Skip to main content

சிறுபஞ்சமூலம் - தமிழ் விக்கிமூலம்

"மா"என்ற அடைமொழி கொண்டு பாயிர செய்யுளில் சிறப்பித்து அழைக்கப்படும் சமண புலவர்களில் ஒருவரான 97 செய்யுள்கள் கொண்ட பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் நீதி நூல்களில் ஒன்றான நான்கு அடிகளால் அமைந்த 100 பாடல்களைக் கொண்ட "மா"என்ற அடைமொழியுடன் அழைக்கப்படும் "காரியாசனால் இயற்றப்பட்ட சிறுபஞ்சமூலம் "என்ற நீதிிநூல் உண்மைப் பற்றி விரிவாக காண்போம்.

இந்நூலில் அமைந்துள்ள ஒவ்வொரு பாடலும் நீதி புகட்டுவதற்காக எடுத்துக்கொண்ட கருப்பொருள் தொடர்பான ஐந்து விடயங்களை எடுத்துரைக்கிறது. ஆனால் அனைத்து பாடல்களிலும் ஐந்து விடயங்கள் இருப்பதில்லை என்ற காரணத்தினால் இந்நூலினை சிறுபஞ்சமூலம் என்று அழைக்கப்படுகிறது. சிறுபஞ்சமூலம் காரியாசன் என்ற சமண புலவரால் இயற்றப்பட்டது.


சிறுபஞ்சமூலம் பெயர் காரணம்:
பஞ்சம்  என்றால் 5 என்றும், மூலம் என்றால்  வேர் என்பது பொருளாகும். பண்டைய காலத்தில் தமிழர் மருத்துவத்தில் உடல் நோய்களை தீர்ப்பதற்கு கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சில் ஆகிய ஐந்தின் வேர்களை சேர்த்து மருந்தாக்குவது போல ஐந்து விடயங்கள் மூலம் நீதியை போதித்து இந்நூல் ஒழுக்கக்கேட்கு மருந்தாகிறது.

சிறுபஞ்சமூலத்தினை இயற்றிய காரியாசன் ஐந்தாம் நூற்றாண்டைச் சார்ந்தவர் இவரும் கணிமேதாவியர் என்பவரும் நெருங்கிய நண்பர்கள். ஆகையால் இருவருமே சமண சமயத்தைச் சார்ந்தவர் ஆவார். மேலும் காரியாசன் மதுரைத் தமிழாசிரியர் மகாயணர் மாணவர் ஆவார். காரியாசன் என் இயற்பெயர் காரி. ஆசான் என்பது தொழிலின் அடிப்படையில் அமைந்த பெயர்.

சிறுபஞ்சமூலத்தில் இடம்பெறும் முக்கிய பாடல் வரிகளில் ஒன்று "பூவாது மரம் காய்க்கும்  நன்று அறியார்"இப்பாடல் மக்களின் அறியாமையைை பற்றி விளக்குகிறது.


சிறுபஞ்சமூலத்தில் சிறப்பு:

மனித வாழ்க்கையை செளுமையாக்குபவை  றப் பண்புகளே காலந்தோறும் அறக்கருத்துக்களை  கூறும் இலக்கியங்கள் தோன்றி வருகின்றன. அவற்றுள் ஒன்றுதான் சிறுபஞ்சமூலம் எனும் நூல் வயதுக்கும், அறிவிக்கும் சில நேரங்களில் தொடர்பில்லை ஆகையால் சாதனைக்கு  வயது ஒரு தடையில்லை என்று  தெளிவாக உணர்த்துகிறதுு.


சிறுபஞ்சமூலத்தின் முக்கியமான பாடல்:

பூவாது காய்க்கும் மரம் உள; நன்று அறிவார்,

மூவாது மூத்தவர், நூல் வல்லார்; தாவா

விதையாமை நாறுவ வித்துஉள; மேதைக்கு

உரையாமை செல்லும் உணர்வு.


பாடலின் பொருள்:

பூக்காமலே சில மரங்கள் காய்ப்பது உண்டு. இதைப்போலவே நன்மை தீமைகளை நன்கு உணர்ந்தவர் வயதில் இளையவராக இருந்தாலும் அவர் மூத்தவரோடு வைத்து எண்ணத் தகுந்த வராவார். பாத்தி அமைத்து விதை விதைக்காமலே தானே முளைத்து வளரும் விதைகளும் உள்ளன. அதைப் போலவே மேதை யாவரும் பிறர் உணர்த்தாமல் தாமே வளர்ந்து கொள்வார்.


பாடலில் இடம்பெறும் அணி :

எடுத்துக்காட்டு உவமையணி 


Comments

Popular posts from this blog

சீறாப்புராணம் - உமறுப் புலவர்.

  தமிழில் எழுதப்பட்ட தலைசிறந்த இஸ்லாமிய இலக்கியம் "சீறாப்புராணம்" ஆகும். சீராபுராணம் இறைத்தூதர் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றினை மையமாகக்கொண்டு தமிழ் மரபுகளைப் பின்பற்றி எழுதப்பட்ட ஒரு காவியம் ஆகும். இத்தகைய நூலை இயற்றியவர் பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த உமறுப் புலவர் இயற்றிய நூல்தான் சீறாப்புராணம். மேலும் உமறுப்புலவர் அதே காலத்தில் வாழ்ந்த சீதக்காதியின் ஆதரவைப் பெற்றார். உமறுப் புலவர் வள்ளல் சீதக்காதியின் பெருமையை " செத்தும் கொடுத்தான் சீதக்காதி" என  சொற்றொடர் விளக்கும். சீறாப்புராணம் அமைவிடம்: சீராபுராணம் இரண்டு பாகங்களாக அமைந்துள்ளது. முதல் பாகத்தில் 44 படலங்களும், இரண்டாம் பாகத்தில் 47 பக்கங்களும் உள்ளன. சீறாப் புராணத்தில் இடம் பெறும் முதல் பாகம்: முதல் பாகத்தில் 3 காண்டங்கள் உள்ளன. இப்பாகத்தில் மொத்தம் 44 படலங்கள் உள்ளன. 1. விலாதத்துக் காண்டம். 2. நுபுவ்வத்துக் காண்டம். 3. ஷீலாஷது காண்டம். * விலாதத்துக் காண்டம்: 1. கடவுள் வாழ்த்துப் படலம் 2. நாட்டுப் படலம் 3. தலைமுறைப் படலம் 4. நபியவதாரப் படலம் 5. அலிமா முலையூர் படலம் 6. இலாஞ்சனை தரித்த படலம் 7. ...

தமிழ்விடு தூது - எத்தனை கண்ணிகள்.

தமிழ்விடு தூது - ஆசிரியர் பெயர் தெரியவில்லை. தமிழ் விடு தூது நூல் அமைப்பு: தமிழ் சிற்றிலக்கிய வகைகளுள் தூது என்பதும் ஒருவகை இலக்கியமாகும். இது வாயில் இலக்கியம், சந்து இலக்கியம் என்று வேறுு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இது 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று ஆகும். தமிழ்விடு தூது பாடல் அமைந்த விதம்: தமிழ்விடு தூது மதுரையில் கோயில் கொண்டிருக்கும் சொக்கநாதர் மீது காதல் கொண்ட பெண் ஒருத்தி தன் காதலி கூறி வருமாறு தமிழ் மொழியை தூது விடுவதாக அமைந்துள்ளதுதான் தமிழ்விடு தூது. தமிழ்விடு தூது சிறப்பு; தமிழின் பெருமையை பாட கவிஞர்கள் கையாளும் உத்திகள் பற்பல. கவிதை அதற்கு ஒரு கருவி, கிளி, அன்னம், விரலி, பணம், தந்தி என்று பல தூதுு வாயில்களை அறிந்துள்ளோம். ஆனால் தமிழையே தூதுப் பொருளாக்கிிி உள்ளது தமிழ்விடு தூது. தமிழின்   இனிமை,இலக்கிய வளம், சுவை,அழகு, திறன், தகுதி, ஆகியவற்றைை இச்சிற்றிலக்கியத்தில் தெளிவாக விளக்கியுள்ளது. தமிழ்விடு தூது முக்கிய வினா விடை குறிப்புகள்: * தமிழ்விடு தூது ஒரு சிற்றிலக்கிய வகையைச் சார்ந்தது. * தமிழ்விடு தூது வில் இடம்பெறும் கண்ணி என்பதன் பொருள் இரண்டு கண்களை போல் இ...

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்- அறநூல்கள்-நீதி நூல்கள் - புறநூல்கள் யாவை.

  பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அற நூல்கள் (அல்லது) நீதி நூல்கள் பின்வருமாறு: * நாலடியார் * நான்மணிக்கடிகை * இன்னா நாற்பது * இனியவை நாற்பது * திருக்குறள் * திரிகடுகம் * ஆசாரக்கோவை * பழமொழி நானூறு * சிறுபஞ்சமூலம் * முதுமொழிக்காஞ்சி * ஏலாதி பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அக நூல்கள் (அல்லது) அகத்திணை நூல்கள் பின்வருமாறு: * கார் நாற்பது * ஐந்திணை ஐம்பது * ஐந்திணை எழுபது * திணைமொழி ஐம்பது * திணைமாலை நூற்றைம்பது * கைந்நிலை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் புற நூல்(அல்லது) புறத்திணை நூல்கள் பின்வருமாறு: * களவழி நாற்பது பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் மற்றும் பாடல்களின் எண்ணிக்கை: நூல்கள்                                       பாடல்கள் நாலடியார்                                  400                நான்மணிக்கடிகை                ...