ஆனந்தரங்கம் பிள்ளை (துபாசி) நாட்குறிப்பு PDF download...

 தமிழ் கடித இலக்கியம் - ஆனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்பு 


இயற்பெயர்
: ஆனந்தரங்கப் பிள்ளை.

பெற்றோர்: திருவேங்கடம்.  

தொழில்: வணிகம், அரசியல், மொழிபெயர்ப்பாளர் 

மொழிப்புலமை: தமிழ், தெலுங்கு, மலையாளம், பிரெஞ்சு, சமஸ்கிருதம், போர்த்துகீசியம் என பல மொழிகளை அறிந்தவர்.

பணி: டியுப்லக்ஸ் பிரபு என்ற பிரெஞ்சு ஆளுநரின் மொழிபெயர்ப்பாளராக இருந்த கனகராய முதலியார் என்பவர் இழந்ததால் பன்மொழி அறிவு பெற்ற ஆனந்தரங்கம் 1747 அப்பணிக்கு அமர்த்தப்பட்டார்.

வாழ்ந்த காலம்: (30 - 03 - 1709 முதல் 10 - 01 - 1761 ஆண்டு வரை).


ஆனந்தரங்கரின் வரலாற்று ஆவணம்:

ஆனந்தரங்கரின் நாட்குறிப்பு ஓர் இலக்கியமாகவும், வரலாற்று ஆவணமாகவும் மதிக்கப் பெற்றது.


ஆனந்தரங்கரின் இளமைக்காலம்:

* ஆனந்தரங்கர் சென்னை பெரம்பூரில் பிறந்தவர் ஆவார்.

* இவரின் தந்தை பெயர் திருவேங்கடம்.

* இவர்தம் மூன்றாம் வயதில் தன் தாயை இழந்தார்.

* இவர் "எம்பார்" என்பவரிடம் கல்வி கற்றார்.


ஆனந்தரங்கன் புதுவைக்கு செல்லுதல்:

* இவரின் தந்தை திருவேங்கடம் மைத்துனர் நைனியப்பரின் வேண்டுகோளுக்கு இணங்க புதுவையில் குடியேறினார்.

* அங்கு அரசுப் பள்ளியில் உதவியாளராகச் சேர்ந்து நாளடைவில் திவானாகப் பதவி உயர்வு பெற்றார்.


ஆனந்தரங்கன் எவ்வாறு மொழிபெயர்ப்பாளராக அமர்த்தப்பட்டார்:

* ஆனந்தரங்கர் கல்வி கற்ற பின்னர் பாக்குக் கிடங்கு நடத்திவந்தார்.

* "துய்ப்ளே" என்னும் ஆளுநரின் மொழிபெயர்ப்பாளர் (துபாஷி) இறந்ததால் அனந்தரங்கர் பணிக்கு அமர்த்தப்பட்டார்.


ஆனந்தரங்கரின் நாட்குறிப்பு:

* ஆனந்தரங்கர் துபாசி (இருமொழி புலமை உடையவர்)  ஆக பணியாற்றிய  காலத்தில் 1736 ஆம் ஆண்டு முதல் 1761 ஆம் ஆண்டு வரை ஏறத்தாழ 25 ஆண்டுகள் நாட்குறிப்பு எழுதினார்.

* தம் நாட்குறிப்புக்கு "தினப்படி செய்திக்குறிப்பு", "சொஸ்த லிகிதம்" என பெயரிட்டார்.


ஆனந்தரங்கர் பற்றிய வரலாற்றுச் செய்திகள்:

* பிரெஞ்சுப் படை காரைக்காலை பிடிக்கச் சென்று தோல்வி அடைந்தது.

* டில்லியின் மீது பாரசீகப் படையெடுப்பு குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கிய செய்திகள்.

* இலபூர்தோனே கப்பல் பிரெஞ்சு நாட்டிலிருந்து சென்றது பற்றிய செய்திகள்.

* வெளிநாட்டு பயணிகள் வந்து சென்ற நிகழ்வுகள்.

* ஆனந்தரங்கரின் நாட்குறிப்பு வரலாற்றுக் கருவூலமாகத் திகழ்கிறது.


ஆனந்தரங்கர்  வணிகச் செய்திகள்:

* துறைமுக நகரங்களில் உள்ள மக்களின் வருவாய்க்கு அடிப்படையாய் அமைவது அங்கு வரும் கப்பல்களின் போக்குவரத்தே ஆகும்.

* புதுச்சேரிக்கு கப்பல்கள் வந்த செய்தி கேட்டதும் மக்கள் மகிழ்ந்தனர்.


ஆனந்தரங்கர் தண்டனைச் செய்தி:

* நீதி வழங்கல், தண்டனை அளித்தல் முதலிய செய்திகளும் நாட்குறிப்பில் இடம் பெற்றுள்ளன.

* திருட்டு கும்பலின் தலைவனுக்கு கடைத்தெருவில் தூக்கில் இடப்பட்டது என்ற செய்தி குறிக்கப்பட்டுள்ளது.


ஆனந்தரங்கர் பண்பாட்டு நிலை:

* ஆனந்தரங்கர் தம் நாட்குறிப்பில் தந்தைக்கும், மகனுக்கும் இடையேயான உறவு பற்றி கூறியுள்ளார்.

* பெரியவர்களை மதிக்கும் பண்பு, பெரியவர்களுக்கு வணக்கம் செய்தல், கோவில் திருவிழாக்கள், பலகை வழக்கங்கள், மற்றும் சடங்குகள் போன்றவற்றை குறித்துள்ளார்.


ஆனந்தரங்கர் பெற்ற சிறப்புகள்:

* மொசபர்சங் ஆனந்தரங்கருக்கு 3000 குதிரைகளை வழங்கி அவருக்கு          "மண்சுபேதார்" எனும் பட்டம் வழங்கினார்.

* செங்கல்பட்டு கோட்டைக்கு தளபதியாகவும், பின்னர் செங்கல்பட்டு மாவட்டம் முழுமைக்கும் ஜாகிர் தாராவும் நியமிக்கப்பட்டார்.

* ஆளுநர் மாளிகைக்குள் பல்லகில் செல்லும் உரிமை அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

* ஆனந்தரங்கர் தங்கப் பிடி போட்ட கைத்தடி வைத்துக்கொள்ளவும், செருப்பணிந்து ஆளுநர் மாளிகைக்குள் செல்லவும் உரிமை பெற்றிருந்தார்.


பெப்பிசு பற்றிய செய்திகள்:

* உலக நாட்குறிப்பு இலக்கியத்தின் முன்னோடி - பெப்பிசு.

* இந்தியாவின் பெப்பிசு - ஆனந்தரங்கர்.

* நாட்குறிப்பு வேந்தர் - ஆனந்தரங்கர்.


ஆனந்தரங்கர் குறித்து வெளிவந்த இலக்கியங்கள்:

* ஆனந்தரங்கர் கோவை - தியாகராச தேசிகர்.

* கள்வன் நொண்டிச் சிந்து

* ஆனந்தரங்கன் பிள்ளைத் தமிழ் - அரிமதி தென்னகன்

* ஆனந்தரங்கர் விஜய சம்பு - சீனிவாச கவி (வடமொழியில் வெளிவந்தது)

* ஆனந்தரங்கர் ராட்சந்தமு - கச்தூரி ரங்க கவி ( தெலுங்கு மொழியில் வெளிவந்தது).

* ஆனந்தரங்கன் தனிப்பாடல்கள்

* ஆனந்தரங்கம் புதினங்கள் 


ஆனந்தரங்கம் மறைவு:

ஆனந்தரங்கம் மறைந்து 85 ஆண்டுகள் கழித்தே அவர் எழுதிய நாட்குறிப்புகள் கிடைத்தன என்பது குறிப்பிடத்தக்கது.

 இந்த நாட்குறிப்புகளை 1896 இல் பிரெஞ்சு அரசாங்கம் பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்த்தது. 

இவரின் நாட்குறிப்பு எட்டுத் தொகுதிகளாக வெளி வந்துள்ளது.

 ஆனந்தரங்கம் தமிழ் மொழியில் பற்று உடையவராக திகழ்ந்தார். 

 தமிழிலே தான் கையெழுத்திட்டார். நவீன தமிழ் இலக்கியத்தின் அவரது பங்கு முக்கியமானதாகும். இவர் தனது ஐம்பத்து ஆறாம் வயதில் 1761 ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 10ஆம் நாள் இவ்வுலகை விட்டு மறைந்தார்.












Post a Comment

Previous Post Next Post