ந. பிச்சமூர்த்தி : 15-08-1900 முதல் 04-12-1976
ந. பிச்சமூர்த்தி அண்மைய தமிழ் இலக்கிய முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார். தமிழ் புதுக்கவிதையின் தந்தை என்று அழைக்கப்படுபவர் “பிச்சமூர்த்தி”. தத்துவார்த்தம் பிணைந்த கதை சொல்லும் பாணியை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர் பிச்சமூர்த்தி வழக்கறிஞர் பட்டம் பெற்று பணியாற்றிய பிச்சமூர்த்தி இந்து அறநிலையத் துறை அதிகாரியாகவும் பணியாற்றியவர். இவரின் படைப்புகள் அனைத்தும் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.
ந. பிச்சமூர்த்தியின் வாழ்க்கை குறிப்பு:
கும்பகோணத்தில் வாழ்ந்த நடேச தீட்சிதர் மற்றும் காமாட்சி அம்மாள் ஆகிய இருவருக்கும் நான்காவது குழந்தையாக 1900ஆம் ஆண்டு ஆகத்து 15 பிச்சமூர்த்தி பிறந்தார். அவருக்கு பெற்றோர் இட்ட பெயர் வேங்கட மகாலிங்கம். நடேச தீட்சிதர் தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு மற்றும் மராட்டிய மொழிகளில் ஹரிகதா சொற்பொழிவு செய்யும் அளவிற்கு தேர்ச்சி பெற்றவர் சைவ புராணங்கள் செய்தவர்.
பிச்சமூர்த்தி கும்பகோணத்தில் தன் பள்ளிப் படிப்பையும் கல்லூரி படிப்பையும் முடித்தார். தத்துவத்தில் பட்டம் பெற்று சென்னை சட்டக் கல்லூரியில் பட்டம் பெற்றார் 1925 முதல் 1938 வரை வழக்கறிஞராக பணிபுரிந்தார் மற்றும் 1939 முதல் 1959 வரை இந்து அறநிலையத் துறை அதிகாரியாக பணிபுரிந்தார்.
பிச்சமூர்த்தி நவ இந்தியா பத்திரிகையில் சிறிது காலம் பணியில் இருந்தார் இவரின் எழுத்துக்கள் சுதேசமித்திரன், சுதந்திரச் சங்கு, தினமணி, மணிக்கொடி போன்ற பத்திரிகைகளில் வெளிவரத் தொடங்கின.
இந்தத் தத்துவ மரபில் வாழ்ந்து வந்த செழுமையின் உள் தூண்டல் அவரது படைப்பு மனோபாவத்தின் அடிநாதமாக இழையோடியது. “இலக்கியமும் நம்மைப் போல நம்மை அறியாமலேயே – ஒரு வேளை நம்மையும் மீறி உந்தித் தள்ளும் சக்தி அல்லது எதுவோ….” என நம்பினார். இந்த நம்பிக்கையின் சோதனை முயற்சிகளாவே பிச்சமூர்த்தியின் படைப்புகள் வெளிப்பட்டன.
பிச்சமூர்த்தியின் கவிதைகள்:
இயற்கையையும் வாழ்க்கை அனுபவங்களையும் இணைத்து அறிவுத் தெளிவுடன் நல் வாழ்வுக்கான தத்துவ உண்மைகளை காண முயன்றவர் பிச்சமூர்த்தி.
இவரது 75 கவிதைகளை தொகுத்து 1975 இல் எழுத்து பிரசுர வெளியீடாக சி சு செல்லப்பா வெளியிட்டார். விடுபட்டு இருந்த 8 கவிதைகளை தேடி சேர்த்து பிச்சமூர்த்தி கவிதைகள் என்ற பெயரில் 1985 இல் க்ரியா வெளியிட்டது.
மதி நிலையம் வெளியீடாக 2000ம் ஆண்டில் ந.பிசமூர்த்தி கவிதைகள் எனும் தொகுப்பில் வெளிவந்தது.
பிச்சமூர்த்தியின் படைப்புகள்:
சிறுகதை:
1. பதினெட்டாம் பெருக்கு (1944)
2. ஜம்பரும் வேஷ்டியும் (1947)
3. மோகினி (1951)
4. குடும்ப ரகசியம் (குறும் புதினம் 1959)
5. பிச்சமூர்த்தியின் கதைகள் (1960)
6. மாங்காய்த்தலை (1961)
7. இரட்டை விளக்கு (1967)
8. காக்கைகளும் கிளிகளும் (சிறுவர் கதைகள் 1977)
பிச்சமூர்த்தியின் கவிதை தொகுப்பு:
1. காட்டு வாத்து (1962)
2. வழித்துணை (1964)
3. குயிலின் சுருதி (1970)
பிச்சமூர்த்தியின் கட்டுரைத் தொகுதி:
1. காளி (1946)
ந. பிச்சமூர்த்தியின் ஆர்வமூட்டும் செய்திகள்:
1. பிச்சமூர்த்திக்கு அவரின் பெற்றோர் அவர் பிறந்த உடன் இட்ட பெயர் வேங்கட மகாலிங்கம். ஆனால் இவருக்கு முன் பிறந்த மூன்று குழந்தைகளில் இரண்டு குழந்தைகள் இறந்துவிட்டன அற்பமான பெயர்களைக் கொண்டு அழைத்து வந்ததால் காலன் அவர்களை அழைத்துச் செல்லமாட்டான் என்ற நம்பிக்கையில் இவரை “பிச்சை” என்று அழைத்தனர். அதன்பிறகு பிச்சை என்ற (பிச்சமூர்த்தி) ஆனார் ..
2. பிச்சமூர்த்தி “ஸ்ரீராமானுஜர்” எனும் திரைப்படத்தில் ஆளவந்தார் வேடம் ஏற்று நடித்திருக்கிறார்.
3. பிச்சமூர்த்தி இயல்பிலேயே ஆன்மீக விஷயங்களிலும், துறையிலும் நாட்டம் கொண்டவராக இருந்திருக்கிறார். குடும்ப வாழ்க்கையில் அடியெடுத்து வைத்த பின்னரும் ஒரு ஆண்டுகாலம் குடும்பத்தை விட்டு பிரிந்து சந்நியாசத்தை விரும்பி ஊர் ஊராக அலைந்து அலைந்தார். தன்னை துறவியாக வேண்டி தனக்கு உபதேசம் செய்யுமாறு ரமண மகரிஷியிடம், சித்தர் குழந்தை சாமியிடம் அணுகி நின்றார். ஆனால் அவர்கள் இல்லற வாழ்க்கை தான் பொருத்தமானது என்று உபதேசித்து இருக்கிறார்கள்.
ந. பிச்சமூர்த்தியின் சிந்தனை சிதறல்கள்:
1. “எனக்கு எப்பொழுதும் உணர்ச்சி தான் முக்கியம் தர்க்கரீதியான அறிவுக்கு இரண்டாவது இடம்தான் தருவேன்”. ஆகையால் எப்பொழுதுமே ஒரு திட்டம் போட்டு குறிப்பிட்ட கருத்தை வற்புறுத்துவது என்பது என்ற எண்ணத்துடன் ஒன்றுமே நான் எழுதவில்லை. உணர்வே என் குதிரை ஆகிவிட்டபடியால் நான் ஒரு சமயம் நட்சத்திர மண்டலத்தில் பொன் தூள் சிதற பறப்பேன்.
ஒரு சமயம் வெறும் கட்டாந்தரையில் “ஏபாட்டில்” செய்வேன். என் மனதிலும் இந்த இரண்டு அம்சங்கள் பின்னிக் கிடப்பதை நான் கவனித்திருக்கிறேன்.
ஒரு பகுதி சிறகு விரித்து சொல்லுக்கு எட்டாத அழக ஒன்றை நாடி எப்பொழுதுமே பறந்து கொண்டிருக்கிறது இந்தப் பகுதியின் ஆட்சிக்கு உட்பட்ட போதெல்லாம் வெறும் கற்பனையாகவே கதைகள் வருகின்றன.
மற்றொரு பகுதி எல்லோரையும் போல் மண்ணில் விழுகிறது அப்போதெல்லாம் உலகின் இன்ப துன்பங்களைப் பற்றி இயற்கை ஓடடிய முறையில் எழுதுகிறேன்.
2. “எழுதுவது ஒரு கலைஞனுக்கு இயல்பானது… மல்லிகைப்பூ போது போல… விதைகள் விழுந்து மரமாவது போல… அறிவுக்குப் புலப்படாத பாலுணர்வு தூண்டுதல் போல…”