Skip to main content

"தமிழ் தென்றல்" திரு. வி .கல்யாணசுந்தரனார் வாழ்க்கை வரலாற்று குறிப்புகள்.....

 திருவாரூர் விருத்தாசலம் கலியாணசுந்தரனார் வாழ்க்கை வரலாற்றில் நடந்த முக்கியமான நிகழ்வுகள் இங்கே விரிவாக காணலாம்.


திரு.வி. க வாழ்ந்த காலம்:
26 - 08 -1883 முதல் 17 - 09 - 1953 வரை வாழ்ந்தார்.

திரு.வி.க. பிறந்த ஊர்: காஞ்சிபுரம் மாவட்டம் , துள்ளம் (தண்டலம்).

திரு.வி.க. பெற்றோர் பெயர்: விருத்தாசல முதலியார் மற்றும் சின்னம்மா.


திரு.வி.க வாழ்க்கை வரலாற்று குறிப்புகள்:

1. காஞ்சிபுரம் மாவட்டத்தில் துள்ளம் என்னும் சிற்றூரில் விருத்தாசல முதலியார் சின்னம்மா தம்பதிகளுக்கு ஆறாவது மகனாகப் பிறந்தார் திரு.வி. கல்யாண சுந்தரனார்.

2. கல்யாண சுந்தரனாரின் தந்தை இலக்கியப் பயிற்சியும், இசைப் பயிற்சியும் உடையவராகத் திகழ்ந்தார்.

3. ஆசிரியத் தொழிலுடன் வணிகமும் புரிந்தவர் கல்யாண சுந்தரனாரின் தந்தை.

4. இவர் தந்தை ஆசிரியராக திருவாரூரில் பணி செய்தபோது கல்யாண சுந்தரமும் அங்கேயே வளர்ந்தார்.

5. இவர் (திரு. வி. க வின் தந்தை) பச்சையம்மாள் என்பவரை மணந்து மூன்று ஆண்களையும், ஒரு பெண் குழந்தையையும் பெற்றார்.

6. இவ்வம்மையார் இறந்த பின்னர் சின்னம்மாள் என்பாரை மணந்து நான்கு ஆண் மக்களையும், நான்கு பெண் மக்களையும் பெற்றார். இவர்களுள் ஒருவரே கல்யாணசுந்தரனார் என்பது குறிப்பிடத்தக்கது.

7. தொடக்கத்தில் தன் தந்தையிடம் கல்வி பயின்றார். பின்னர் சென்னையில் ராயப்பேட்டையில் தங்கி ஆரியன் தொடக்கப் பள்ளியில் சேர்ந்தார்.

8. அதன்பன்னர் 1894 ஆம் ஆண்டு வெஸ்லி பள்ளியில் நான்காம் வகுப்பில் சேர்ந்தார்.

9. அங்கு அவருக்கு ஒரு காலும் ஒரு கையும் முடங்கின.

10. ஆகையால் பள்ளிப் படிப்பு சிறிது காலம் தடைபட்டது. ஆனால் படிப்பில் நல்ல திறமை உடையவராக விளங்கினார்.

11. 1904ஆம் ஆண்டு ஆறாம் படிவத் தேர்வு எழுத முடியாமல் போனது. அத்தோடு அவரது பள்ளிப் படிப்பும் முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

12. வெஸ்லி பள்ளியில் ஆசிரியராக இருந்து யாழ்ப்பாணம்                          நா. கதிரைவேற்பிள்ளை என்ற தமிழறிஞர் உடன் நட்பு ஏற்பட்டது.

13. அவரிடம் தமிழ் பயிலத் தொடங்கினார். அதன்பின்னர் தமிழ் நூல்களை முறையாகப் பயின்று சிறந்த புலமை பெற்றார்.

14. கதிரைவேற்பிள்ளை நீலகிரிக்கு சென்ற பொழுது அங்கு காலமானார். அதன் பின்னர் கல்யாணசுந்தரனார் மயிலை தணிகாசல முதலியாரிடம் தமிழ் மற்றும் சைவ நூல்களையும் பாடம் கேட்டறிந்தார்.


திரு.வி.க. வின் பணிகள்:

* ஆசிரியப்பணி

* பத்திரிக்கை பணி

* அரசியல் பணி


1. ஆசிரியப்பணி

1906 ஆம் ஆண்டில் ஸ்பென்சர் தொழிலகம் என்ற ஆங்கில நிறுவனத்தில் கணக்கர் ஆகச் சேர்ந்தார்.

* அக்காலத்தில் பாலகங்காதர திலகர் போன்றோரின் விடுதலைக் கிளர்ச்சிகளில் ஈடுபாடு கொண்டதால் அவர் வேலையில் இருந்தும் அவர் நீங்கினார்.

* பின்னர் 1909 ஆம் ஆண்டு ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள வெஸ்லியன் பள்ளியில் ஆசிரியராகச் சேர்ந்து ஆறு ஆண்டுகள் பணி புரிந்தார்.

* அப்போது கமலாம்பிகை என்ற நங்கையை 1912 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

* பிறகு அவருக்கு இரண்டு பிள்ளைகளும் பிறந்தனர். 1918 ஆம் ஆண்டிற்குள் தன் மனைவி, பிள்ளைகளை இழந்து மீண்டும் தனி ஆளானார்.

* ராயப்பேட்டை வெஸ்லி கல்லூரியில் தலைமை ஆசிரியராகச் சேர்ந்தார். நாட்டிற்கு உழைப்பதற்காக அவர் அப்பணியில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.


2. பத்திரிக்கை பணி:


* தேசபக்தன் என்ற பத்திரிகையில் இரண்டரை ஆண்டுகள் அதன் ஆசிரியராகப் பணி புரிந்தார் திரு. வி. கல்யாண சுந்தரனார்.

* பின்னர் திராவிடன், நவசக்தி போன்ற பத்திரிகைகளில் ஆசிரியராக இருந்து நாட்டு  விடுதலைக்கு தொண்டாற்றினார்.


3. அரசியல் பணி:

* தொழில் சங்கத்தைத் தோற்றுவித்து தொழிலாளர்களின் உரிமைக்கும் முன்னேற்றத்திற்கும் ஈடுபட்டவர்.

* சிறந்த மேடைப் பேச்சாளரான இவர் அரசியல், சமூகம், சமயம் எனப் பல துறைகளிலும் ஈடுபாடுகொண்டு பல நூல்களை எழுதியுளளார்.


திரு. வி. க வின் சிறப்பு பெயர்கள்:

திருவாரூர் விருத்தாசலம் கலியாணசுந்தரனார் அல்லது  (திரு.வி.க) அரசியல், சமுதாயம், சமயம் எனப் பல துறைகளிலும் ஈடுபாடுகொண்டு பல நூல்களை எழுதிய தமிழறிஞர், மேடைப்பேச்சாளர்.

*  இவரது தமிழ் நடையின் காரணமாக இவர் "தமிழ்தென்றல்" என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார்.

* தமிழ் தென்றல்

* தமிழ் முனிவர்

* தமிழ் பெரியார்

* தமிழ்ச்சோலை

* தமிழ் புதிய உரைநடையின் தந்தை

* தமிழ் மேடைப் பேச்சின் தந்தை

* தொழிலாளர் தந்தை

* பேனா மன்னருக்கு மன்னன் (பி. ஸ்ரீ. ஆச்சாரியார்) 

* இக்கால தமிழ் மொழி நடையாளர் 

* தமிழ் வாழ்வினர் 


திரு.வி.க எழுதிய நூல்கள்:

திரு. வி. க வின் வாழ்க்கை வரலாற்று நூல்கள்:

1. யாழ்ப்பாணம் தந்த சிவஞானதீபம் 

2. நா.கதிரைவேற்பிள்ளை சரித்திரம் (1908)

3. மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்  (1921) 

4. பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கை துணை (1927)

5. நாயன்மார் வரலாறு (1937)

6. முடியா? காதலா? சீர்திருத்தமா ? (1938)

7. உள்ளொளி (1942) 

8. திரு.வி.க.வாழ்க்கை குறிப்புகள் பாகம் ஒன்று (1944)

9. திருவிக வாழ்க்கை குறிப்புகள் பாகம் 2 (1944)

10. உரைநூல்கள்

11. பெரிய புராணம் குறிப்புரையும் வசனமும் (1907)

12. பட்டினத்துப் பிள்ளையார் திருப்பாடற்றிரட்டும்  பத்திரகிரியார் புலம்பலும் விருத்தியுறையும் (1923)

13. காரைக்கால் அம்மையார் திருமுறை (1941)

14. திருக்குறள் விரிவுரை (பாயிரம் - 1939)

15. திருக்குறள் விரிவுரை (இல்லறவியல் - 1941) 


 தி.ரு.வி. க வின் அரசியல் நூல்கள்:

1. தேசபக்த அமிர்தம் (1919)

2. என் கடன் பணி செய்து கிடப்பதே (1921)

3. தமிழ்நாட்டுச் செல்வம் (1924)

4. தமிழ் தென்றல் (அல்லது) தலைமைப் பொழிவு  (1928)

5. சீர்திருத்தம் (அல்லது) இளமை விருந்து (1930)

6. தமிழ்ச்சோலை கட்டுரைத் திரட்டு பாகம் 1 (1935)

7. தமிழ்ச்சோலை கட்டுரைத் திரட்டு பாகம் 2 (1935)

8. இந்தியாவும் விடுதலையும் (1940)

9. தமிழ் கலை (1953) 


* தி.ரு. வி. க வின் சமய நூல்கள்:

1. சைவ சமய சாரம் (1921)

2. நாயன்மார் திறம் (1922)

3. தமிழ்நாடும் நம்மாழ்வாரும் (1923)

4. சைவத்தின் சமசரசம் (1925)

5. முருகன் (அல்லது) அழகு (1925) 

6. கடவுள் காட்சியும் தாயுமானவரும் (1928)

7. இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளம் (1929)

8. தமிழ் நூல்களில் பௌத்தம் (1929)

9. சைவத் திறவு (1929)

10. நினைப்பவர் மனம் (1930)

11. இமயமலை (அல்லது) தியானம் (1931)

12. சமரச சன்மார்க்க போதமும் திறவும் (1933)

13. சமரச தீபம் (1934)

14. சித்த மார்க்கம் (1935)

15. ஆலமும் அமுதமும் (1944)

16. பரம்பொருள் (அல்லது) வாழ்க்கை வழி (1949) 


* தி.ரு. வி. க வின் பயண இலக்கிய நூல்கள்:

1. இலங்கை செலவு (இலங்கை பயணம் குறித்த தொகுப்பு நூல்)


* திரு.வி.க வின் பாடல்கள்:

1. முருகன் அருள் வேட்டல் (1932)

2. திருமால் அருள் வேட்டல் (1938)

3. பொதுமை வேட்டல் (1942)

4. கிறிஸ்துவின் அருள் வேட்டல் (1945)

5. புதுமை வேட்டல் (1945)

6. சிவனருள் வேட்டல் (1947)

7. கிறிஸ்து மொழிக்குறள் (1948)

8. இருளில் ஒளி (1950)

9. இருமையும் ஒருமையும் (1950)

10. அருகன் அருகே (அல்லது) விடுதலை வழி (1951)

11. பொருளும் அருளும் (அல்லது) மார்க்சியமும் காந்தியமும் (1951)

12. சித்தன் திருத்தல் (அல்லது) செத்து பிறத்தல் (1951)

13. முதுமை உளறல் (1951) 

14. வளர்ச்சியும் வாழ்வும் (அல்லது) படுக்கை பிதற்றல் (1953)

15. இன்ப வாழ்வு (1925)








Comments

Popular posts from this blog

சீறாப்புராணம் - உமறுப் புலவர்.

  தமிழில் எழுதப்பட்ட தலைசிறந்த இஸ்லாமிய இலக்கியம் "சீறாப்புராணம்" ஆகும். சீராபுராணம் இறைத்தூதர் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றினை மையமாகக்கொண்டு தமிழ் மரபுகளைப் பின்பற்றி எழுதப்பட்ட ஒரு காவியம் ஆகும். இத்தகைய நூலை இயற்றியவர் பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த உமறுப் புலவர் இயற்றிய நூல்தான் சீறாப்புராணம். மேலும் உமறுப்புலவர் அதே காலத்தில் வாழ்ந்த சீதக்காதியின் ஆதரவைப் பெற்றார். உமறுப் புலவர் வள்ளல் சீதக்காதியின் பெருமையை " செத்தும் கொடுத்தான் சீதக்காதி" என  சொற்றொடர் விளக்கும். சீறாப்புராணம் அமைவிடம்: சீராபுராணம் இரண்டு பாகங்களாக அமைந்துள்ளது. முதல் பாகத்தில் 44 படலங்களும், இரண்டாம் பாகத்தில் 47 பக்கங்களும் உள்ளன. சீறாப் புராணத்தில் இடம் பெறும் முதல் பாகம்: முதல் பாகத்தில் 3 காண்டங்கள் உள்ளன. இப்பாகத்தில் மொத்தம் 44 படலங்கள் உள்ளன. 1. விலாதத்துக் காண்டம். 2. நுபுவ்வத்துக் காண்டம். 3. ஷீலாஷது காண்டம். * விலாதத்துக் காண்டம்: 1. கடவுள் வாழ்த்துப் படலம் 2. நாட்டுப் படலம் 3. தலைமுறைப் படலம் 4. நபியவதாரப் படலம் 5. அலிமா முலையூர் படலம் 6. இலாஞ்சனை தரித்த படலம் 7. ...

தமிழ்விடு தூது - எத்தனை கண்ணிகள்.

தமிழ்விடு தூது - ஆசிரியர் பெயர் தெரியவில்லை. தமிழ் விடு தூது நூல் அமைப்பு: தமிழ் சிற்றிலக்கிய வகைகளுள் தூது என்பதும் ஒருவகை இலக்கியமாகும். இது வாயில் இலக்கியம், சந்து இலக்கியம் என்று வேறுு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இது 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று ஆகும். தமிழ்விடு தூது பாடல் அமைந்த விதம்: தமிழ்விடு தூது மதுரையில் கோயில் கொண்டிருக்கும் சொக்கநாதர் மீது காதல் கொண்ட பெண் ஒருத்தி தன் காதலி கூறி வருமாறு தமிழ் மொழியை தூது விடுவதாக அமைந்துள்ளதுதான் தமிழ்விடு தூது. தமிழ்விடு தூது சிறப்பு; தமிழின் பெருமையை பாட கவிஞர்கள் கையாளும் உத்திகள் பற்பல. கவிதை அதற்கு ஒரு கருவி, கிளி, அன்னம், விரலி, பணம், தந்தி என்று பல தூதுு வாயில்களை அறிந்துள்ளோம். ஆனால் தமிழையே தூதுப் பொருளாக்கிிி உள்ளது தமிழ்விடு தூது. தமிழின்   இனிமை,இலக்கிய வளம், சுவை,அழகு, திறன், தகுதி, ஆகியவற்றைை இச்சிற்றிலக்கியத்தில் தெளிவாக விளக்கியுள்ளது. தமிழ்விடு தூது முக்கிய வினா விடை குறிப்புகள்: * தமிழ்விடு தூது ஒரு சிற்றிலக்கிய வகையைச் சார்ந்தது. * தமிழ்விடு தூது வில் இடம்பெறும் கண்ணி என்பதன் பொருள் இரண்டு கண்களை போல் இ...

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்- அறநூல்கள்-நீதி நூல்கள் - புறநூல்கள் யாவை.

  பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அற நூல்கள் (அல்லது) நீதி நூல்கள் பின்வருமாறு: * நாலடியார் * நான்மணிக்கடிகை * இன்னா நாற்பது * இனியவை நாற்பது * திருக்குறள் * திரிகடுகம் * ஆசாரக்கோவை * பழமொழி நானூறு * சிறுபஞ்சமூலம் * முதுமொழிக்காஞ்சி * ஏலாதி பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அக நூல்கள் (அல்லது) அகத்திணை நூல்கள் பின்வருமாறு: * கார் நாற்பது * ஐந்திணை ஐம்பது * ஐந்திணை எழுபது * திணைமொழி ஐம்பது * திணைமாலை நூற்றைம்பது * கைந்நிலை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் புற நூல்(அல்லது) புறத்திணை நூல்கள் பின்வருமாறு: * களவழி நாற்பது பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் மற்றும் பாடல்களின் எண்ணிக்கை: நூல்கள்                                       பாடல்கள் நாலடியார்                                  400                நான்மணிக்கடிகை                ...