Skip to main content

ஐந்திணை ஐம்பது - முல்லை திணையை முதன்மையாகக் கொண்டு பாடப்படும் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று தான் ஐந்திணை ஐம்பது

 


கிபி நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த மாறன் பொறையனார் என்னும் புலவரால் அகப்பொருள் குறித்துக் கூறும் நூல்களுள் இவை பதினெணகீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான ஐந்திணை ஐம்பது நூலைப் பற்றி சற்றுு விரிவாக காண்போம்.

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் பாலை என நிலங்களை 5 திணைகளாாகப் பிரிப்பது பண்டையகால தமிழ் வழக்கு.  அக்கால தமிழ் இலக்கியங்களிலும் அத்தகைய இலக்கியங்களில் எடுத்தாளப்படும் விடயங்களுக்கு பின்னணியாக இத் திணைகள் எடுத்துக்கொள்ளப்பட்டன.

ஐந்திணை ஐம்பதில் மேற்காட்டிய ஒவ்வொரு திணையின் பின்னணியிலும் பத்துப் பத்துப் பாடல்களாக 50 பாடல்கள் உள்ளன.

எடுத்துக்காட்டாக:

பாலை திணையை பின்னணியாக கொண்ட ஒரு பாடல் இது. வாழ்ந்த சூழலின் வசதிகளையும் பசுமையான நினைவுகளையும் விடுத்து காதலருடன் வறண்ட பாலைநில பகுதியூடாக செல்கிறாள் தலைவி. பாலை நிலத்துக்கு இயல்பான கடுமைை வாடடும்  எனினும் காதல் வயப்பட்ட உள்ளங்களுக்கு இயல்பான விட்டுக் கொடுப்புக்கள் அவர்களைை மேலும் நெருக்கமாகும். இக்கருத்தை விளக்கும் இனிய பாடல் பின்வருமாறு


சுனைவாய்ச் சிறுநீரை எய்தாதென் 

றேண்ணிப் 

பிணைமான் இனிதுண்ண வேண்டிக்

-கலைமாத்தான்

களத்தின் ஊச்சும் சுரமேன்பர் காதலர்

உள்ளம் படர்ந்த நெறி.



ஆணும் பெண்ணுமான இரு மான்கள் (கலைமான், பிணைமான்) பாலை நிலத்துு நீர்ச்சுனை ஒன்றின் முன்னே நிற்கின்றன. வரண்டுுு போன சுனையில் இருக்கும் நீர் இரண்டிற்கும் போதுமானதாக இல்லை. தான் அருந்தாவிட்டால்  பெண்மானும் அருந்தாது என்பது ஆண்மானுக்கு தெரியும் எனவே பெண்மான் அருந்தட்டும் என தான் அருந்துவது போல் பாசாங்கு செய்கிறதாம் ஆண்மான். இதுவே காதல் உள்ளங்களின் ஒழுக்கம் என்கிறார் புலவர்.


ஐந்திணை ஐம்பது முக்கியக் குறிப்பு வினா விடைகள்:

* ஐந்திணை ஐம்பது இயற்றிய நூல் ஆசிரியர் மாறன் பொறையனார்.

* ஐந்திணை ஐம்பதில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை 50 பாடல்கள்.

* ஐந்திணை ஐம்பதில் உள்ள திணைகள் எத்தனை 5 திணைகள்.

* ஐந்திணை ஐம்பதில் உள்ள திணை வைப்புமுறை முல்லை, குறிஞ்சி, மருதம்,  பாலை, நெய்தல்.

* முல்லைத் திணையைச் முதலாவதாக கொண்ட ஒரே ஒரு பதினெண்கழ்க்கணக்கு நூல்  "ஐந்திணை ஐம்பது"ஆகும்.

* ஐந்திணை ஐம்பது என பெயர் வரக் காரணம் இதிலுள்ள ஒவ்வொரு திணையிலும் பத்துப் பத்துப் பாடல்கள் இடம்பற்றுள்ளன ஆகையால் ஐந்திணை ஐம்பது என பெயர் பெற்றது.


Comments

Popular posts from this blog

சீறாப்புராணம் - உமறுப் புலவர்.

  தமிழில் எழுதப்பட்ட தலைசிறந்த இஸ்லாமிய இலக்கியம் "சீறாப்புராணம்" ஆகும். சீராபுராணம் இறைத்தூதர் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றினை மையமாகக்கொண்டு தமிழ் மரபுகளைப் பின்பற்றி எழுதப்பட்ட ஒரு காவியம் ஆகும். இத்தகைய நூலை இயற்றியவர் பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த உமறுப் புலவர் இயற்றிய நூல்தான் சீறாப்புராணம். மேலும் உமறுப்புலவர் அதே காலத்தில் வாழ்ந்த சீதக்காதியின் ஆதரவைப் பெற்றார். உமறுப் புலவர் வள்ளல் சீதக்காதியின் பெருமையை " செத்தும் கொடுத்தான் சீதக்காதி" என  சொற்றொடர் விளக்கும். சீறாப்புராணம் அமைவிடம்: சீராபுராணம் இரண்டு பாகங்களாக அமைந்துள்ளது. முதல் பாகத்தில் 44 படலங்களும், இரண்டாம் பாகத்தில் 47 பக்கங்களும் உள்ளன. சீறாப் புராணத்தில் இடம் பெறும் முதல் பாகம்: முதல் பாகத்தில் 3 காண்டங்கள் உள்ளன. இப்பாகத்தில் மொத்தம் 44 படலங்கள் உள்ளன. 1. விலாதத்துக் காண்டம். 2. நுபுவ்வத்துக் காண்டம். 3. ஷீலாஷது காண்டம். * விலாதத்துக் காண்டம்: 1. கடவுள் வாழ்த்துப் படலம் 2. நாட்டுப் படலம் 3. தலைமுறைப் படலம் 4. நபியவதாரப் படலம் 5. அலிமா முலையூர் படலம் 6. இலாஞ்சனை தரித்த படலம் 7. ...

தமிழ்விடு தூது - எத்தனை கண்ணிகள்.

தமிழ்விடு தூது - ஆசிரியர் பெயர் தெரியவில்லை. தமிழ் விடு தூது நூல் அமைப்பு: தமிழ் சிற்றிலக்கிய வகைகளுள் தூது என்பதும் ஒருவகை இலக்கியமாகும். இது வாயில் இலக்கியம், சந்து இலக்கியம் என்று வேறுு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இது 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று ஆகும். தமிழ்விடு தூது பாடல் அமைந்த விதம்: தமிழ்விடு தூது மதுரையில் கோயில் கொண்டிருக்கும் சொக்கநாதர் மீது காதல் கொண்ட பெண் ஒருத்தி தன் காதலி கூறி வருமாறு தமிழ் மொழியை தூது விடுவதாக அமைந்துள்ளதுதான் தமிழ்விடு தூது. தமிழ்விடு தூது சிறப்பு; தமிழின் பெருமையை பாட கவிஞர்கள் கையாளும் உத்திகள் பற்பல. கவிதை அதற்கு ஒரு கருவி, கிளி, அன்னம், விரலி, பணம், தந்தி என்று பல தூதுு வாயில்களை அறிந்துள்ளோம். ஆனால் தமிழையே தூதுப் பொருளாக்கிிி உள்ளது தமிழ்விடு தூது. தமிழின்   இனிமை,இலக்கிய வளம், சுவை,அழகு, திறன், தகுதி, ஆகியவற்றைை இச்சிற்றிலக்கியத்தில் தெளிவாக விளக்கியுள்ளது. தமிழ்விடு தூது முக்கிய வினா விடை குறிப்புகள்: * தமிழ்விடு தூது ஒரு சிற்றிலக்கிய வகையைச் சார்ந்தது. * தமிழ்விடு தூது வில் இடம்பெறும் கண்ணி என்பதன் பொருள் இரண்டு கண்களை போல் இ...

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்- அறநூல்கள்-நீதி நூல்கள் - புறநூல்கள் யாவை.

  பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அற நூல்கள் (அல்லது) நீதி நூல்கள் பின்வருமாறு: * நாலடியார் * நான்மணிக்கடிகை * இன்னா நாற்பது * இனியவை நாற்பது * திருக்குறள் * திரிகடுகம் * ஆசாரக்கோவை * பழமொழி நானூறு * சிறுபஞ்சமூலம் * முதுமொழிக்காஞ்சி * ஏலாதி பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அக நூல்கள் (அல்லது) அகத்திணை நூல்கள் பின்வருமாறு: * கார் நாற்பது * ஐந்திணை ஐம்பது * ஐந்திணை எழுபது * திணைமொழி ஐம்பது * திணைமாலை நூற்றைம்பது * கைந்நிலை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் புற நூல்(அல்லது) புறத்திணை நூல்கள் பின்வருமாறு: * களவழி நாற்பது பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் மற்றும் பாடல்களின் எண்ணிக்கை: நூல்கள்                                       பாடல்கள் நாலடியார்                                  400                நான்மணிக்கடிகை                ...