Skip to main content

களவழி நாற்பது - ஒரே ஒரு புறநூல் -பதினெண் கீழ்க்கணக்கு நூல் -"களவழி நாற்பது" நூல் விளக்கம்

 


பதினெண் கீழ்க்கணக்கு நூல்களிலே புறப்பொருள் குறித்து பாடப்படும் ஒரே பாடல் "களவழி நாற்பது"இந்நூலினை சோழ மன்னனான கோச்செங்காகானுக்கும் சேரமான் கணைக்காலிரும் போறைக்கும் இடையே கழுமலத்தில் இடம்பெற்ற போரின் பின்னணியில் எழுதப்பட்டதுு தான் "களவழி நாற்பது".

களவழி நாற்பது நூலினை இயற்றியவர் பொய்கையார். இவர் சேர மன்னனுடைய நண்பர் ஆவார். அங்கு நடைபெற்ற போரில் சேரன் தோற்று கைதி ஆகிறான். அவனை விடுவிக்கும் நோக்கில் பாடப்பட்டது என வரலாறுகள் கூறுகின்றன.

இதில் உள்ள 40 பாடல்கள் அக்காலத்து போர்க்காலக் காட்சிகளையும் சோழனும் அவனது படைகளும் புரிந்த வீரப் போர் பற்றி கவி நயத்துடன் எடுத்துக்காட்டுகின்றன.

மேலும் இந்நூலில் உள்ள பெரும்பாலான பாடல்களில் யானைப் படைகளை குறிப்பிடுவது அக்காலத்தில் யானைப் படைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை அறியலாம்.


களவழி நாற்பது பெயர் வரக் காரணம்:

நெல் முதலான விளைச்சலை அடித்து    அழி தூற்றும் களத்தை பாடுவதே "ஏரோர் களவழி" எனவும் பகைவரைை அழிக்கும் போர்க்களத்தை பற்றிப் பாடுவது "தேரோர் களவழி" இவ்விரண்டில் தேரோர் களவழி கைப்பற்றி பாடுவதுதன்"களவழி நாற்பது".

இந்தக் களவழி நாற்பது நூல் பெரும்பாலும் மரபு செய்திகளையே தருகிறது. குழுமத்தில் நடைபெற்ற போர்களின் வர்ணனைகளையும் செய்கிறது. சோழமன்னன் செங்கணான் சேரமன்னன் கணக்கால் இளம் போறையை வென்று சிறையில் அடைத்தான். என்று புலவர் பொய்கையார் செங்கணான் போரைை சிறப்பித்துப் பாடி அதற்குப் பரிசாக சேரனை மீட்டார் என்றும் கூறப்படுகிறது.


களவழி நாற்பதில் இடம் பெரும் போர்கள் எங்கு நடந்தவை என்பது தெளிவான விளக்கம்:

* திருப்பூர் மாாவட்டத்தில் நடந்ததாக புறநானூற்றின் பாடல் அடி வரிகள் குறிப்பிடுகிறது.

* களவழி நாற்பதுக்கு உரை எழுதியோர் கழுமலம் எனும் ஊரில் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

* புறநானூற்றுக் கணைக்கால் இரும்பொறை சிறைச்சாலையில் உயிர் துறந்தான்.

* களவழி நாற்பதின்  கணைக்கால் இரும்பொறை சிறையிலிருந்து மீட்கப்பட்டான்.



களவழி நாற்பது முக்கிய குறிப்புகள்:

* களவழி நாற்பது நூலின் ஆசிரியர் பொய்கையார்.

* களவழி நாற்பதின் பாடல்களின் எண்ணிக்கை இந்நூல் போர்க்கால அடிப்படையில் 40 பாடல்களைக் கொண்டது.

* களவழி நாற்பது ஒரு புறப்பொருள் நூலாகும்.

* களவழி நாற்பது எத்தனை வகைப்படும் இரண்டு வகைப்படும் அவை யாவன

* போர்க்களக் களவழி                                     * ஏர்கல களவழி 

* களவழி நாற்பதில் இடம்பெறும் பாடல்களில் கடைசியில் அட்ட களத்து என முடியும்.

* களவழி நாற்பது பரணி இலக்கியம் தோன்ற காரணமாக இருந்தது.

* களவழி நாற்பதின் வேறு பெயர் பரணி நூலின் தோற்றுவாய் எனவும் அழைக்கப்படுகிறது.


Comments

Popular posts from this blog

சீறாப்புராணம் - உமறுப் புலவர்.

  தமிழில் எழுதப்பட்ட தலைசிறந்த இஸ்லாமிய இலக்கியம் "சீறாப்புராணம்" ஆகும். சீராபுராணம் இறைத்தூதர் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றினை மையமாகக்கொண்டு தமிழ் மரபுகளைப் பின்பற்றி எழுதப்பட்ட ஒரு காவியம் ஆகும். இத்தகைய நூலை இயற்றியவர் பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த உமறுப் புலவர் இயற்றிய நூல்தான் சீறாப்புராணம். மேலும் உமறுப்புலவர் அதே காலத்தில் வாழ்ந்த சீதக்காதியின் ஆதரவைப் பெற்றார். உமறுப் புலவர் வள்ளல் சீதக்காதியின் பெருமையை " செத்தும் கொடுத்தான் சீதக்காதி" என  சொற்றொடர் விளக்கும். சீறாப்புராணம் அமைவிடம்: சீராபுராணம் இரண்டு பாகங்களாக அமைந்துள்ளது. முதல் பாகத்தில் 44 படலங்களும், இரண்டாம் பாகத்தில் 47 பக்கங்களும் உள்ளன. சீறாப் புராணத்தில் இடம் பெறும் முதல் பாகம்: முதல் பாகத்தில் 3 காண்டங்கள் உள்ளன. இப்பாகத்தில் மொத்தம் 44 படலங்கள் உள்ளன. 1. விலாதத்துக் காண்டம். 2. நுபுவ்வத்துக் காண்டம். 3. ஷீலாஷது காண்டம். * விலாதத்துக் காண்டம்: 1. கடவுள் வாழ்த்துப் படலம் 2. நாட்டுப் படலம் 3. தலைமுறைப் படலம் 4. நபியவதாரப் படலம் 5. அலிமா முலையூர் படலம் 6. இலாஞ்சனை தரித்த படலம் 7. ...

தமிழ்விடு தூது - எத்தனை கண்ணிகள்.

தமிழ்விடு தூது - ஆசிரியர் பெயர் தெரியவில்லை. தமிழ் விடு தூது நூல் அமைப்பு: தமிழ் சிற்றிலக்கிய வகைகளுள் தூது என்பதும் ஒருவகை இலக்கியமாகும். இது வாயில் இலக்கியம், சந்து இலக்கியம் என்று வேறுு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இது 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று ஆகும். தமிழ்விடு தூது பாடல் அமைந்த விதம்: தமிழ்விடு தூது மதுரையில் கோயில் கொண்டிருக்கும் சொக்கநாதர் மீது காதல் கொண்ட பெண் ஒருத்தி தன் காதலி கூறி வருமாறு தமிழ் மொழியை தூது விடுவதாக அமைந்துள்ளதுதான் தமிழ்விடு தூது. தமிழ்விடு தூது சிறப்பு; தமிழின் பெருமையை பாட கவிஞர்கள் கையாளும் உத்திகள் பற்பல. கவிதை அதற்கு ஒரு கருவி, கிளி, அன்னம், விரலி, பணம், தந்தி என்று பல தூதுு வாயில்களை அறிந்துள்ளோம். ஆனால் தமிழையே தூதுப் பொருளாக்கிிி உள்ளது தமிழ்விடு தூது. தமிழின்   இனிமை,இலக்கிய வளம், சுவை,அழகு, திறன், தகுதி, ஆகியவற்றைை இச்சிற்றிலக்கியத்தில் தெளிவாக விளக்கியுள்ளது. தமிழ்விடு தூது முக்கிய வினா விடை குறிப்புகள்: * தமிழ்விடு தூது ஒரு சிற்றிலக்கிய வகையைச் சார்ந்தது. * தமிழ்விடு தூது வில் இடம்பெறும் கண்ணி என்பதன் பொருள் இரண்டு கண்களை போல் இ...

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்- அறநூல்கள்-நீதி நூல்கள் - புறநூல்கள் யாவை.

  பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அற நூல்கள் (அல்லது) நீதி நூல்கள் பின்வருமாறு: * நாலடியார் * நான்மணிக்கடிகை * இன்னா நாற்பது * இனியவை நாற்பது * திருக்குறள் * திரிகடுகம் * ஆசாரக்கோவை * பழமொழி நானூறு * சிறுபஞ்சமூலம் * முதுமொழிக்காஞ்சி * ஏலாதி பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அக நூல்கள் (அல்லது) அகத்திணை நூல்கள் பின்வருமாறு: * கார் நாற்பது * ஐந்திணை ஐம்பது * ஐந்திணை எழுபது * திணைமொழி ஐம்பது * திணைமாலை நூற்றைம்பது * கைந்நிலை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் புற நூல்(அல்லது) புறத்திணை நூல்கள் பின்வருமாறு: * களவழி நாற்பது பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் மற்றும் பாடல்களின் எண்ணிக்கை: நூல்கள்                                       பாடல்கள் நாலடியார்                                  400                நான்மணிக்கடிகை                ...