Skip to main content

இனியவை நாற்பது நூல் குறிப்பு

இனியவை நாற்பது                                                                               பூதஞ்சேந்தனார்

பூதஞ்சேந்தனார் ஆசிரியர் வரலாறு:

பாண்டிய நாட்டின் தலைநகரான மதுரையில் தமிழாசிரியராக பணியாற்றிய பூதன் என்பவரின் மகன்தான் பூதஞ்சேந்தனார். இவர் சிவன், திருமால், பிரமன் இவர்கள் மூவரையும் பாடியுள்ளார். இத்தகைய காரணத்தால் இவரை "சமயம் வைதீகம்" என்று அழைக்கப்படுவர்.இவர் சர்வசமயநோக்கு உடையவராய் இருக்க வேண்டும் எனக் கருதப்படுகிறது. பூதஞ்சேந்தனார் பிரம்மனை போற்றுவதால் இவர் கிபி ஏழாம் நூற்றாண்டிற்கு பிந்தியர் என்று வரலாறு கூறுகின்றது. இவரின் காலம் கி.பி. 725 முதல் 750 வரை என கருதப்படுகின்றது.

இனியவை நாற்பது நூல் குறிப்பு:

இனியவை நாற்பது கடவுள் வாழ்த்துப்பாடல் நீங்களாக 40 செய்யுட்களைக் கொண்டது. இவற்றுள் "ஊரும் கலிமா"எனத் தொடங்கும் பாடல் மட்டுமே 8 வெண்பா(பறோடை) மற்றவை எல்லாம் இன்னிசைை வெண்பாக்கள். இந்நூலில் வரும் கருத்துக்கள் எல்லாம் இனிது என தலைப்பில் அமைந்திருப்பதால் இதனைஇனியவை நாற்பது"என அழைக்கப்பட்டது.


இனியவை நாற்பதின் கடவுள் வாழ்த்துப் பாடல்கள்:

கண்மூன் றுடைத்தான் சேர்தல்                                                                  -கடித்தினிதே 

தொல்மான் துழாய்மாலை யானைத்                                                - தொழலினிதே     முன்துறபேணி முகநாள் குடையணச் 

சென்றமர்த் தேத்தல் இனிது.


இப்பாடலில் குறிப்பிடப்படும் அருஞ்சொற்பொருள் 

கண்மூன்றுடையான் -சிவபெருமான்

துழாய்மாலையன் -திருமால் பெருமாள்

முகநான்குடையான் - பிரமன்

யாத்தல் - போற்றி துதித்தல்.


இனியவை நாற்பது முக்கிய குறிப்புகள்:

*பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.

* பெண்ணை இழிவுபடுத்தி நஞ்சாக கூறும் முறையை முதன் முதலில் விளக்கும் நூல்.

*இனியவை நாற்பது கடவுள் வாழ்த்துப் பாடலுடன் உட்பட 40 வெண்பாக்களை கொண்டது.

* இந்நூலின் நோக்கம் என்னவென்றால் உலகின் நல்ல அல்லது இனிமையான விஷயங்களை மட்டுமே கூறும் வல்லமை கொண்டது.

* ஒவ்வொரு பாடலும் இவை இவை இனியவை என செப்புகிறது.

* ஒவ்வொரு பாடலும் மூன்று நல்ல விஷயங்களை எடுத்துரைக்கின்றது.

* வாழ்க்கைக்கு வேண்டிய இனிய பொருட்களை 40 பாடல்களில் சுவைபடக் கூறுகிறது.

* மும்மூர்த்திகளும் கடவுள் வாழ்த்து பாடல் இடம் பெற்ற நூல் இனியவை நாற்பது.

* மும்மூர்த்திகள் - சிவன், திருமால், பிரம்மன்.

* சிவன் சேர்ந்த சமயம் - சைவ சமயம்

* திருமால் சேர்ந்த சமயம் - வைணவ சமயம்

* பிரம்மன் சேர்ந்த சமயம் - வைதிக சமயம்

*இனியவை நாற்பதின் வேறு பெயர்கள்

"இனிது நாற்பது, இனியவை நாற்பது, இனிய நாற்பது"

* இனியவை நாற்பதின் ஆசிரியர் - மதுரை தமிழ் ஆசிரியர் மகனார் பூதஞ்சேந்தனார்

* இனியவை நாற்பதில் இடம்பெறும் சிறந்த தொடர்கள் 

"மான மழிந்தபின் வாழாமை முன்னினிது"

"யவரைக் கைவழிந்து வாழ்தனிது"



Comments

Popular posts from this blog

சீறாப்புராணம் - உமறுப் புலவர்.

  தமிழில் எழுதப்பட்ட தலைசிறந்த இஸ்லாமிய இலக்கியம் "சீறாப்புராணம்" ஆகும். சீராபுராணம் இறைத்தூதர் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றினை மையமாகக்கொண்டு தமிழ் மரபுகளைப் பின்பற்றி எழுதப்பட்ட ஒரு காவியம் ஆகும். இத்தகைய நூலை இயற்றியவர் பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த உமறுப் புலவர் இயற்றிய நூல்தான் சீறாப்புராணம். மேலும் உமறுப்புலவர் அதே காலத்தில் வாழ்ந்த சீதக்காதியின் ஆதரவைப் பெற்றார். உமறுப் புலவர் வள்ளல் சீதக்காதியின் பெருமையை " செத்தும் கொடுத்தான் சீதக்காதி" என  சொற்றொடர் விளக்கும். சீறாப்புராணம் அமைவிடம்: சீராபுராணம் இரண்டு பாகங்களாக அமைந்துள்ளது. முதல் பாகத்தில் 44 படலங்களும், இரண்டாம் பாகத்தில் 47 பக்கங்களும் உள்ளன. சீறாப் புராணத்தில் இடம் பெறும் முதல் பாகம்: முதல் பாகத்தில் 3 காண்டங்கள் உள்ளன. இப்பாகத்தில் மொத்தம் 44 படலங்கள் உள்ளன. 1. விலாதத்துக் காண்டம். 2. நுபுவ்வத்துக் காண்டம். 3. ஷீலாஷது காண்டம். * விலாதத்துக் காண்டம்: 1. கடவுள் வாழ்த்துப் படலம் 2. நாட்டுப் படலம் 3. தலைமுறைப் படலம் 4. நபியவதாரப் படலம் 5. அலிமா முலையூர் படலம் 6. இலாஞ்சனை தரித்த படலம் 7. ...

தமிழ்விடு தூது - எத்தனை கண்ணிகள்.

தமிழ்விடு தூது - ஆசிரியர் பெயர் தெரியவில்லை. தமிழ் விடு தூது நூல் அமைப்பு: தமிழ் சிற்றிலக்கிய வகைகளுள் தூது என்பதும் ஒருவகை இலக்கியமாகும். இது வாயில் இலக்கியம், சந்து இலக்கியம் என்று வேறுு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இது 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று ஆகும். தமிழ்விடு தூது பாடல் அமைந்த விதம்: தமிழ்விடு தூது மதுரையில் கோயில் கொண்டிருக்கும் சொக்கநாதர் மீது காதல் கொண்ட பெண் ஒருத்தி தன் காதலி கூறி வருமாறு தமிழ் மொழியை தூது விடுவதாக அமைந்துள்ளதுதான் தமிழ்விடு தூது. தமிழ்விடு தூது சிறப்பு; தமிழின் பெருமையை பாட கவிஞர்கள் கையாளும் உத்திகள் பற்பல. கவிதை அதற்கு ஒரு கருவி, கிளி, அன்னம், விரலி, பணம், தந்தி என்று பல தூதுு வாயில்களை அறிந்துள்ளோம். ஆனால் தமிழையே தூதுப் பொருளாக்கிிி உள்ளது தமிழ்விடு தூது. தமிழின்   இனிமை,இலக்கிய வளம், சுவை,அழகு, திறன், தகுதி, ஆகியவற்றைை இச்சிற்றிலக்கியத்தில் தெளிவாக விளக்கியுள்ளது. தமிழ்விடு தூது முக்கிய வினா விடை குறிப்புகள்: * தமிழ்விடு தூது ஒரு சிற்றிலக்கிய வகையைச் சார்ந்தது. * தமிழ்விடு தூது வில் இடம்பெறும் கண்ணி என்பதன் பொருள் இரண்டு கண்களை போல் இ...

நாலடியார் நூல் விளக்கம் மற்றும் ஆசிரியர்கள் முழு விளக்கம்

  1. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் முதன்மையான பாடப்படும் நூல் "நாலடியார்" 2. தமிழ் மொழிகளில் திருக்குறளோடு ஒப்பிட்ட பாடப்படும் நூல் "நாலடியார்" 3. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் உள்ள ஒரே ஒரு தொகை நூல் "நாலடியார்" 4 . முப்பெரும் அற நூல்களில் ஒன்றாக திகழும் நூல் "நாலடியார்" 5. முப்பெரும் நூல்கள் யாவை "திருக்குறள்" "நாலடியார்" "பழமொழி நானூறு" 6. துறவறத்தையும், நிலையாமையும் அதிகமாக வலியுறுத்தி பாடப்பட்ட நூல் "நாலடியார்" 7. திருக்குறளைப் போன்று வகை தொகை கொண்டு வடிவமைக்கப்பட்ட நூல் "நாலடியார்" 8 . நாலடியார் பிரித்து எழுதுக "நாலடி  + ஆர்" 9. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் அறம் சார்ந்த நூல் எது "நாலடியார்" 10 . நாலடியார் என பெயர் வரக் காரணம் "நாலடி கொண்ட வெண்பாவால் எழுதப்பட்டதால் நாலடியார் என பெயர் பெற்றது" 11. நாலடியார் பாடலைப் பாடியவர்கள் "சமணமுனிவர்கள் பலரால்" 12 . நாலடியார் அடி எல்லை "4 அடிகள்" 13. நாலடியார் பாடல் உணர்த்தும் பொருள் "அறம் -...