள் வாழ்த்துப் படலம் 2. நாட்டுப் படலம் 3. தலைமுறைப் படலம் 4. நபியவதாரப் படலம் 5. அலிமா முலையூர் படலம் 6. இலாஞ்சனை தரித்த படலம் 7. ...

தமிழ்விடு தூது - எத்தனை கண்ணிகள்.

தமிழ்விடு தூது - ஆசிரியர் பெயர் தெரியவில்லை. தமிழ் விடு தூது நூல் அமைப்பு: தமிழ் சிற்றிலக்கிய வகைகளுள் தூது என்பதும் ஒருவகை இலக்கியமாகும். இது வாயில் இலக்கியம், சந்து இலக்கியம் என்று வேறுு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இது 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று ஆகும். தமிழ்விடு தூது பாடல் அமைந்த விதம்: தமிழ்விடு தூது மதுரையில் கோயில் கொண்டிருக்கும் சொக்கநாதர் மீது காதல் கொண்ட பெண் ஒருத்தி தன் காதலி கூறி வருமாறு தமிழ் மொழியை தூது விடுவதாக அமைந்துள்ளதுதான் தமிழ்விடு தூது. தமிழ்விடு தூது சிறப்பு; தமிழின் பெருமையை பாட கவிஞர்கள் கையாளும் உத்திகள் பற்பல. கவிதை அதற்கு ஒரு கருவி, கிளி, அன்னம், விரலி, பணம், தந்தி என்று பல தூதுு வாயில்களை அறிந்துள்ளோம். ஆனால் தமிழையே தூதுப் பொருளாக்கிிி உள்ளது தமிழ்விடு தூது. தமிழின்   இனிமை,இலக்கிய வளம், சுவை,அழகு, திறன், தகுதி, ஆகியவற்றைை இச்சிற்றிலக்கியத்தில் தெளிவாக விளக்கியுள்ளது. தமிழ்விடு தூது முக்கிய வினா விடை குறிப்புகள்: * தமிழ்விடு தூது ஒரு சிற்றிலக்கிய வகையைச் சார்ந்தது. * தமிழ்விடு தூது வில் இடம்பெறும் கண்ணி என்பதன் பொருள் இரண்டு கண்களை போல் இ...

நாலடியார் நூல் விளக்கம் மற்றும் ஆசிரியர்கள் முழு விளக்கம்

  1. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் முதன்மையான பாடப்படும் நூல் "நாலடியார்" 2. தமிழ் மொழிகளில் திருக்குறளோடு ஒப்பிட்ட பாடப்படும் நூல் "நாலடியார்" 3. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் உள்ள ஒரே ஒரு தொகை நூல் "நாலடியார்" 4 . முப்பெரும் அற நூல்களில் ஒன்றாக திகழும் நூல் "நாலடியார்" 5. முப்பெரும் நூல்கள் யாவை "திருக்குறள்" "நாலடியார்" "பழமொழி நானூறு" 6. துறவறத்தையும், நிலையாமையும் அதிகமாக வலியுறுத்தி பாடப்பட்ட நூல் "நாலடியார்" 7. திருக்குறளைப் போன்று வகை தொகை கொண்டு வடிவமைக்கப்பட்ட நூல் "நாலடியார்" 8 . நாலடியார் பிரித்து எழுதுக "நாலடி  + ஆர்" 9. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் அறம் சார்ந்த நூல் எது "நாலடியார்" 10 . நாலடியார் என பெயர் வரக் காரணம் "நாலடி கொண்ட வெண்பாவால் எழுதப்பட்டதால் நாலடியார் என பெயர் பெற்றது" 11. நாலடியார் பாடலைப் பாடியவர்கள் "சமணமுனிவர்கள் பலரால்" 12 . நாலடியார் அடி எல்லை "4 அடிகள்" 13. நாலடியார் பாடல் உணர்த்தும் பொருள் "அறம் -...