மறைமலை அடிகள் - தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை பற்றிய முழுமையான விவரங்கள்.....

தூயதமிழ் தந்தை - மறைமலை அடிகள் வாழ்க்கை வரலாறு முக்கிய குறிப்புகள்.....

 

மறைமலை அடிகள் இயற்பெயர் : வேதாசலம்.
மறைமலை அடிகள் பிறந்த ஊர்:  திருக்கழுக்குன்றம்.
மறைமலை அடிகள் பெற்றோர் பெயர் : சொக்கநாத பிள்ளை மற்றும் சின்னம்மையார்.
மறைமலை அடிகள் மகள் பெயர் : T. நீலாம்பிகை.


1. மறைமலை அடிகளாரின்  இயற்பெயர் வேதாச்சலம் என பெயரிட காரணம்:

பல ஆண்டுகளாக பிள்ளைப்பேறு இல்லாமல் இருந்து திருக்கழுக்குன்றம் சிவன் வேதாசலரையும், அம்மை சொக்கம்மையாரையும்  வேண்டி நோன்பிருந்து பிள்ளை பேறு பெற்றதால் தம் பிள்ளைக்கு வேதாசலம் என பெயரிட்டார். 

* அதன் பின்னர் தனித்தமிழ் பற்று காரணமாக 1916ஆம் ஆண்டு தம் பெயரை மறைமலை (வேதம் - மறை ) மற்றும் (அசலம் - மலை) என்று மாற்றிக் கொண்டார்.

* மறைமலை அடிகள் ஜூலை மாதம் 15ஆம் தேதி 1876 ஆம் ஆண்டு முதல் செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி 1950ஆம் ஆண்டு வரை தன் வாழ்க்கை பயணத்தை தொடர்ந்தார்.
மறைமலை அடிகள் ஒரு புகழ் பெற்ற தமிழ் அறிஞர் ஆவார்.


2. மறைமலை அடிகள் பற்றிய முக்கிய குறிப்புகள்:

* தமிழ் ஆய்வாளர் தமிழையும், வடமொழியையும், ஆங்கிலத்தையும் நன்கு கற்றவர்.

* உயர்தனிச் செம்மொழியாம் தமிழை வடமொழி  கலப்பின்றி தூய நடையில் எழுதிப் பிறரையும் ஊக்குவித்தவர் என்ற பெருமைக்கு உரியவர்.

* தனித்தமிழ் இயக்கத்தை தொடங்கியவர் மேலும் தனித்தமிழ் இயக்கத்தைத் தொடங்கி தமிழைச் செழுமையாக வளர்த்தவர் என்ற பெருமைக்குரியவர். 

* தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை என்று மறைமலை அடிகள் அழைக்கப்படுகிறார்.

* பரிதிமாற் கலைஞரும், மறைமலை அடிகளும் தனித்தமிழ் இயக்கத்தின் இரு பெரும் முன்னோடித்  தலைவர்களாக திகழ்ந்தனர்.

* இவர்கள் இருவரும் குல., சமய வேறுபாடின்றி பொதுமக்களுக்கு கடவுள் பற்றும் மற்றும் சமயப் பற்றும் உண்டாக்கும் முறையில் சொற்பொழிவுகள் ஆற்றுவதில் வல்லவர்களாக திகழ்ந்தனர்.

* சைவத் திருப்பணியும், சீர்திருத்தப் பணியும் செவ்வனே செய்து தமிழர்தம் உள்ளங்களில் நீங்காத இடம் பெற்றவர் மறைமலை அடிகள் ஆவார்.

* மறைமலைஅடிகள் நாகையில் வெஸ்லியன் தொண்டு நிறுவனக் கல்லூரியைச் சேர்ந்த உயர்நிலைப்பள்ளியில் நான்காம் படிவம் வரை படித்தார்.

* பின்னர் அவரது தந்தையாரின் மறைவு காரணமாக அவரால் பள்ளிப்படிப்பைத் தொடர முடியவில்லை ஆனால் நாகையில் புத்தகக் கடை வைத்திருந்த தமிழ்ப்புலமை மிகுந்த நாராயணசாமி பிள்ளை என்பவரிடம் தமிழ் கற்றார்.

* மறைமலையடிகள் யாரிடம் தமிழ் கற்றார் - நாராயணசாமி பிள்ளை.

* மறைமலை அடிகள் சைவ சித்தாந்தம் யாரிடம் கற்றார் - "சைவ சித்தாந்த சண்டமாருதம்" என்ற புகழ் பெற்றிருந்த "சோமசுந்தர நாயக்கர்".

* பின்னர் சென்னைக்கு வந்த பிறகு கிறிஸ்தவ கல்லூரியில் வீ. கோ சூரியநாராயண சாஸ்திரியார் உடன் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார்.

* 1905 ஆம் ஆண்டு "சைவ சித்தாந்த மகா சமாசம்" என்ற அமைப்பைத் தோற்றுவித்தார் மறைமலை அடிகள்.

* பல ஆண்டுகள் பேராசிரியராக பணியாற்றிய பின் பல்லாவரத்தில் ராமலிங்க வள்ளலாரின் கொள்கைப்படி 22.04.1912 ஆம் ஆண்டு "சமரச சுத்த சன்மார்க்க சங்கம்" என்ற அமைப்பை தொடங்கினார்
மறைமலைஅடிகள்.

* பின்னர் தனித்தமிழ் ஈடுபாட்டால் அதனை "பொதுநிலை கழகம்" என பெயர் மாற்றினார் மறைமலை அடிகள்.

* திருமுருகன் அச்சுக்கூடத்தை ஏற்படுத்திப் பல நூல்களை வெளியிட்டார், "மணிமொழி நூல்நிலையம்" எனும் நூல் நிலையத்தை உருவாக்கினார் மறைமலைஅடிகள்.
* பல்லாவரம் முனிவர் என்று அழைக்கப்படுபவர் - மறைமலை அடிகள்.


3.  மறைமலை அடிகள் வாழ்ந்த காலத்தில் இருந்த பல புகழ்பெற்ற தமிழறிஞர்கள் பெயர்கள் பின்வருமாறு காணலாம்:

1. மனோன்மணியம் இயற்றிய சுந்தரனார்.
2. பெரும்புலவர் கதிரை வேலர்.
3. திரு. வி. கல்யாண சுந்தரனார்.
4. நாவலர் ச. சோமசுந்தர பாரதியார்.
5. தமிழ் தாத்தா உ .வே .சாமிநாத ஐயர்.
6. தணிகைமணி வ.சு. செங்கல்வராயர்.
7. ரசிகமணி டி. கே. சிதம்பரநாதர்.
8. பேராசிரியர் ச. வையாபுரியார்.
9. கோவை ராமலிங்கம்.
10. சுப்ரமணிய பாரதியார்.
11. மீனாட்சி சுந்தரனார்.
12. பொத்தக வணிகரும் மனோன்மணியம் ஆசிரியர் சுந்தரனாரின் ஆசிரியரும் ஆன நாராயணசாமி.
13. "சைவசித்தாந்த சண்டமாருதம்" என்று புகழப்பட்ட சோமசுந்தர நாயகர்.


4. மறைமலை அடிகளார் பற்றிய சிறப்புச் செய்திகள்:

1. தனித்தமிழ் தந்தை  என்று அழைக்கப்படுபவர் - மறைமலை அடிகள்.
2. தனித்தமிழ் நடையின் தந்தை என்று அழைக்கப்படுபவர் - மறைமலை அடிகள்.
3. தனித்தமிழ் இயக்கம் கண்டவர் - மறைமலை அடிகள்.
4. தனித்தமிழ் இயக்கத்தை தோற்றுவித்தவர் - மறைமலை அடிகள்.
5. தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் - மறைமலை அடிகள்.
6. தனித்தமிழ் இயக்கம் என்ற நூலின் ஆசிரியர் - மறைமலை அடிகள்.


5.  மறைமலை அடிகள் இயற்றிய நூல்கள்:
மறைமலையடிகள் மொத்தம் 54 நூல்களை எழுதியுள்ளார்.

1. பண்டைக்காலத் தமிழரும் ஆரியரும் (1906)
2. தமிழர் மதம் (1941)
3. வேளாளர் நாகரிகம் (1923)
4. பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம் (1958)
5. தமிழ் நாட்டவரும் மேல் நாட்டவரும் (1936)
6. Tamilian and Aryan form of marriage (1936)
7. இந்தி பொது மொழியா (1937)
8. Can Hindi be a lingua franca of India (1969)
9. சிவஞான போத ஆராய்ச்சி (1958)
10. சைவ சித்தாந்த ஞானபோதம் ( 1906)
11. Saiva Siddhanta as a philosophy of practical knowledge (1940)
12. வேத சிவாகமப் பிராமணியம் (1900)
13. வேதாந்த மத விசாரம் (1899)
14. துகளறு போதம் உரை ( 1898)
15. சித்தாந்த ஞானபோதம், சதம் மணிக்கோவை குறிப்புரை (1898)
16. திருவாசக விரிவுரை (1940)
17. கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா (1968)
18. சோமசுந்தர நாயக்கர் வரலாறு (1957)
19. சோமசுந்தரக் காஞ்சி ஆக்கம் (1901)
20. மாணிக்கவாசகர் வரலாறு (1952)
21. மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் (1930)
22. மாணிக்கவாசகர் மாட்சி (1935)
23. திருவொற்றி முருகர் மும்மணிக்கோவை (1900)
24. இளைஞர்களுக்கான இன்றமிழ்( 1957)
25. சிறுவர்க்கான செந்தமிழ் (1934)
26. சிந்தனைக் கட்டுரைகள் (1908)
27. கருத்தோவியம் (1976)
28. உரை மணிக் கோவை (1972)
29. அறிவுரைக் கோவை (1971)
30. அறிவுரைக் கொத்து (1921)
31. மறைமலை அடிகள் கடிதங்கள் (1957)
32. குமுதவல்லி அல்லது நாகநாட்டு அரசி (புதினம் - 1911)
33. கோகிலாம்பாள் கடிதங்கள் (புதினம் - 1921)
34. அம்பிகாபதி அமராவதி (நாடகம் -1954)
35. மறைமலை அடிகள் பாமணி கோவை (பாடல்கள் - 1977)
36. முனிமொழிபிரகாசிகை  (1899)
37. திருக்குறள் ஆராய்ச்சி (1951)
38. முதல் குரல் வாத  நிராகரணம் (1898)
39. சாதி வேற்றுமையும் போலிச் சைவமும் (1911)
40. பட்டினப்பாலை - ஆராய்ச்சி உரை (1906)
41. முல்லைப்பாட்டு - ஆராய்ச்சி உரை (1903)
42. முற்கால பிற்காலத் தமிழ்ப் புலவோர் (1936)
43. Ancient and modern Tamil poet (1937)
44. Ocean of wisdom, bimonthly (1908- 1909)
45. Oriental mystic myna bimonthly (1908-1909)
46. ஞான சகாரம் மாதிகை (1902)
47. சாகுந்தல நாடக ஆராய்ச்சி (1934)
48. சாகுந்தல நாடகம் ( சமஸ்கிருதத்திலிருந்து மொழிபெயர்த்தது - 1907)
49. மரணத்தின் பின் மனிதர் நிலை (1911)
50. தொலைவில் உணர்தல் (1935)
51. யோக நித்திரை அறிதுயில் (1922)
52. மனித வசியம் அல்லது மனக்கவர்ச்சி (1927)
53. மக்கள் நூறாண்டு உயிர் வாழ்க்கை (1933)
54. பொருந்தும் உணவும் பொருந்தா உணவும் (1921)

 


Post a Comment

Previous Post Next Post