Skip to main content

உலா இலக்கியம் (சிற்றிலக்கியம்) வரலாறு


உலா இலக்கியம் விரிவான விளக்கம்:

உலா என்பது சிற்றிலக்கிய வகைகளில் ஒன்றாகும். பாட்டுடைத் தலைவன் உலா வருவதை சிறப்பித்துக் கூறுவதால் இந்நூல் உலா இலக்கியம் எனப் பெயர் பெற்றது.

உலா என்பதற்கு "பவனி வரல்"என்பதன் பொருளாகும்.


உலா இலக்கியம் பெயர் வர காரணம்:

தலைவன் வீதியில் உலா வர அவனைக் கண்டு பேதை, பெதும்பை, மங்கை, மட்டத்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் எனும் ஏழு வகை பருவ "மகளிர்-களும்" கண்டு காதல் கொள்வது கூறுவது "உலா என்னும் சிற்றிலக்கியம்" ஆகும்.


உலாவின் வேறு பெயர்கள் பின்வருமாறு:

1. பவனி
2. உலாப் புறம்
3. புறா புற
4. உலா மாலை
5. பெண்பாற் கைக்கிளை

தசாங்கம் எனும் (10 உறுப்புக்கள்)உலா இலக்கியத்தில் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

* உலா இலக்கியம் கலிவெண்பாவால் இயற்றப்படும்.

* தூது இலக்கியம் கலிவெண்பாவால் இயற்றப்படும்.

* கலிங்கத்துப்பரணி கழித்தால் இசையால் பாடப்படும்.

* முத்தொள்ளாயிரம் வெண்பாவால் இயற்றப்படும்.



உலாவில் முன்னிலை பின்னிலை என இருவகைகள் உண்டு அவை பின்வருமாறு காணலாம்: 

உலா முன்னிலை:
பாட்டுடைத் தலைவன் சிறப்பு நீராடல் ஒப்பனை செய்தல் பரிவாரங்கள் புடை சூழ தன் ஊர்தியில்் ஏறிி உலா வரல் அல்லதுு பவனி வரல் ஆகியவற்றை  உலா முன்னிலை என்று அழைக்கப்படுகிறது.

உலா பின்னிலை:
உலாவரும் தலைவனைக் கண்டு காதல் கொண்ட ஏழு பருவ மகளிர் தன் காதலை தனித்தனியாக கூறுவது உலாவின் பின்னிலை என அழைக்கப்படுகிறது.


உலாவில் இடம் பெறும் ஏழு பருவ மகளிரின் வயது பின்வருமாறு:

1. பேதை (5 - 7 வயது)
2. பெதும்பை (8 - 11 வயது)
3. மங்கை (12 - 13 வயது)
4. மடந்தை (14 - 19 வயது)
5. அரிவை (20 - 25 வயது)
6. தெரிவை (24 - 32 வயது)
7. பேரிளம்பெண் (33 - 40 வயது).

* உலா பாடுவதில் வல்லவர்கள் ஒட்டக்கூத்தர்.
* கலம்பகம் பாடுவதில் வல்லவர்கள் இரட்டையர்கள்.


சிறந்த உலா நூல்கள் மற்றும் அதன் ஆசிரியர் பெயர்கள் பின்வருமாறு:

1. திருக்கயிலாய ஞான உலா - சேரமான் பெருமாள் நாயனார்.

திருக்கைலாய ஞான உலா வின் வேறு பெயர்கள் (ஆதி உலா, தெய்வீக உலா, தமிழில் தோன்றிய முதல் உலா).


2. மூவர் உலா - ஒட்டக்கூத்தர்.

மூவர் உலா (விக்கிரம சோழன் உலா, இரண்டாம் குலோத்துங்க சோழன் உலா, இரண்டாம் ராஜராஜ சோழன் உலா).


3. ஞான உலா - வேதநாயகம் சாஸ்திரியார்.


4. ஏகாம்பரநாதர் உலா - இரட்டையர்கள்.

இரட்டையர்கள் (இளஞ்சூரியன், முது சூரியன்).


5. திருவாரூர் உலா - வீரராகவர்.
வீரராகவர் (அந்தக்கவி வீரராகவர்).




Comments

Popular posts from this blog

சீறாப்புராணம் - உமறுப் புலவர்.

  தமிழில் எழுதப்பட்ட தலைசிறந்த இஸ்லாமிய இலக்கியம் "சீறாப்புராணம்" ஆகும். சீராபுராணம் இறைத்தூதர் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றினை மையமாகக்கொண்டு தமிழ் மரபுகளைப் பின்பற்றி எழுதப்பட்ட ஒரு காவியம் ஆகும். இத்தகைய நூலை இயற்றியவர் பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த உமறுப் புலவர் இயற்றிய நூல்தான் சீறாப்புராணம். மேலும் உமறுப்புலவர் அதே காலத்தில் வாழ்ந்த சீதக்காதியின் ஆதரவைப் பெற்றார். உமறுப் புலவர் வள்ளல் சீதக்காதியின் பெருமையை " செத்தும் கொடுத்தான் சீதக்காதி" என  சொற்றொடர் விளக்கும். சீறாப்புராணம் அமைவிடம்: சீராபுராணம் இரண்டு பாகங்களாக அமைந்துள்ளது. முதல் பாகத்தில் 44 படலங்களும், இரண்டாம் பாகத்தில் 47 பக்கங்களும் உள்ளன. சீறாப் புராணத்தில் இடம் பெறும் முதல் பாகம்: முதல் பாகத்தில் 3 காண்டங்கள் உள்ளன. இப்பாகத்தில் மொத்தம் 44 படலங்கள் உள்ளன. 1. விலாதத்துக் காண்டம். 2. நுபுவ்வத்துக் காண்டம். 3. ஷீலாஷது காண்டம். * விலாதத்துக் காண்டம்: 1. கடவுள் வாழ்த்துப் படலம் 2. நாட்டுப் படலம் 3. தலைமுறைப் படலம் 4. நபியவதாரப் படலம் 5. அலிமா முலையூர் படலம் 6. இலாஞ்சனை தரித்த படலம் 7. ...

தமிழ்விடு தூது - எத்தனை கண்ணிகள்.

தமிழ்விடு தூது - ஆசிரியர் பெயர் தெரியவில்லை. தமிழ் விடு தூது நூல் அமைப்பு: தமிழ் சிற்றிலக்கிய வகைகளுள் தூது என்பதும் ஒருவகை இலக்கியமாகும். இது வாயில் இலக்கியம், சந்து இலக்கியம் என்று வேறுு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இது 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று ஆகும். தமிழ்விடு தூது பாடல் அமைந்த விதம்: தமிழ்விடு தூது மதுரையில் கோயில் கொண்டிருக்கும் சொக்கநாதர் மீது காதல் கொண்ட பெண் ஒருத்தி தன் காதலி கூறி வருமாறு தமிழ் மொழியை தூது விடுவதாக அமைந்துள்ளதுதான் தமிழ்விடு தூது. தமிழ்விடு தூது சிறப்பு; தமிழின் பெருமையை பாட கவிஞர்கள் கையாளும் உத்திகள் பற்பல. கவிதை அதற்கு ஒரு கருவி, கிளி, அன்னம், விரலி, பணம், தந்தி என்று பல தூதுு வாயில்களை அறிந்துள்ளோம். ஆனால் தமிழையே தூதுப் பொருளாக்கிிி உள்ளது தமிழ்விடு தூது. தமிழின்   இனிமை,இலக்கிய வளம், சுவை,அழகு, திறன், தகுதி, ஆகியவற்றைை இச்சிற்றிலக்கியத்தில் தெளிவாக விளக்கியுள்ளது. தமிழ்விடு தூது முக்கிய வினா விடை குறிப்புகள்: * தமிழ்விடு தூது ஒரு சிற்றிலக்கிய வகையைச் சார்ந்தது. * தமிழ்விடு தூது வில் இடம்பெறும் கண்ணி என்பதன் பொருள் இரண்டு கண்களை போல் இ...

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்- அறநூல்கள்-நீதி நூல்கள் - புறநூல்கள் யாவை.

  பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அற நூல்கள் (அல்லது) நீதி நூல்கள் பின்வருமாறு: * நாலடியார் * நான்மணிக்கடிகை * இன்னா நாற்பது * இனியவை நாற்பது * திருக்குறள் * திரிகடுகம் * ஆசாரக்கோவை * பழமொழி நானூறு * சிறுபஞ்சமூலம் * முதுமொழிக்காஞ்சி * ஏலாதி பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அக நூல்கள் (அல்லது) அகத்திணை நூல்கள் பின்வருமாறு: * கார் நாற்பது * ஐந்திணை ஐம்பது * ஐந்திணை எழுபது * திணைமொழி ஐம்பது * திணைமாலை நூற்றைம்பது * கைந்நிலை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் புற நூல்(அல்லது) புறத்திணை நூல்கள் பின்வருமாறு: * களவழி நாற்பது பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் மற்றும் பாடல்களின் எண்ணிக்கை: நூல்கள்                                       பாடல்கள் நாலடியார்                                  400                நான்மணிக்கடிகை                ...