Skip to main content

புதுக்கவிதை - ஈரோடு தமிழன்பன் TNPSC group 4 exam material....

 புதுக்கவிதை -  கவிஞர்(ஈரோடு தமிழன்பன்)


இயற்பெயர்: ஜெகதீசன்

பெற்றோர்கள்: நடராஜன் மற்றும் வள்ளியம்மாள்

 பிறந்த ஊர்: சென்னிமலை (ஈரோடு மாவட்டம்)

பிறந்த வருடம்: 28 - 09 - 1940

புனைப்பெயர்: விடிவெள்ளி

சிறப்பு பெயர்: மரபில் பூத்து புதுமையில் கனிந்தவர். 


ஈரோடு தமிழன்பன் பற்றிய முக்கிய குறிப்புகள்:

1. சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றினார்.

2. தமிழக அரசின் இயல், இசை, நாடக மன்றத்தின் நிர்வாக குழு உறுப்பினராகவும் பணியாற்றினார்.

3. 1972 ஆம் ஆண்டு தமிழக அரசின் இயல், இசை, நாடக மன்றத்தில் கலைமாமணி விருது பெற்றவர் ஈரோடு தமிழன்பன் ஆவார்.

4. மரபுக் கவிதை எழுதி புதுக்கவிதைக்கு வந்த தமிழ் பேராசிரியர் ஈரோடு தமிழன்பன் ஆவார்.

5. தனிப்பாடல் திரட்டு ஓர் ஆய்வு என்ற ஆராய்ச்சிக்காக முனைவர் phd பட்டம் பெற்றவர்.

6. சென்னை புதுக்கல்லூரியில் தமிழ் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

7. இவர் ஒரு "வானம்பாடி கவிஞர்" என்று அழைக்கப்படுகிறார்.

8. "ஆயிரம் அரங்கம் கண்ட கவியரங்க கவிஞர்" ஈரோடு தமிழன்பன் ஆவார்.

9. "கவியரங்க கவிஞர்" என்று அழைக்கப்படுபவர் ஈரோடு தமிழன்பன்.

10. இவர் "பாரதிதாசன் பரம்பரை கவிஞர்" ஆவார்.

11. இவரது கவிதைகள் இந்தி, உருது, மலையாளம், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.

12. ஹைக்கூ, சென்ரியு, லிமரைக்கூ எனும் புதுப்புது வடிவங்களில் கவிதை நூல்களை கொடுத்துள்ளார்.

13. தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றுள்ளார்.

14. "வணக்கம் வள்ளுவ" எனும் கவிதைத் தொகுப்பிற்காக சாகித்ய அகடமி விருது 2004ஆம் ஆண்டில் பெற்றார்.

15. தமிழ்நாடு அரசின் அறிவியல் தமிழ் மன்றத்தின் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.

16. "அரிமா நோக்கு என்ற ஆய்வு இதழின்" ஆசிரியர் தமிழன்பன் ஆவார்.

17. மரபுக்கவிதை புதுக்கவிதை திறனாய்வு படைப்பதில் வல்லவர் ஈரோடு தமிழன்பன் ஆவார்.


ஈரோடு தமிழன்பன் எழுதிய நூல்கள்:

1. தமிழன்பன் கவிதைகள் (தமிழக அரசு பரிசு பெற்ற நூல்)

2. சூரிய பிறை

3. ஊமை வெயில்

4. ஒரு வண்டி சென்ரியு 

5. நந்தனை எரித்த நெருப்பின் மிச்சம்

6. நிலா வரும் நேரம்

7. தீவுகள் கரையேறுகின்றன

8. காலத்திற்கு ஒரு நாள் முந்தி

9. தோணி வருகிறது (முதல் கவிதை நூல்)

10. சிலிர்ப்புகள்

11. விடியல் விழுதுகள்

12. திரும்பி வந்த தேர்வலம்

13. மின்மினி காடுகள்

14. சிகரங்கள் மேல் விரியும் சிறகுகள்

15. பொதுவுடமை பூபாளம் 

16. வணக்கம் வள்ளுவ


ஈரோடு தமிழன்பன் பற்றிய முக்கிய மேற்கோள்கள்:

* ஒரு பூவின் மலர்ச்சியையும், ஒரு குழந்தையின் புன்னகையையும் புரிந்துகொள்ள அகராதிகள் தேவைப்படுவதில்லை என்று கூறியவர் ஈரோடு தமிழன்பன் ஆவார்.

* "சதை திரண்டு உன் வார்த்தைகளின் வீரம் கலகலத்து ஓடுகிறது" எங்கள் உள்ளங்களில் என்று கூறியவர் ஈரோடு தமிழன்பன் ஆவார்.


ஈரோடு தமிழன்பன் ஒரு பன்முக படைப்பாளி என்பதற்கான சான்று:

தமிழக கவிஞர், ஆசிரியர், மரபுக் கவிஞர், கவியரங்க கவிஞர், புதுக்கவிதை கவிஞர், சிறுகதை ஆசிரியர் , புதின ஆசிரியர், நாடக ஆசிரியர், சிறார் இலக்கிய படைப்பாளி, வாழ்க்கை வரலாற்று ஆசிரியர், திறனாய்வாளர், கட்டுரையாளர், ஓவியர், சொற்பொழிவாளர், திரைப்பட இயக்குனர், திரைப்பட பாடலாசிரியர் என பன்முக ஆளுமைகளை கொண்டவர்தான் ஈரோடு தமிழன்பன். 




Comments

Popular posts from this blog

சீறாப்புராணம் - உமறுப் புலவர்.

  தமிழில் எழுதப்பட்ட தலைசிறந்த இஸ்லாமிய இலக்கியம் "சீறாப்புராணம்" ஆகும். சீராபுராணம் இறைத்தூதர் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றினை மையமாகக்கொண்டு தமிழ் மரபுகளைப் பின்பற்றி எழுதப்பட்ட ஒரு காவியம் ஆகும். இத்தகைய நூலை இயற்றியவர் பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த உமறுப் புலவர் இயற்றிய நூல்தான் சீறாப்புராணம். மேலும் உமறுப்புலவர் அதே காலத்தில் வாழ்ந்த சீதக்காதியின் ஆதரவைப் பெற்றார். உமறுப் புலவர் வள்ளல் சீதக்காதியின் பெருமையை " செத்தும் கொடுத்தான் சீதக்காதி" என  சொற்றொடர் விளக்கும். சீறாப்புராணம் அமைவிடம்: சீராபுராணம் இரண்டு பாகங்களாக அமைந்துள்ளது. முதல் பாகத்தில் 44 படலங்களும், இரண்டாம் பாகத்தில் 47 பக்கங்களும் உள்ளன. சீறாப் புராணத்தில் இடம் பெறும் முதல் பாகம்: முதல் பாகத்தில் 3 காண்டங்கள் உள்ளன. இப்பாகத்தில் மொத்தம் 44 படலங்கள் உள்ளன. 1. விலாதத்துக் காண்டம். 2. நுபுவ்வத்துக் காண்டம். 3. ஷீலாஷது காண்டம். * விலாதத்துக் காண்டம்: 1. கடவுள் வாழ்த்துப் படலம் 2. நாட்டுப் படலம் 3. தலைமுறைப் படலம் 4. நபியவதாரப் படலம் 5. அலிமா முலையூர் படலம் 6. இலாஞ்சனை தரித்த படலம் 7. ...

தமிழ்விடு தூது - எத்தனை கண்ணிகள்.

தமிழ்விடு தூது - ஆசிரியர் பெயர் தெரியவில்லை. தமிழ் விடு தூது நூல் அமைப்பு: தமிழ் சிற்றிலக்கிய வகைகளுள் தூது என்பதும் ஒருவகை இலக்கியமாகும். இது வாயில் இலக்கியம், சந்து இலக்கியம் என்று வேறுு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இது 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று ஆகும். தமிழ்விடு தூது பாடல் அமைந்த விதம்: தமிழ்விடு தூது மதுரையில் கோயில் கொண்டிருக்கும் சொக்கநாதர் மீது காதல் கொண்ட பெண் ஒருத்தி தன் காதலி கூறி வருமாறு தமிழ் மொழியை தூது விடுவதாக அமைந்துள்ளதுதான் தமிழ்விடு தூது. தமிழ்விடு தூது சிறப்பு; தமிழின் பெருமையை பாட கவிஞர்கள் கையாளும் உத்திகள் பற்பல. கவிதை அதற்கு ஒரு கருவி, கிளி, அன்னம், விரலி, பணம், தந்தி என்று பல தூதுு வாயில்களை அறிந்துள்ளோம். ஆனால் தமிழையே தூதுப் பொருளாக்கிிி உள்ளது தமிழ்விடு தூது. தமிழின்   இனிமை,இலக்கிய வளம், சுவை,அழகு, திறன், தகுதி, ஆகியவற்றைை இச்சிற்றிலக்கியத்தில் தெளிவாக விளக்கியுள்ளது. தமிழ்விடு தூது முக்கிய வினா விடை குறிப்புகள்: * தமிழ்விடு தூது ஒரு சிற்றிலக்கிய வகையைச் சார்ந்தது. * தமிழ்விடு தூது வில் இடம்பெறும் கண்ணி என்பதன் பொருள் இரண்டு கண்களை போல் இ...

நாலடியார் நூல் விளக்கம் மற்றும் ஆசிரியர்கள் முழு விளக்கம்

  1. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் முதன்மையான பாடப்படும் நூல் "நாலடியார்" 2. தமிழ் மொழிகளில் திருக்குறளோடு ஒப்பிட்ட பாடப்படும் நூல் "நாலடியார்" 3. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் உள்ள ஒரே ஒரு தொகை நூல் "நாலடியார்" 4 . முப்பெரும் அற நூல்களில் ஒன்றாக திகழும் நூல் "நாலடியார்" 5. முப்பெரும் நூல்கள் யாவை "திருக்குறள்" "நாலடியார்" "பழமொழி நானூறு" 6. துறவறத்தையும், நிலையாமையும் அதிகமாக வலியுறுத்தி பாடப்பட்ட நூல் "நாலடியார்" 7. திருக்குறளைப் போன்று வகை தொகை கொண்டு வடிவமைக்கப்பட்ட நூல் "நாலடியார்" 8 . நாலடியார் பிரித்து எழுதுக "நாலடி  + ஆர்" 9. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் அறம் சார்ந்த நூல் எது "நாலடியார்" 10 . நாலடியார் என பெயர் வரக் காரணம் "நாலடி கொண்ட வெண்பாவால் எழுதப்பட்டதால் நாலடியார் என பெயர் பெற்றது" 11. நாலடியார் பாடலைப் பாடியவர்கள் "சமணமுனிவர்கள் பலரால்" 12 . நாலடியார் அடி எல்லை "4 அடிகள்" 13. நாலடியார் பாடல் உணர்த்தும் பொருள் "அறம் -...