இனியவை நாற்பது பூதஞ்சேந்தனார்
பூதஞ்சேந்தனார் ஆசிரியர் வரலாறு:
பாண்டிய நாட்டின் தலைநகரான மதுரையில் தமிழாசிரியராக பணியாற்றிய பூதன் என்பவரின் மகன்தான் பூதஞ்சேந்தனார். இவர் சிவன், திருமால், பிரமன் இவர்கள் மூவரையும் பாடியுள்ளார். இத்தகைய காரணத்தால் இவரை "சமயம் வைதீகம்" என்று அழைக்கப்படுவர்.இவர் சர்வசமயநோக்கு உடையவராய் இருக்க வேண்டும் எனக் கருதப்படுகிறது. பூதஞ்சேந்தனார் பிரம்மனை போற்றுவதால் இவர் கிபி ஏழாம் நூற்றாண்டிற்கு பிந்தியர் என்று வரலாறு கூறுகின்றது. இவரின் காலம் கி.பி. 725 முதல் 750 வரை என கருதப்படுகின்றது.
இனியவை நாற்பது நூல் குறிப்பு:
இனியவை நாற்பது கடவுள் வாழ்த்துப்பாடல் நீங்களாக 40 செய்யுட்களைக் கொண்டது. இவற்றுள் "ஊரும் கலிமா"எனத் தொடங்கும் பாடல் மட்டுமே 8 வெண்பா(பறோடை) மற்றவை எல்லாம் இன்னிசைை வெண்பாக்கள். இந்நூலில் வரும் கருத்துக்கள் எல்லாம் இனிது என தலைப்பில் அமைந்திருப்பதால் இதனை" இனியவை நாற்பது"என அழைக்கப்பட்டது.
இனியவை நாற்பதின் கடவுள் வாழ்த்துப் பாடல்கள்:
கண்மூன் றுடைத்தான் சேர்தல் -கடித்தினிதே
தொல்மான் துழாய்மாலை யானைத் - தொழலினிதே முன்துறபேணி முகநாள் குடையணச்
சென்றமர்த் தேத்தல் இனிது.
இப்பாடலில் குறிப்பிடப்படும் அருஞ்சொற்பொருள்
கண்மூன்றுடையான் -சிவபெருமான்
துழாய்மாலையன் -திருமால் பெருமாள்
முகநான்குடையான் - பிரமன்
யாத்தல் - போற்றி துதித்தல்.
இனியவை நாற்பது முக்கிய குறிப்புகள்:
*பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
* பெண்ணை இழிவுபடுத்தி நஞ்சாக கூறும் முறையை முதன் முதலில் விளக்கும் நூல்.
*இனியவை நாற்பது கடவுள் வாழ்த்துப் பாடலுடன் உட்பட 40 வெண்பாக்களை கொண்டது.
* இந்நூலின் நோக்கம் என்னவென்றால் உலகின் நல்ல அல்லது இனிமையான விஷயங்களை மட்டுமே கூறும் வல்லமை கொண்டது.
* ஒவ்வொரு பாடலும் இவை இவை இனியவை என செப்புகிறது.
* ஒவ்வொரு பாடலும் மூன்று நல்ல விஷயங்களை எடுத்துரைக்கின்றது.
* வாழ்க்கைக்கு வேண்டிய இனிய பொருட்களை 40 பாடல்களில் சுவைபடக் கூறுகிறது.
* மும்மூர்த்திகளும் கடவுள் வாழ்த்து பாடல் இடம் பெற்ற நூல் இனியவை நாற்பது.
* மும்மூர்த்திகள் - சிவன், திருமால், பிரம்மன்.
* சிவன் சேர்ந்த சமயம் - சைவ சமயம்
* திருமால் சேர்ந்த சமயம் - வைணவ சமயம்
* பிரம்மன் சேர்ந்த சமயம் - வைதிக சமயம்
*இனியவை நாற்பதின் வேறு பெயர்கள்
"இனிது நாற்பது, இனியவை நாற்பது, இனிய நாற்பது"
* இனியவை நாற்பதின் ஆசிரியர் - மதுரை தமிழ் ஆசிரியர் மகனார் பூதஞ்சேந்தனார்
* இனியவை நாற்பதில் இடம்பெறும் சிறந்த தொடர்கள்
"மான மழிந்தபின் வாழாமை முன்னினிது"
"யவரைக் கைவழிந்து வாழ்தனிது"