Skip to main content

பத்துப்பாட்டு நூல் குறிப்பு

பத்துப்பாட்டின் வரலாறு;
      பாவலரொடு   காவலரும் கைகோர்த்து கவிபுனைந்து கன்னித் தமிழ் வளர்ந்த காலம் சங்க காலம். அக்காலத்தில் தான் பழங்காலத்தில் தமிழ் மொழியில் தோன்றி வளர்ந்த இலக்கியங்களில் அழிந்து மறைந்தவை போக எஞ்சியவை காக்கப்பட்டு புலவர்களும் புரவலர்களும் தொகுக்கப்பட்டு சங்க இலக்கியம் என பெயரால் குறிக்கப்பட்டது.
சங்க இலக்கியங்கள் என குறிப்பிடப்படும் பழந்தமிழ் நூல்களின் தொகுப்பு தான்
     "எட்டுத்தொகை"
     "பத்துப்பாட்டு"
இவைகளே பதினெண்மேற்கணக்கு நூல்கள் ஆகும்.

இங்கு பழந்தமில் நாட்டினரின் வாழ்க்கைமுறை பண்பாட்டுச் சிறப்பு பற்றிய அதிக தகவல்கள் பொதிந்து கிடக்கும் 'பத்துப்பாட்டு நூலின் விளக்கத்தை இங்கு காண்போம்'

"பத்துப்பாட்டு நூல்கள்":
   1. திருமுருகாற்றுப்படை
   2. பொருநராற்றுப்படை
   3. சிறுபாணாற்றுப்படை
   4. பெரும்பாணாற்றுப்படை
   5. முல்லைப்பாட்டு
   6. மதுரைக்காஞ்சி
   7. நெடுநல்வாடை
   8. குறிஞ்சிப்பாட்டு
   9. பட்டினப்பாலை
  10. மலைபடுகடாம்
என நீண்ட நெடும் பாடல்களாக அமைந்த பத்துப் பாடல்களின் தொகுப்பு
"பத்துப்பாட்டு ஆகும்'..

பாட்டு எனவும் அழைக்கப்படும் பத்துப்பாட்டில்"இதில் இடம்பெறும் பாடல் ஒவ்வொன்றிலும் பல்வேறு காலகட்டங்களில் வெவ்வேறுு ஆசிரியர்களால் "நீண்ட ஆசிரியப்பாவால் இயக்கப்பட்டது"

பாடல்களின் அடி எல்லை
 "103-782 அடிகளை உடைய நீளமான பாடல்கள்"

உதாரணமாக:
   முல்லைப்பாட்டு 103 அடிகளை உடைய மிகச்சிறிய பாடல்.
   மதுரைக்காஞ்சி 782 அடிகளைைை உடைய மிகப்பெரிய பாடல்.

பத்துப்பாட்டில் அகப்பொருள் பற்றிய நூல்கள் பின்வருமாறு காணலாம்:
            1. முல்லைப்பாட்டு
           2. குறிஞ்சிப்பாட்டு
           3. பட்டினப்பாலை

பத்துப்பாட்டில் புறப்பொருள் பற்றிய நூல்கள் பின்வருமாறு காணலாம்:
            1. திருமுருகாற்றுப்படை
           2. பொருநராற்றுப்படை
           3. சிறுபாணாற்றுப்படை
           4. பெரும்பாணாற்றுப்படை
           5.மலைபடுகடாம்(கூத்தராற்றுப்படை)
           6. மதுரைக்காஞ்சி

பத்துப்பாட்டில் அகமும் புறமும் கலந்து அமைந்த நூல்:
           "நெடுநல்வாடை"

*பத்துப்பாட்டில் இடம்பெறும் ஆற்றுப்படை நூல்கள்:
       "பெரும்பாணாற்றுப்படை
       "சிறுபாணாற்றுப்படை
       "பொருநராற்றுப்படை
       "திருமுருகாற்றுப்படை
  "மலைபடுகடாம் (கூத்தராற்றுப்படை)

பத்துப்பாட்டு நூலை முதலில் பதிப்பித்தவர்:
  "தமிழ் தாத்தா டாக்டர் உ வே சாமிநாத ஐயர்"

பத்துப்பாட்டு நூலினை பட்டியலிடும் ஒரு வெண்பா பாடல்:
முருகு  பொருநாறு  பானிரெண்டு  முல்லை
பெருகு  வளமதுரைக்  காஞ்சி - மருவினிய
கோலநெடு  நல்வாடை - கோல்குறிஞ்சிப்  பட்டினப்
பாலை  கடாத்தொடும்  பத்து.


 
        
     


Comments

Popular posts from this blog

சீறாப்புராணம் - உமறுப் புலவர்.

  தமிழில் எழுதப்பட்ட தலைசிறந்த இஸ்லாமிய இலக்கியம் "சீறாப்புராணம்" ஆகும். சீராபுராணம் இறைத்தூதர் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றினை மையமாகக்கொண்டு தமிழ் மரபுகளைப் பின்பற்றி எழுதப்பட்ட ஒரு காவியம் ஆகும். இத்தகைய நூலை இயற்றியவர் பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த உமறுப் புலவர் இயற்றிய நூல்தான் சீறாப்புராணம். மேலும் உமறுப்புலவர் அதே காலத்தில் வாழ்ந்த சீதக்காதியின் ஆதரவைப் பெற்றார். உமறுப் புலவர் வள்ளல் சீதக்காதியின் பெருமையை " செத்தும் கொடுத்தான் சீதக்காதி" என  சொற்றொடர் விளக்கும். சீறாப்புராணம் அமைவிடம்: சீராபுராணம் இரண்டு பாகங்களாக அமைந்துள்ளது. முதல் பாகத்தில் 44 படலங்களும், இரண்டாம் பாகத்தில் 47 பக்கங்களும் உள்ளன. சீறாப் புராணத்தில் இடம் பெறும் முதல் பாகம்: முதல் பாகத்தில் 3 காண்டங்கள் உள்ளன. இப்பாகத்தில் மொத்தம் 44 படலங்கள் உள்ளன. 1. விலாதத்துக் காண்டம். 2. நுபுவ்வத்துக் காண்டம். 3. ஷீலாஷது காண்டம். * விலாதத்துக் காண்டம்: 1. கடவுள் வாழ்த்துப் படலம் 2. நாட்டுப் படலம் 3. தலைமுறைப் படலம் 4. நபியவதாரப் படலம் 5. அலிமா முலையூர் படலம் 6. இலாஞ்சனை தரித்த படலம் 7. ...

தமிழ்விடு தூது - எத்தனை கண்ணிகள்.

தமிழ்விடு தூது - ஆசிரியர் பெயர் தெரியவில்லை. தமிழ் விடு தூது நூல் அமைப்பு: தமிழ் சிற்றிலக்கிய வகைகளுள் தூது என்பதும் ஒருவகை இலக்கியமாகும். இது வாயில் இலக்கியம், சந்து இலக்கியம் என்று வேறுு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இது 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று ஆகும். தமிழ்விடு தூது பாடல் அமைந்த விதம்: தமிழ்விடு தூது மதுரையில் கோயில் கொண்டிருக்கும் சொக்கநாதர் மீது காதல் கொண்ட பெண் ஒருத்தி தன் காதலி கூறி வருமாறு தமிழ் மொழியை தூது விடுவதாக அமைந்துள்ளதுதான் தமிழ்விடு தூது. தமிழ்விடு தூது சிறப்பு; தமிழின் பெருமையை பாட கவிஞர்கள் கையாளும் உத்திகள் பற்பல. கவிதை அதற்கு ஒரு கருவி, கிளி, அன்னம், விரலி, பணம், தந்தி என்று பல தூதுு வாயில்களை அறிந்துள்ளோம். ஆனால் தமிழையே தூதுப் பொருளாக்கிிி உள்ளது தமிழ்விடு தூது. தமிழின்   இனிமை,இலக்கிய வளம், சுவை,அழகு, திறன், தகுதி, ஆகியவற்றைை இச்சிற்றிலக்கியத்தில் தெளிவாக விளக்கியுள்ளது. தமிழ்விடு தூது முக்கிய வினா விடை குறிப்புகள்: * தமிழ்விடு தூது ஒரு சிற்றிலக்கிய வகையைச் சார்ந்தது. * தமிழ்விடு தூது வில் இடம்பெறும் கண்ணி என்பதன் பொருள் இரண்டு கண்களை போல் இ...

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்- அறநூல்கள்-நீதி நூல்கள் - புறநூல்கள் யாவை.

  பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அற நூல்கள் (அல்லது) நீதி நூல்கள் பின்வருமாறு: * நாலடியார் * நான்மணிக்கடிகை * இன்னா நாற்பது * இனியவை நாற்பது * திருக்குறள் * திரிகடுகம் * ஆசாரக்கோவை * பழமொழி நானூறு * சிறுபஞ்சமூலம் * முதுமொழிக்காஞ்சி * ஏலாதி பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அக நூல்கள் (அல்லது) அகத்திணை நூல்கள் பின்வருமாறு: * கார் நாற்பது * ஐந்திணை ஐம்பது * ஐந்திணை எழுபது * திணைமொழி ஐம்பது * திணைமாலை நூற்றைம்பது * கைந்நிலை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் புற நூல்(அல்லது) புறத்திணை நூல்கள் பின்வருமாறு: * களவழி நாற்பது பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் மற்றும் பாடல்களின் எண்ணிக்கை: நூல்கள்                                       பாடல்கள் நாலடியார்                                  400                நான்மணிக்கடிகை                ...