”கால மொழி ஆராய்ச்சியாளர்” எஸ்.வையாபுரிப்பிள்ளை வாழ்க்கை வரலாறு....

 எஸ். வையாபுரிப்பிள்ளை


வாழ்ந்த காலம்
:
12 -10 -1891 முதல் 17- 02- 1956 வரை வாழ்ந்தார்.

பிறந்த ஊர்: திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சிக்கநரசய்யன்பேட்டை.

பெற்றோர் பெயர்கள்: சரவண பெருமாள் மற்றும் பாப்பம்மாள்.

சிறப்புப் பெயர்: கால மொழி ஆராய்ச்சியாளர்.


எஸ். வையாபுரிப்பிள்ளை கல்வி பருவம்:

* வையாபுரிப்பிள்ளை பாளையங்கோட்டை புனித சவேரியார் பள்ளியிலும், திருநெல்வேலி ம.தி.தா இந்துக் கல்லூரியிலும் பிறகு சென்னை கிறிஸ்துவக் கல்லூரியிலும் படித்துப் பட்டம் பெற்றார்.

* அந்த ஆண்டு சென்னை மாகாணத்திலேயே தமிழில் மிக அதிக மதிப்பெண் பெற்று சேதுபதி தங்க மெடல் (பதக்கம்) பெற்ற பெருமைக்கு உரியவர் ஆனார்.


எஸ்.வையாபுரிப்பிள்ளை வாழ்க்கை குறிப்புகள்:

* இருபதாம் நூற்றாண்டின் முதன்மை தமிழ் ஆராய்ச்சியாளர்களில் ஒருவர்.

* தமிழ் நூற்பதிப்பு துறையில் சிறந்த பதிப்பாசிரியராக விளங்கியவர்.

* தமிழில் சிறந்த புலமை உள்ளவர்.

* ஆய்வுக் கட்டுரையாளர், திறனாய்வாளர், கால மொழி ஆராய்ச்சியாளர், மொழிபெயர்ப்பாளர், சொற்பொழிவாளர், கதை, கவிதைகள் புனையும் திறன் படைத்தவர் எனப் பன்முகப் பரிமாணங்களைக் கொண்டவர்.

* சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்ட பேர் அகராதியின் ஆக்கக் குழுத் தலைவராக செயற்பட்டவர்.


வையாபுரிப்பிள்ளை வழக்கறிஞர் பணி:

* இவர் திருவனந்தபுரம் சட்டக் கல்லூரியில் வழக்கறிஞராக 7 ஆண்டுகள் பணியாற்றினார்.

* திருநெல்வேலியில் உள்ள சட்டக் கல்லூரியில் வழக்கறிஞராக மூன்று ஆண்டுகள் பணியாற்றினார்.

* வையாபுரிப் பிள்ளையின் நெல்லை வாழ்க்கையில் அவருக்கு நெருங்கிய நண்பர்களாக ரகசிய மணி, டி.கே. சிதம்பரநாத முதலியார், நீலகண்ட சாஸ்திரியார், பேராசிரியர் சாரநாதன், பெ. அப்புசாமி போன்றவர்கள் உடன் இருந்திருக்கிறார்கள். 


வையாபுரிப்பிள்ளையின் தமிழ் ஆய்வு:

* வழக்கறிஞராகப் பணியாற்றி வந்த காலத்தில் வையாபுரிப் பிள்ளை எழுதி வெளிவந்த பல கட்டுரைகளும், இலக்கிய ஆய்வுகளும் அவரை அறிஞர்கள் மத்தியில் பேசப்பட வைத்தன.


வையாபுரிப்பிள்ளையின் தமிழ் நூல் தொகுப்பு:

* உ.வே.சாமிநாத ஐயருக்கு பிறகு பழந்தமிழ் இலக்கியங்களைத் தொகுத்து ஆய்வு செய்து வெளியிட்ட பெருமை வையாபுரிப் பிள்ளையைத் தான் சாரும்.

* ஓலைச்சுவடிகளை பதிப்பித்த உடன் நிற்காமல் அந்த இலக்கியங்களுக்கு கால நிர்ணயம் செய்ததிலும் வையாபுரிப் பிள்ளைக்கு பெரும் பங்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.


வையாபுரிப்பிளளையின் அகராதிப் பணி:

* வையாபுரிப்பிள்ளை 1926ஆம் ஆண்டு சென்னை பல்கலைகழகம் உருவாக்கி வந்த தமிழ் அகராதியின் (ஏழு தொகுதிகள்) பதிப்பாசிரியராக பொறுப்பேற்றார்.

* 1936 ஆம் ஆண்டு முதல் சென்னை பல்கலைக்கழக தமிழ் ஆராய்ச்சித் துறை தலைவராக விளங்கினார்.

* 1946 ஆம் ஆண்டு வரை அப்பணியில் சிறப்பாகச் செயல்பட்டு பல ஆராய்ச்சியாளர்களை உருவாக்கினார் என்ற பெருமைக்குரியவர் வையாபுரிப்பிள்ளை.


வையாபுரிப்பிள்ளையின் தமிழ்த்துறையில் பங்களிப்பு:

* வையாபுரிப்பிள்ளை திருவிதாங்கூர் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைத் தலைவராக இருந்த காலத்தைப் "பொற்காலம்" என்று கூறுவார்கள்.

* சுமார் நான்கு ஆண்டுகள் அப்பதவியில் வையாபுரிப்பிள்ளை இருந்த காலகட்டத்தில்தான் மலையாள மொழி லெக்சிகன் (சொற்களஞ்சியம்) பதிப்பிக்கப்பட்டது.

* அதன் உறுப்பினராகவும் பணியாற்றிய பெருமை வையாபுரிப் பிள்ளைக்கு உண்டு.

* இந்த காலகட்டத்தில் தான் பின்னாளில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முதல் துணைவேந்தராக விளங்கிய   வ.ஐ. சுப்பிரமணியம் ஆய்வு மாணவராக வையாபுரிப்பிள்ளை இடம் பணியாற்றி அவரது வாரிசு என்ற பெயரையும் பெற்றார்.

* இரா.பி.சேதுப்பிள்ளை போலவே கம்பனின் கவி நயத்தில் தன்னை பறிகொடுத்த வையாபுரிப்பிள்ளை ரகசிய மணி, டி.கே.சி யுடன் இணைந்து திருநெல்வேலியில் கம்பன் கழகத்தை உருவாக்கியதில் பெரும்பங்கு வகித்தார்.


வையாபுரிப்பிள்ளை நண்பர்களுடன் தமிழ் பணி:

* மகாகவி சுப்பிரமணிய பாரதி மற்றும்  வ. உ.சிதம்பரனார் பிள்ளை ஆகிய இருவரிடமும் வையாபுரிப் பிள்ளைக்கு நெருங்கிய அறிமுகம் இருந்தது.

* தனது சிறை வாசத்துக்கு பிறகு அரசியல் வாழ்வில் வெற்றி பெற்றிருந்த வ.உ.சி ஏட்டில் இருந்து   இளம்பூரனாரின் தொல்காப்பிய உரையைப் பதிப்பிக்கும் நோக்கத்தோடு படி எடுத்தார்.

* அதனை எஸ்.வையாபுரிப்பிள்ளை இடம் காட்டி செப்பம் செய்தார்.

* வையாபுரிப்பிள்ளை- யையும் அதன் பதிப்பாசிரியராக தன்னுடன் இருக்குமாறு கேட்டதையும் ஆனால் இவரோ நீங்களே பதிப்பாசிரியராக  இருந்தால் போதும் என்று மறுத்து விட்டதாகவும் அந்த உரை பதிப்பின் முன்னுரையில் வ.உ.சி நன்றியுடன் குறிப்பிட்டிருக்கிறார்.


வையாபுரிப்பிள்ளை சொத்துக்களாக நூல்கள் சேமிப்பு:

* இவரது வீட்டில் இருந்த நூலகத்தில் மட்டும் 2943 மூன்று புத்தகங்கள் இருந்தன. அதுமட்டுமல்லாமல் ஆங்கிலம், தமிழ், பிரெஞ்சு, ஜெர்மன், மலையாளம் போன்ற மொழிகளிலான குறிப்புகளும், ஓலைச்சுவடிகளும் நூற்றுக்கணக்கில் இருந்தன. அவை அனைத்தையும் கொல்கத்தாவில் இருந்த "தேசிய நூலகத்துக்கு நன்கொடையாக அளித்துவிட்டார்" வையாபுரிப் பிள்ளை.

* நாற்பதுக்கும் அதிகமான நூல்களையும், நூற்றுக்கணக்கான ஆய்வுகளையும், கட்டுரைகளையும் எழுதிக் குவித்தவர்.

* இவர் மனோன்மணியம் உரையுடன் தொடங்கி 1955 ஆம் ஆண்டு நாலாயிர திவ்யப் பிரபந்தத்தை உரையுடன் பதிப்பித்துத் தமிழுக்குப் பெரும் தொண்டு ஆற்றினார்.

* கம்பராமாயணத்திற்கு உரை எழுதி பதிப்பிக்க வேண்டும் என்கின்ற அவரது ஆசை மட்டும் நிறைவேறாமலே போய்விட்டது.


வையாபுரிப்பிள்ளையின் மீது வைக்கப்பட்ட விமர்சனங்கள்:

* தேவநேயப் பாவாணர் போன்றவர்கள் வையாபுரிப் பிள்ளை தமிழ் இலக்கியங்களின் காலத்தை சரியாக கணிக்கவில்லை.

* கிருத்துவத்திற்கு முற்பட்ட தமிழ் இலக்கியத்தைப் பிற்பட்ட காலத்தது என்று கூறுவதாகவும் கண்டித்தனர்.

* தமிழின் பழம் பெருமைக்கு எதிரானவர் என்று அவரை திராவிட கட்சிகள் கடுமையாக விமர்சித்தன.


வையாபுரிப் பிள்ளை இயற்றிய நூல்கள்:

1. ஆராய்ச்சியுரை தொகுதி-1, ஆசிரியர் வெளியீடு -1930

2. சிறுகதை மஞ்சரி , தினமணி வெளியீடு -1944

3. Research in Dravidian language , Madras premier co, Madras

4. இலக்கிய சிந்தனைகள், பாரி நிலையம் - 1947

5. தமிழர் பண்பாடு, தமிழ் புத்தகாலயம் - 1949

6. கம்பன் ஆராய்ச்சிப் பதிப்பு ,கம்பன் கழகம், காரைக்குடி - 1950

7. உரை மணிமாலை ஆசிரியர் பதிப்பு - 1951

8. இலக்கிய தீபம், பாரி நிலையம் - 1952

9. இலக்கிய உதயம் பகுதி 2, தமிழ் புத்தகாலயம் - 1952

10. இலக்கிய மணிமாலை, தமிழ்ப் புத்தகாலயம் - 1954

11. கம்பன் காவியம், தமிழ் புத்தகாலயம் - 1955

12. இலக்கணச் சிந்தனைகள், பாரி நிலையம் - 1956

13. திராவிட மொழிகளில் ஆராய்ச்சி, தமிழ்ப் புத்தகாலயம் இரண்டாம் பதிப்பு - 1956

14. History of Tamil language and literature NCBH - 1956

15. சொற்கலை விருந்து, பாரி நிலையம் - 1956 

16. காவிய காலம், தமிழ் புத்தகாலயம் - 1957

17. இலக்கிய விளக்கம், தமிழ் புத்தகாலயம் - 1958

18. ராஜி - 1958

19. தமிழ் சுடர்மணிகள், பாரி நலையம் மூன்றாம் பதிப்பு - 1959

20. அகராதி நினைவுகள், தமிழ் புத்தகாலயம் - 1959

21. தமிழின் மறுமலர்ச்சி, பாரி நலையம் நான்காம் பதிப்பு - 1960


வையாபுரிப்பிள்ளை பதிப்பித்த நூல்கள்:

1. மனோன்மணியம் - 1922

2. துகில் விடு தூது - 1929

3. நாமதீப நிகண்டு - 1930

4. அரும்பொருள் விளக்க நிகண்டு - 1931

5. களவியற் காரிகை - 1931

6. கம்பராமாயணம் யுத்த காண்டம் 1- 3 படலம் - 1932 

7. குருகூர் பள்ளு - 1932

8. திருக்குருங்குடி அழகிய நம்பி உலா - 1932

9. தினகர வெண்பா - 1932

10. நெல் விடு தூது - 1933

11. தொல்காப்பியம் (பொருளதிகாரம் இளம்பூரணம்) - 1933

12. திருமந்திரம் (சேர்ந்து பதிப்பித்தது) - 1933

13. திருமுருகாற்றுப்படை (சேர்ந்து பதிப்பித்தது புதிய உரையுடன்) - 1933

14. கம்பராமாயணம் பால காண்டம் (1-7 படலம்) - 1933

15. பூகோள விலாசம் - 1933

16. திருப்பணி மாலைகள் (தென்திருப்பேரை, திருக்கோளூர் ) - 1933

17. மூப்பூந்தொட்டி உலா - 1934

18. பொதிகை நிகண்டு - 1934

19. ராஜராஜ தேவர் உலா - 1934

20. தொல்காப்பியம் பொருளதிகாரம் (நச்சினார்க்கினியம்) - 1934

21. ராமலிங்கேசர் மீது பண விடு தூது - 1934

22. மதுரைக் கோவை - 1934

23. தெய்வச்சிலையார் விறலி விடு தூது - 1936

24. புறத்திரட்டு - 1938

25. கயாதரம்  - 1939

26. சங்க இலக்கிய பத்துப்பாட்டும் எட்டுத் தொகையும் - 1940

27. சீவக சிந்தாமணி - 1941

28. சாத்தூர் நொண்டி நாடகம் - 1941

29. நவநீதப் பாட்டியல் உரையுடன் - 1943

30. திருமுருகாற்றுப்படை பழைய உரை - 1943

31. நான்மணிக்கடிகை - 1944

32. இன்னா நாற்பது - 1944

33. திரிகடுகம் சிறுபஞ்சமூலம் - 1944

34. இனியவை நாற்பது - 1949

35. ராமப்பய்யன் அம்மானை - 1950

36. முதலாயிரம் - 1955

37. திருவாய்மொழி

38. கொண்டல் விடு தூது


வையாபுரிப்பிள்ளை மறைவு:

வையாபுரிப்பிள்ளை பிப்ரவரி மாதம்  17ஆம் தேதி 1956 ஆம் ஆண்டு தனது 65-வது வயதில் இயற்கை எய்தினார்.






Post a Comment

Previous Post Next Post