Skip to main content

Posts

Showing posts from February, 2021

திருவேங்கடத்தந்தாதி - பிள்ளை பெருமாள் ஐயங்கார்

  திருவேங்கடத்தந்தாதி - பிள்ளைப் பெருமாள் ஐயங்கார். அந்தாதி என்பது யாது: சிற்றிலக்கிய வகைகளில் ஒன்றுதான் "அந்தாதி " . அந்தம் -  இறுதி என்றும். ஆதி  - முதல் என்றும் பொருள்படும். ஒவ்வொரு பாடலின் இறுதி எழுத்தோ, அசையோ, சீரோ, அடியோ அடுத்து வரும் பாடலின் முதலாக வரும்படி அமைத்துப் பாடுவது அந்தாதி எனப்படும். அந்தாதி - சொற்றொடர் நிலை என்று அழைக்கப்படுகிறது. திருவேங்கடத்தந்தாதி என்பது யாது: திருவேங்கடத்தில் கோயில் கொண்டிருக்கும் திருமாலின் அருளை வேண்டி பாடப்பெற்ற அந்தாதி நூல் தான் "திருவேங்கடத்தந்தாதி". தெய்வ கவிஞர் என்று பொருள்படும் திவ்யகவி என்று அழைக்கப்பட்ட 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அழகிய மணவாளதாசர் என்ற புனைப்பெயர் கொண்ட திருவேங்கடத்தந்தாதி என்ற சிற்றிலக்கிய நூலினை இயற்றிய "பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் இயற்றிய நூல்கள் மற்றும் நூல் குறிப்பு ஆகியவற்றைத் தெளிவாக இங்கு காணலாம். பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்: பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் இயற்றிய எட்டு நூல்களின் தொகுதியை "அஷ்டப் பிரபந்தம்" என்றுுு கூறுவர்.  "அஷ்டபிரபந்தம் கற்றவன் அரை பண்டிதன்" என்பதுு பழ...

காவடிச் சிந்து - அண்ணாமலை ரெட்டியார்

  காவடிச் சிந்து - சிந்து பாவகை சிந்து என்பது யாது: இசைத்தமிழ் பாகுபாடுகளில் ஒன்றான சிந்து ஐந்து இசை உறுப்புகளால் ஆன யாப்பு ஆகும். 5 இசை உறுப்புக்கள் பின்வருமாறு: *  எடுப்பு 1 *  துடுப்பு 1 *  உறுப்புக்கள் 3  சிந்துவின் 3 உறுப்புக்கள் பின்வருமாறு: * பல்லவி * அநுபல்லவி * கண்ணிகள் அடங்கிய சரணம். காவடிச்சிந்து பற்றி சிறு குறிப்பு: காவடிச்சிந்து இசை பா வகைகளில் ஒன்றான சிந்து பாவகை வடிவங்களில் ஒன்றாகும். மேலும் காவடிச்சிந்து தமிழ் பண்பாட்டுக் கூறுகளில் ஒன்றாகும். தமிழ்நாட்டில் பண்டைய காலம் முதல் நாட்டார் வழக்கில் உள்ள இசை மரபே காவடிச்சிந்து என்று அழைக்கப்படுகிறது. முருகப்பெருமானின் வழிபாட்டிற்காக பால் முதலிய பொருட்களைக் கொண்டு செல்லும்போது வழிநடைப் பாடலாக "காவடிச்சிந்து" பாடப்படுகிறது. திருநெல்வேலிக்கு அருகே உள்ள கழுகு மலையில் எழுந்தருளியிருக்கும் முருகப்பெருமானைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பெறும் நூல் தான் "காவடி சிந்து". காவடிச்சிந்து பல்லவியும், அநுபல்லவியும்   சரணங்கள் உரிய கண்ணிகளை மாத்திரம் பெற்று வரும். காவடிச்சிந்து ஆசிரியர் குறிப்பு: காவட...

முக்கூடற்பள்ளு - pdf download

1. முக்கூடற்பள்ளு - (தண்பொருநை, சிற்றாறு, கோதண்டராம ஆறு) தமிழ்நாட்டில் நெல்லை என்று அழைக்கப்படுகின்ற திருநெல்வேலியில் "வடகிழக்கே அமைந்திருக்கும் சித்திரா நதி" மற்றும்   கோதண்டராம நதி    ஆகிய இருு நதிகளும் திருநெல்வேலிக்கே புகழ்பெற்ற "தாமிரபரணி" ஆற்றில் கலக்கும் இடம் தான் #முக்கூடல்#. என்று அழைக்கப்படுகிறது. இவ்வூரில் எழுந்தருளும் அழகர் என்ற தெய்வத்தின் மீது பாடப்பட்டதே ""முக்கூடற்பள்ளு"" ஆகும். 2. முக்கூடற்பள்ளு பெயர் அமையகாரணம் பின்வருமாறு: முக்கூடற்பள்ளு என்பதே இடத்தால் பெயர் பெற்ற பெயராகும். அத்தகைய முக்கூடல் இன்று சீவலப்பேரி என அழைக்கப்படுகிறது. கிபிிி 12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பாண்டியன் மாறவர்மன், ஸ்ரீ வல்லபன் ஆகிய இருவரும்் தன் பெயரில் ஆகிய ஊர் ஏரி ஒன்றை கட்டினார்கள்.  இத்தகைய ஏரி ஸ்ரீவல்லபன் ஏரி என்று அழைக்கப்படுகிறது. இதனால் இந்த ஊரை சீவலப்பேரி என வழங்கப்படுகிறது. இங்கு மூவேந்தர் கல்வெட்டுடன் கூடிய தொன்மையான திருமால் கோயில் உள்ளது. இங்கு கோயில் கொண்டிருக்கும் "திருமாலை" முக்கூடற்பள்ளு "அழகர் என்றும், செண்டு அழகர் எ...