Skip to main content

புதுக்கவிதை - கவிஞர் (தேவதேவன் வாழ்க்கை) வரலாறு...

 புதுக்கவிதை - கவிஞர் (தேவதேவன்)

இயற்பெயர்: பிச்சுமணி "கைவல்யம்"

பிறந்த ஊர்: இராஜா கோயில் (விருதுநகர் மாவட்டம்)

பிறந்த வருடம்: 05 - 05 - 1948

புனைப்பெயர்: தேவதேவன்

தந்தை: பிச்சுமணி


தேவதேவன் பற்றிய முக்கிய குறிப்புகள்:

1. ஈ.வே. ராமசாமி இவருக்கு "கைவல்யம்" என்ற பெயரை இட்டார்.

2. தூத்துக்குடிக்கு பிழைப்பு தேடி வந்த கைவல்யம் இன்றளவும் அங்கேயே தங்கி இருக்கிறார்.

3. பள்ளிப் படிப்பை முடித்ததும் "தேவதேவன் அச்சகம்" ஒன்றை நடத்தி வந்தார்.

4. இளம் வயதில் மரபு கவிதைகள் எழுதி வந்த கைவல்யம்  தோரோ, எமர்சன் ஆகியோரின் படைப்புகளால் கவரப்பட்டு நவீன கவிதைகள புனையத் தொடங்கினார்.

5. தேவதேவன் கவிதைகள் எளிய சிக்கலில்லாத மொழிநடையை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

6. இயற்கை சார்ந்த படிமங்களை உள்ளடக்கிய தத்துவ நோக்குடன் சொல்பவைதான் தேவதேவன் கவிதைகள்.

7. அவரது சிறந்த கவிதைகளில் மென்மையான இசை ஒழுங்கு காணப்படும் என்பது முக்கியமான ஒன்று.

8. தேவதேவனின்  முதல் கவிதை தொகுப்பு "குளித்துக் கரையேறாத கோபியர்கள்" 1982 - ஆம் ஆண்டு வெளிவந்தது.

9. இரண்டாவது தொகுப்பு "மின்னற் பொழுதே தூரம்" பிரமிள் முன்னுரையுடன் வெளிவந்தது கவிதை வாசகர்களால் கவனிக்கப்பட்டது.

10. தொடர்ந்து "மாற்றப்படாத வீடு" பிரமிள் முன்னுரையுடன் வெளிவந்தது.

11. 2005 ஆம் ஆண்டு அவரது கவிதைகளுக்கான முழுத்தொகுப்பு தேவதேவன் கவிதைகள் என்ற பெயருடன் தமிழினி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

12. தேவதேவன் "கவிதைபற்றி" என்ற உரையாடல் நூலையும், "அலிபாபாவும், மோர்ஜியானாவும்" என்ற நாடக நூலையும் எழுதி வெளியிட்டிருக்கிறார். 

13. 1970 முதல் 1980 களில் தூத்துக்குடியில் கலைப்படங்களுக்கான திரைப்படச்சங்கம் ஒன்றையும் நடத்தி வந்தார்.

14. தேவதேவனைப் பற்றி ஜெயமோகன் முழுமையான திறனாய்வு நூல் ஒன்றை எழுதி இருக்கிறார்.

15. நவீன காலத்திற்கு பின் தமிழ் கவிதை "தேவதேவனை முன்வைத்து" என்ற அந்நூல் கவிதா பதிப்பகத்தால் 1998 - ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. 

16. தமிழினி வெளியீடாக ஜெ.பிரான்ஸ் கிருபா இயக்கத்தில் தேவதேவனை பற்றி "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற செய்தி படம் 2007-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.


தேவதேவன் பெற்ற விருதுகள்:

* விஷ்ணுபுரம் விருது

* லில்லி தேவசிகாமணி விருது

* தேவமகள் அறக்கட்டளை விருது

* தமிழக அரசின் தமிழ் வளர்ச்சிக்கான விருது

* விளக்கு விருது

* தூத்துக்குடி சாரால் - ராஜபாண்டியன் வாழ்நாள் இலக்கிய சாதனை விருது.


தேவதேவன் எழுதிய நூல்கள்:

1. மாற்றப்படாத வீடு

2. குளித்துக் கரையேறாத கோபியர்கள்

3. நட்சத்திர மீன்

4. அந்தரத்தில் ஒரு இருக்கை

5. சின்னஞ்சிறிய சோகம்

6. விடிந்தும் விடியாத பொழுது

7. மின்னற் பொழுதே தூரம்

8. பூமியை உதறி எழுந்து மேகங்கள்

9. விண்ணளவு பூமி

10. புல்வெளியில் ஒரு கல்

11. நுழைவாயிலிலேயே நின்றுவிட்ட கோலங்கள்

12. விரும்பியதெல்லாம்





Comments

Popular posts from this blog

சீறாப்புராணம் - உமறுப் புலவர்.

  தமிழில் எழுதப்பட்ட தலைசிறந்த இஸ்லாமிய இலக்கியம் "சீறாப்புராணம்" ஆகும். சீராபுராணம் இறைத்தூதர் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றினை மையமாகக்கொண்டு தமிழ் மரபுகளைப் பின்பற்றி எழுதப்பட்ட ஒரு காவியம் ஆகும். இத்தகைய நூலை இயற்றியவர் பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த உமறுப் புலவர் இயற்றிய நூல்தான் சீறாப்புராணம். மேலும் உமறுப்புலவர் அதே காலத்தில் வாழ்ந்த சீதக்காதியின் ஆதரவைப் பெற்றார். உமறுப் புலவர் வள்ளல் சீதக்காதியின் பெருமையை " செத்தும் கொடுத்தான் சீதக்காதி" என  சொற்றொடர் விளக்கும். சீறாப்புராணம் அமைவிடம்: சீராபுராணம் இரண்டு பாகங்களாக அமைந்துள்ளது. முதல் பாகத்தில் 44 படலங்களும், இரண்டாம் பாகத்தில் 47 பக்கங்களும் உள்ளன. சீறாப் புராணத்தில் இடம் பெறும் முதல் பாகம்: முதல் பாகத்தில் 3 காண்டங்கள் உள்ளன. இப்பாகத்தில் மொத்தம் 44 படலங்கள் உள்ளன. 1. விலாதத்துக் காண்டம். 2. நுபுவ்வத்துக் காண்டம். 3. ஷீலாஷது காண்டம். * விலாதத்துக் காண்டம்: 1. கடவுள் வாழ்த்துப் படலம் 2. நாட்டுப் படலம் 3. தலைமுறைப் படலம் 4. நபியவதாரப் படலம் 5. அலிமா முலையூர் படலம் 6. இலாஞ்சனை தரித்த படலம் 7. ...

தமிழ்விடு தூது - எத்தனை கண்ணிகள்.

தமிழ்விடு தூது - ஆசிரியர் பெயர் தெரியவில்லை. தமிழ் விடு தூது நூல் அமைப்பு: தமிழ் சிற்றிலக்கிய வகைகளுள் தூது என்பதும் ஒருவகை இலக்கியமாகும். இது வாயில் இலக்கியம், சந்து இலக்கியம் என்று வேறுு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இது 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று ஆகும். தமிழ்விடு தூது பாடல் அமைந்த விதம்: தமிழ்விடு தூது மதுரையில் கோயில் கொண்டிருக்கும் சொக்கநாதர் மீது காதல் கொண்ட பெண் ஒருத்தி தன் காதலி கூறி வருமாறு தமிழ் மொழியை தூது விடுவதாக அமைந்துள்ளதுதான் தமிழ்விடு தூது. தமிழ்விடு தூது சிறப்பு; தமிழின் பெருமையை பாட கவிஞர்கள் கையாளும் உத்திகள் பற்பல. கவிதை அதற்கு ஒரு கருவி, கிளி, அன்னம், விரலி, பணம், தந்தி என்று பல தூதுு வாயில்களை அறிந்துள்ளோம். ஆனால் தமிழையே தூதுப் பொருளாக்கிிி உள்ளது தமிழ்விடு தூது. தமிழின்   இனிமை,இலக்கிய வளம், சுவை,அழகு, திறன், தகுதி, ஆகியவற்றைை இச்சிற்றிலக்கியத்தில் தெளிவாக விளக்கியுள்ளது. தமிழ்விடு தூது முக்கிய வினா விடை குறிப்புகள்: * தமிழ்விடு தூது ஒரு சிற்றிலக்கிய வகையைச் சார்ந்தது. * தமிழ்விடு தூது வில் இடம்பெறும் கண்ணி என்பதன் பொருள் இரண்டு கண்களை போல் இ...

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்- அறநூல்கள்-நீதி நூல்கள் - புறநூல்கள் யாவை.

  பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அற நூல்கள் (அல்லது) நீதி நூல்கள் பின்வருமாறு: * நாலடியார் * நான்மணிக்கடிகை * இன்னா நாற்பது * இனியவை நாற்பது * திருக்குறள் * திரிகடுகம் * ஆசாரக்கோவை * பழமொழி நானூறு * சிறுபஞ்சமூலம் * முதுமொழிக்காஞ்சி * ஏலாதி பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அக நூல்கள் (அல்லது) அகத்திணை நூல்கள் பின்வருமாறு: * கார் நாற்பது * ஐந்திணை ஐம்பது * ஐந்திணை எழுபது * திணைமொழி ஐம்பது * திணைமாலை நூற்றைம்பது * கைந்நிலை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் புற நூல்(அல்லது) புறத்திணை நூல்கள் பின்வருமாறு: * களவழி நாற்பது பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் மற்றும் பாடல்களின் எண்ணிக்கை: நூல்கள்                                       பாடல்கள் நாலடியார்                                  400                நான்மணிக்கடிகை                ...