Skip to main content

ஐந்திணை எழுபது - திணை வைப்பு முறை-விநாயகர் வணக்கத்தை கடவுள் வாழ்த்தாக கொண்ட நூல் ஐந்திணை எழுபது

 


பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அகப்பொருள் குறித்து அமையும் நூலான சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய ஐந்திணை எழுபது என்ற நூலினை இயற்றியவர் மூவாதியார். இந்நூலில் குறிப்பிடப்படும் ஐந்து திணைகள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனும் ஐந்து வகையான பண்டைய கால தமிழ் நிலப் பரப்புகள் ஆகும்.


மூவாதியார் பற்றி சில வரிகள்:

மூவாதியார் ஐ சமணர் என்று கூறுவர் சிலர் ஆனால் இதற்குச் சான்றுகள் எதுவும் கிடையாது. இவருடைய பெயருக்கு உரிய காரணம் புலப்படவில்லை. ஒருவேளை அயன், மால், சிவன் எனும் மூன்று கடவுளுக்கும் மூலமான பரம்பொருள் இன்றுு நூலுக்கு விளக்கம் கூறலாம்.


இந்த ஐந்து திணைகளையும் பின்னணியாகக் கொண்டு திணைக்கு 14 பாடல்கள் வீதம் மொத்தம் 70 பாடல்கள் கொண்டுள்ளதால் இதனை ஐந்திணை எழுபது என்று அழைக்கப்படுகிறது.

 இந்நூலின் திணை வைப்பு முறை பற்றி சற்று விரிவாக காண்போம் இந்நூலில் முதலில் இடம்பெறும் திணை குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல். இத்திணைகளில் பாலை நிலம் முல்லையும் குறிஞ்சியும் தம் இயல்பு கெட்டு தோன்றுவதால் ஆதலால் நான்கு திணைகளுக்கும் பொதுவாய் அமைந்த திணை ஆதலால்"நடுவண் திணை" என சிறப்பிக்க பெறுவதாலும் பாலைத்திணை இதில் நடுவில் அமைக்கப்பட்டுள்ளது என்பார்கள்.


இந்நூல் அகப்பொருள் சார்ந்த திணை ஆதலால் அகப்பொருள் சார்ந்த ஏனைய பல தமிழ் இலக்கிய நூல்களை போலவே இதுவும் காதல் வயப்பட்ட உள்ளங்களின் அக உணர்வுகளை அக்கால சமூக வாழ்க்கை முறைகள் இனிதும் பண்பாட்டினதும் பின்னணியிலும் அத்தகைய வேறுபட்ட உணர்வுகளுக்கு பொருத்தமான நிலத்திணைகளில் பின்னணியிலும் எடுத்துக்கூறுகின்றது. 


எடுத்துக்காட்டாக பின்வரும் பாடல்:

இனத்த வருங்கலை பொங்க புணந்த கொடிமயங்கு முல்லை தளிர்ப்ப              இடிமயங்கி  யானும் அவரும்  வருந்த     சிருமாலை தானும் புயலும் வரும் .

  மேலும் ஆய்வுகளின் அடிப்படையில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஐந்திணை ஐம்பது இந்நூலின் அடியை ஒற்றி எழுதப்பட்டு இருக்கலாம் என ஆய்வுகள் கருதுகின்றன. எனவேதான் இவ்விரண்டு நூல்களுக்கும் இடையில் பெயர் ஒற்றுமை இருக்கிறது என ஆய்வுகள் கூறுகின்றன. மேலும் இந்நூல்களின் அடிகளும் கருத்துக்களும்  ஒன்று போலவே அமைந்துள்ளது. எடுத்துக்காட்டாக ஐந்திணை ஐம்பதில் உள்ள 38ஆம் பாட்டில் " கள்ளத்தின்  ஊச்சும் சுரம் என்பர், காதலர் உள்ளம் படைத்த நெறி" உள்ள வரிகள் அப்படியே ஐந்திணை எழுபதில் உள்ள 36 ஆம் பாட்டில் இடம்பெற்றுள்ளது.


இந்நூலைப் பற்றி தொடக்கத்தில் விநாயகரை பற்றி கடவுள் வணக்கம் பாடல் ஒன்று சில பிரதிகளில் காணப்படுகிறது.  இத்தகைய கடவுள் வாழ்த்து நூலுக்குுு புறம்பாக இருப்பதாலும் இப்பாடலுக்குுுு பழைய உரைகாரர் உரை எழுதாததாலும் இது நூலாசிரியரான மூவாதயாரால் இயற்றப்பட்டு இருக்காது என ஆய்வுகள் கருதப்படுகிறது. 

இதில் அமையும் கடவுள் வாழ்த்துப் பாடல் விநாயகர் வணக்கம் பற்றி அமைந்துள்ளது.

Comments

Popular posts from this blog

சீறாப்புராணம் - உமறுப் புலவர்.

  தமிழில் எழுதப்பட்ட தலைசிறந்த இஸ்லாமிய இலக்கியம் "சீறாப்புராணம்" ஆகும். சீராபுராணம் இறைத்தூதர் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றினை மையமாகக்கொண்டு தமிழ் மரபுகளைப் பின்பற்றி எழுதப்பட்ட ஒரு காவியம் ஆகும். இத்தகைய நூலை இயற்றியவர் பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த உமறுப் புலவர் இயற்றிய நூல்தான் சீறாப்புராணம். மேலும் உமறுப்புலவர் அதே காலத்தில் வாழ்ந்த சீதக்காதியின் ஆதரவைப் பெற்றார். உமறுப் புலவர் வள்ளல் சீதக்காதியின் பெருமையை " செத்தும் கொடுத்தான் சீதக்காதி" என  சொற்றொடர் விளக்கும். சீறாப்புராணம் அமைவிடம்: சீராபுராணம் இரண்டு பாகங்களாக அமைந்துள்ளது. முதல் பாகத்தில் 44 படலங்களும், இரண்டாம் பாகத்தில் 47 பக்கங்களும் உள்ளன. சீறாப் புராணத்தில் இடம் பெறும் முதல் பாகம்: முதல் பாகத்தில் 3 காண்டங்கள் உள்ளன. இப்பாகத்தில் மொத்தம் 44 படலங்கள் உள்ளன. 1. விலாதத்துக் காண்டம். 2. நுபுவ்வத்துக் காண்டம். 3. ஷீலாஷது காண்டம். * விலாதத்துக் காண்டம்: 1. கடவுள் வாழ்த்துப் படலம் 2. நாட்டுப் படலம் 3. தலைமுறைப் படலம் 4. நபியவதாரப் படலம் 5. அலிமா முலையூர் படலம் 6. இலாஞ்சனை தரித்த படலம் 7. ...

தமிழ்விடு தூது - எத்தனை கண்ணிகள்.

தமிழ்விடு தூது - ஆசிரியர் பெயர் தெரியவில்லை. தமிழ் விடு தூது நூல் அமைப்பு: தமிழ் சிற்றிலக்கிய வகைகளுள் தூது என்பதும் ஒருவகை இலக்கியமாகும். இது வாயில் இலக்கியம், சந்து இலக்கியம் என்று வேறுு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இது 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று ஆகும். தமிழ்விடு தூது பாடல் அமைந்த விதம்: தமிழ்விடு தூது மதுரையில் கோயில் கொண்டிருக்கும் சொக்கநாதர் மீது காதல் கொண்ட பெண் ஒருத்தி தன் காதலி கூறி வருமாறு தமிழ் மொழியை தூது விடுவதாக அமைந்துள்ளதுதான் தமிழ்விடு தூது. தமிழ்விடு தூது சிறப்பு; தமிழின் பெருமையை பாட கவிஞர்கள் கையாளும் உத்திகள் பற்பல. கவிதை அதற்கு ஒரு கருவி, கிளி, அன்னம், விரலி, பணம், தந்தி என்று பல தூதுு வாயில்களை அறிந்துள்ளோம். ஆனால் தமிழையே தூதுப் பொருளாக்கிிி உள்ளது தமிழ்விடு தூது. தமிழின்   இனிமை,இலக்கிய வளம், சுவை,அழகு, திறன், தகுதி, ஆகியவற்றைை இச்சிற்றிலக்கியத்தில் தெளிவாக விளக்கியுள்ளது. தமிழ்விடு தூது முக்கிய வினா விடை குறிப்புகள்: * தமிழ்விடு தூது ஒரு சிற்றிலக்கிய வகையைச் சார்ந்தது. * தமிழ்விடு தூது வில் இடம்பெறும் கண்ணி என்பதன் பொருள் இரண்டு கண்களை போல் இ...

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்- அறநூல்கள்-நீதி நூல்கள் - புறநூல்கள் யாவை.

  பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அற நூல்கள் (அல்லது) நீதி நூல்கள் பின்வருமாறு: * நாலடியார் * நான்மணிக்கடிகை * இன்னா நாற்பது * இனியவை நாற்பது * திருக்குறள் * திரிகடுகம் * ஆசாரக்கோவை * பழமொழி நானூறு * சிறுபஞ்சமூலம் * முதுமொழிக்காஞ்சி * ஏலாதி பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அக நூல்கள் (அல்லது) அகத்திணை நூல்கள் பின்வருமாறு: * கார் நாற்பது * ஐந்திணை ஐம்பது * ஐந்திணை எழுபது * திணைமொழி ஐம்பது * திணைமாலை நூற்றைம்பது * கைந்நிலை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் புற நூல்(அல்லது) புறத்திணை நூல்கள் பின்வருமாறு: * களவழி நாற்பது பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் மற்றும் பாடல்களின் எண்ணிக்கை: நூல்கள்                                       பாடல்கள் நாலடியார்                                  400                நான்மணிக்கடிகை                ...