Skip to main content

அகநானூறு நூல் விளக்கம் - வினா விடை- தொகுப்பு

1. அலெக்ஸாண்டரின் படை எடுப்புக்கு அஞ்சி நந்தர்கள் தமது செல்வங்களை எல்லாம் கங்கையாற்றின் அடியில் புதைத்து வைத்த செய்தி கூறும் சிறப்பு வாய்ந்த நூல்
   "அகநானூறு"

2. பழங்கால தமிழர்களின் திருமண விழா நடை முறையை விளக்கும் ஒரே தொகை நூல்
    "அகநானூறு"

3. கிராம நிர்வாக சபை உறுப்பினரை தேர்ந்தெடுக்க பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட  "குடவோலை முறை தேர்தல்"விளக்கும் சிறப்பு வாய்ந்த தொகைநூல்
       "அகநானூறு"

4. சங்க இலக்கியங்களுள் வரலாற்றுச் செய்திகளை அதிகமாக கூறும் ஒரே நூல்
      "அகநானூறு"

5. அகநானூறு பாடிய புலவர்களின் எண்ணிக்கை
       "145"

6. அகநானூறு அடிவரையரை
    "13 அடி சிற்றெல்லை-
     "31 அடி பேரெல்லை"

7. அகநானூறு ஒரு
      "அகப்பொருள் நூல் ஆகும்"

8. அகநானூறு பாடல்களின் எண்ணிக்கை
        "400"மற்றும் கடவுள் வாழ்த்துடன் மொத்தம் 401 பாடல்"

9. அகநானூற்றின் மூவகைப் பகுப்பு பாடல்கள்
      "களிற்றியானைநிறை (1-120)
                      "120 பாடல்கள்"
      "மணிமிடை பவளம்  (121-300)
                      "180 பாடல்கள்'
      "நித்திலக் கோவை  (301-400)
                      "100 பாடல்கள்"

10. அகநானூற்றின் திணை வைப்புமுறை
   "பாலைத் திணை - 1,3,5,7,9 என முடியும் 200 பாடல்கள்"
   "முல்லைத்திணை - 4 என முடியும் 40 பாடல்கள்"
    "மருதத்திணை - 6 என முடியும் 40 பாடல்கள்"
    "நெய்தல் திணை - 0 என முடியும் 40 பாடல்கள்"
    "குறிஞ்சித்திணை - 2,8 என முடியும் 80 பாடல்கள் ஆகும்"

     
11. அகநானூற்றை தொகுத்தவர்
     "மதுரை உப்புரிகுடிகிளார் மகனார் உருத்திரசன்மன்'

12. அகநானூற்றை தொகுப்பித்தவர்
     "பாண்டியன் உக்கிரப் பெருவழுதி"

13. அகநானூற்றில் இடம்பெறும் கடவுள் வாழ்த்துப் பாடலை பாடியவர்
     "பாரதம் பாடிய பெருந்தேவனார்"

14. அகநானூற்றில் கடவுள் வாழ்த்துப் பாடலில் குறிப்பிடப்படும் கடவுள்
      "சிவபெருமான்"

15. அகநானூற்றின் வேறு பெயர்கள்
           "அகம்"
           "அகப்பாட்டு"
          "நெடுந்தொகை'
          "நெடுந்தொகை நானூறு"
          "நெடும் பாட்டு"
          'பெருந்தொகை நானூறு"

16. அகநானூறுவிற்கு முதலில் உரை எழுதியவர்கள்
      "நாவலர் நா. மு. வெங்கடசாமி நாட்டார்  மற்றும் கரந்தைக் கவியரசு இரா. வெங்கடாசலம்பிள்ளை."

17. அகநானூற்றை முதலில் பதிப்பித்தவர்
      "கம்பர் விலாசம் வே. ராஜகோபால அய்யங்கார்."

Comments

Popular posts from this blog

சீறாப்புராணம் - உமறுப் புலவர்.

  தமிழில் எழுதப்பட்ட தலைசிறந்த இஸ்லாமிய இலக்கியம் "சீறாப்புராணம்" ஆகும். சீராபுராணம் இறைத்தூதர் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றினை மையமாகக்கொண்டு தமிழ் மரபுகளைப் பின்பற்றி எழுதப்பட்ட ஒரு காவியம் ஆகும். இத்தகைய நூலை இயற்றியவர் பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த உமறுப் புலவர் இயற்றிய நூல்தான் சீறாப்புராணம். மேலும் உமறுப்புலவர் அதே காலத்தில் வாழ்ந்த சீதக்காதியின் ஆதரவைப் பெற்றார். உமறுப் புலவர் வள்ளல் சீதக்காதியின் பெருமையை " செத்தும் கொடுத்தான் சீதக்காதி" என  சொற்றொடர் விளக்கும். சீறாப்புராணம் அமைவிடம்: சீராபுராணம் இரண்டு பாகங்களாக அமைந்துள்ளது. முதல் பாகத்தில் 44 படலங்களும், இரண்டாம் பாகத்தில் 47 பக்கங்களும் உள்ளன. சீறாப் புராணத்தில் இடம் பெறும் முதல் பாகம்: முதல் பாகத்தில் 3 காண்டங்கள் உள்ளன. இப்பாகத்தில் மொத்தம் 44 படலங்கள் உள்ளன. 1. விலாதத்துக் காண்டம். 2. நுபுவ்வத்துக் காண்டம். 3. ஷீலாஷது காண்டம். * விலாதத்துக் காண்டம்: 1. கடவுள் வாழ்த்துப் படலம் 2. நாட்டுப் படலம் 3. தலைமுறைப் படலம் 4. நபியவதாரப் படலம் 5. அலிமா முலையூர் படலம் 6. இலாஞ்சனை தரித்த படலம் 7. ...

தமிழ்விடு தூது - எத்தனை கண்ணிகள்.

தமிழ்விடு தூது - ஆசிரியர் பெயர் தெரியவில்லை. தமிழ் விடு தூது நூல் அமைப்பு: தமிழ் சிற்றிலக்கிய வகைகளுள் தூது என்பதும் ஒருவகை இலக்கியமாகும். இது வாயில் இலக்கியம், சந்து இலக்கியம் என்று வேறுு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இது 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று ஆகும். தமிழ்விடு தூது பாடல் அமைந்த விதம்: தமிழ்விடு தூது மதுரையில் கோயில் கொண்டிருக்கும் சொக்கநாதர் மீது காதல் கொண்ட பெண் ஒருத்தி தன் காதலி கூறி வருமாறு தமிழ் மொழியை தூது விடுவதாக அமைந்துள்ளதுதான் தமிழ்விடு தூது. தமிழ்விடு தூது சிறப்பு; தமிழின் பெருமையை பாட கவிஞர்கள் கையாளும் உத்திகள் பற்பல. கவிதை அதற்கு ஒரு கருவி, கிளி, அன்னம், விரலி, பணம், தந்தி என்று பல தூதுு வாயில்களை அறிந்துள்ளோம். ஆனால் தமிழையே தூதுப் பொருளாக்கிிி உள்ளது தமிழ்விடு தூது. தமிழின்   இனிமை,இலக்கிய வளம், சுவை,அழகு, திறன், தகுதி, ஆகியவற்றைை இச்சிற்றிலக்கியத்தில் தெளிவாக விளக்கியுள்ளது. தமிழ்விடு தூது முக்கிய வினா விடை குறிப்புகள்: * தமிழ்விடு தூது ஒரு சிற்றிலக்கிய வகையைச் சார்ந்தது. * தமிழ்விடு தூது வில் இடம்பெறும் கண்ணி என்பதன் பொருள் இரண்டு கண்களை போல் இ...

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்- அறநூல்கள்-நீதி நூல்கள் - புறநூல்கள் யாவை.

  பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அற நூல்கள் (அல்லது) நீதி நூல்கள் பின்வருமாறு: * நாலடியார் * நான்மணிக்கடிகை * இன்னா நாற்பது * இனியவை நாற்பது * திருக்குறள் * திரிகடுகம் * ஆசாரக்கோவை * பழமொழி நானூறு * சிறுபஞ்சமூலம் * முதுமொழிக்காஞ்சி * ஏலாதி பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அக நூல்கள் (அல்லது) அகத்திணை நூல்கள் பின்வருமாறு: * கார் நாற்பது * ஐந்திணை ஐம்பது * ஐந்திணை எழுபது * திணைமொழி ஐம்பது * திணைமாலை நூற்றைம்பது * கைந்நிலை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் புற நூல்(அல்லது) புறத்திணை நூல்கள் பின்வருமாறு: * களவழி நாற்பது பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் மற்றும் பாடல்களின் எண்ணிக்கை: நூல்கள்                                       பாடல்கள் நாலடியார்                                  400                நான்மணிக்கடிகை                ...