Skip to main content

திருமுருகாற்றுப்படை நூல் விளக்கம்

பன்னிருதிருமுறை பகுப்பில் ஒரு பகுதியாக சேர்க்கப்பட்டிருக்கும் தொகைநூல்
   "திருமுருகாற்றுப்படை"

பத்து பாட்டுக்கு கடவுள் வாழ்த்து போல் அமைந்திருக்கும் நூல்
    "திருமுருகாற்றுப்படை"

முருகன் கடவுளின் அறுபடை வீடு குறித்து எடுத்துரைக்கும் நூல் 
     "திருமுருகாற்றுப்படை'

பத்துப்பாட்டு நூல்களுள் காலத்தால் பிந்தியதாகக் கருதப்படும் நூல்
    "திருமுருகாற்றுப்படை"

திருமுருகாற்றுப்படை பிரித்து எழுதுக
  "திருமுருகு + ஆற்றுப்படை"

முருகப்பெருமானைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு அவரைப்பற்றி முழுமையான செய்திகளை கூறும் நூல்
    "திருமுருகாற்றுப்படை"

திருமுருகாற்றுப்படை பாடலாசிரியர்
  "மதுரைக் கணக்காயர் மகனார் நக்கீரர்'

திருமுருகாற்றுப்படை அடிவரையரை
   "317"

திருமுருகாற்றுப்படை ஒரு
    "புறப்பொருள் நூலாகும்"

திருமுருகாற்றுப்படையின் பாவகை
    "ஆசிரியப்பா"

திருமுருகனின் அருளைப்பற ஆற்று படுத்துகின்ற ஒரு ஆற்றுப்படை நூல்
    "திருமுருகாற்றுப்படை'

ஆற்றுப்படை என்பதன் பொருள்
  "வழிப்படுத்தல்"
  "வழிகாட்டுதல்"

திருமுருகாற்றுப்படை விளக்கம்:
  பரிசு பெற்ற ஒருவர் தன்னைப்போல் பரிசு பெறப் போகும் மற்றவரை தன்னைப்போல் பயனடைய வேண்டி தான் பரிசு பெற்ற வள்ளல் இடமோ   அரசரிடமோ வழிபடுவதே ஆற்றுப்படை ஆகும்.
 ஆனால் திருமுருகாற்றுப் படையின் சிறப்பு வீடுபேறு பெறுவதற்கு பக்குவமடைந்த ஒருவனை வீடுபேறு பெற்ற ஒருவன் வழி நடத்துவதாக அமைந்திருப்பது . 
அதுமட்டுமன்றி ஆற்றுப்படை நூல்கள் எல்லாம் பரிசில் பெற செல்வோரால் பெயர்பெறும்.
அம் முறைக்கு மாறாக பரிசில் கொடுப்போரால் பெயர் பெற்றது திருமுருகாற்றுப்படை.

இதில் குறிப்பிடப்படும் முருகப்பெருமானின் "அறுபடை வீடுகள்"பின்வருமாறு:

   
     "திருப்பரங்குன்றம்
     "திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்)
    "திருவாவினன்குடி (பழனி)
    "திருவேரகம் (சுவாமிமலை)
    "குன்றுதோறாடல் (திருத்தணி)
    "பழமுதிர்ச்சோலை"

திருமுருகாற்றுப்படையின் வேறு பெயர்கள்
         "முருகு"
         "புலவராற்றுப்படை"

திருமுருகாற்றுப்படையை முதலில் பதிப்பித்தவர்
         "சரவணப் பெருமாள் ஐயர்"

Comments

Popular posts from this blog

சீறாப்புராணம் - உமறுப் புலவர்.

  தமிழில் எழுதப்பட்ட தலைசிறந்த இஸ்லாமிய இலக்கியம் "சீறாப்புராணம்" ஆகும். சீராபுராணம் இறைத்தூதர் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றினை மையமாகக்கொண்டு தமிழ் மரபுகளைப் பின்பற்றி எழுதப்பட்ட ஒரு காவியம் ஆகும். இத்தகைய நூலை இயற்றியவர் பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த உமறுப் புலவர் இயற்றிய நூல்தான் சீறாப்புராணம். மேலும் உமறுப்புலவர் அதே காலத்தில் வாழ்ந்த சீதக்காதியின் ஆதரவைப் பெற்றார். உமறுப் புலவர் வள்ளல் சீதக்காதியின் பெருமையை " செத்தும் கொடுத்தான் சீதக்காதி" என  சொற்றொடர் விளக்கும். சீறாப்புராணம் அமைவிடம்: சீராபுராணம் இரண்டு பாகங்களாக அமைந்துள்ளது. முதல் பாகத்தில் 44 படலங்களும், இரண்டாம் பாகத்தில் 47 பக்கங்களும் உள்ளன. சீறாப் புராணத்தில் இடம் பெறும் முதல் பாகம்: முதல் பாகத்தில் 3 காண்டங்கள் உள்ளன. இப்பாகத்தில் மொத்தம் 44 படலங்கள் உள்ளன. 1. விலாதத்துக் காண்டம். 2. நுபுவ்வத்துக் காண்டம். 3. ஷீலாஷது காண்டம். * விலாதத்துக் காண்டம்: 1. கடவுள் வாழ்த்துப் படலம் 2. நாட்டுப் படலம் 3. தலைமுறைப் படலம் 4. நபியவதாரப் படலம் 5. அலிமா முலையூர் படலம் 6. இலாஞ்சனை தரித்த படலம் 7. ...

தமிழ்விடு தூது - எத்தனை கண்ணிகள்.

தமிழ்விடு தூது - ஆசிரியர் பெயர் தெரியவில்லை. தமிழ் விடு தூது நூல் அமைப்பு: தமிழ் சிற்றிலக்கிய வகைகளுள் தூது என்பதும் ஒருவகை இலக்கியமாகும். இது வாயில் இலக்கியம், சந்து இலக்கியம் என்று வேறுு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இது 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று ஆகும். தமிழ்விடு தூது பாடல் அமைந்த விதம்: தமிழ்விடு தூது மதுரையில் கோயில் கொண்டிருக்கும் சொக்கநாதர் மீது காதல் கொண்ட பெண் ஒருத்தி தன் காதலி கூறி வருமாறு தமிழ் மொழியை தூது விடுவதாக அமைந்துள்ளதுதான் தமிழ்விடு தூது. தமிழ்விடு தூது சிறப்பு; தமிழின் பெருமையை பாட கவிஞர்கள் கையாளும் உத்திகள் பற்பல. கவிதை அதற்கு ஒரு கருவி, கிளி, அன்னம், விரலி, பணம், தந்தி என்று பல தூதுு வாயில்களை அறிந்துள்ளோம். ஆனால் தமிழையே தூதுப் பொருளாக்கிிி உள்ளது தமிழ்விடு தூது. தமிழின்   இனிமை,இலக்கிய வளம், சுவை,அழகு, திறன், தகுதி, ஆகியவற்றைை இச்சிற்றிலக்கியத்தில் தெளிவாக விளக்கியுள்ளது. தமிழ்விடு தூது முக்கிய வினா விடை குறிப்புகள்: * தமிழ்விடு தூது ஒரு சிற்றிலக்கிய வகையைச் சார்ந்தது. * தமிழ்விடு தூது வில் இடம்பெறும் கண்ணி என்பதன் பொருள் இரண்டு கண்களை போல் இ...

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்- அறநூல்கள்-நீதி நூல்கள் - புறநூல்கள் யாவை.

  பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அற நூல்கள் (அல்லது) நீதி நூல்கள் பின்வருமாறு: * நாலடியார் * நான்மணிக்கடிகை * இன்னா நாற்பது * இனியவை நாற்பது * திருக்குறள் * திரிகடுகம் * ஆசாரக்கோவை * பழமொழி நானூறு * சிறுபஞ்சமூலம் * முதுமொழிக்காஞ்சி * ஏலாதி பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அக நூல்கள் (அல்லது) அகத்திணை நூல்கள் பின்வருமாறு: * கார் நாற்பது * ஐந்திணை ஐம்பது * ஐந்திணை எழுபது * திணைமொழி ஐம்பது * திணைமாலை நூற்றைம்பது * கைந்நிலை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் புற நூல்(அல்லது) புறத்திணை நூல்கள் பின்வருமாறு: * களவழி நாற்பது பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் மற்றும் பாடல்களின் எண்ணிக்கை: நூல்கள்                                       பாடல்கள் நாலடியார்                                  400                நான்மணிக்கடிகை                ...