Skip to main content

பெத்தலேகம் குறவஞ்சி - வேதநாயகம் சாஸ்திரியார்.

 பெத்தலேகம் குறவஞ்சி - வேதநாயகம் சாஸ்திரியார்.



வேதநாயகம் சாஸ்திரியார் ஆசிரியர் குறிப்பு:

வேதநாயகம் சாஸ்திரி தஞ்சை சரபோஜி மன்னரின் அவைக்களப் புலவராக இருந்தவர். மேலும் இவர் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை இயற்றியுள்ளார்். இவர் இயற்றிய நூல்கள் சில பின்வருமாறு காணலாம்.

ஞான அந்தாதி,ஞான உலா, பெண் விடு தூதுு, பராபரன் மாலை, முதலிய சிற்றிலக்கியங்களைைை படைத்துள்ளார்்.  மேலும் இவர் நாட்டுப்புற இலக்கிய வடிவத்தில் சில நூல்களை எழுதி உள்ளார் அவைகள் கும்மி, எத்த பாட்டு, புலம்பல். 


பெத்தலேகம் குறவஞ்சி நூல் விளக்கம்:

பெத்தலேகம் குறவஞ்சி சிற்றிலக்கிய நூல்களில் ஒன்றாகும். இதில் இடம்பெற்றுள்ள வஞ்சி எனும் சொல் பெண்ணைக் குறிக்கும். குறவஞ்சிிி என்றால் குறத்தி பெண். குறவஞ்சி இலக்கியத்தில் இடம்பெறும் கதை மாந்தர்களில் குறத்தி பெண் சிறப்பிடம் அடைகிறாள். இதில் இடம்பெறும்்் கதைத் தலைவர் கடவுள் ஆகவோ அல்லது மன்னராகவும் இருப்பர்.  இவ்வகை குறவஞ்சிி இலக்கியம்  நாடகப் பாங்கில் அமைந்துள்ளது.

கிருத்தவ குறவஞ்சி நூல்களில் "பெத்தலேகம் குறவஞ்சி"  தனிிி சிறப்பை (1800) பெற்றுள்ளது. அண்மையில் தாமஸ் மலை குறவஞ்சி என்ற நூலும் வெளிவந்துள்ளதுு. இதனை இயற்றியவர் பேராசிரியர் சத்திய சாட்சி.


பெத்தலேகம் குறவஞ்சி அமைப்பு:

பெத்தலேகம் குறவஞ்சி ஐந்து பெரும் அமைப்புகளை பெற்றுள்ளது.

1. இறை வாழ்த்து

2. இயேசுவின் உலா

3. தேவ மோகினி காதல்

4. குறத்தி குறி கூறல்

5. சிங்கன் வருகை

இது "பாயிரம் முதலாக - வாழ்த்து ஈறாக" 72 உட்பிரிவுகளைக் கொண்டுள்ளது.


பெத்தலேகம் குறவஞ்சி முக்கிய வினா விடைகள்:

* ஞானக் குறவஞ்சி என்று அழைக்கப்படும் நூல் பெத்தலேகம் குறவஞ்சி.

* குறவஞ்சி ஒரு 96 சிற்றிலக்கியங்களில் ஒன்று.

* குறவஞ்சி எவ்வாறு அழைக்கப்படுகிறது குறம், குறத்திப்பாட்டு, குறத்தி நாடகம்.

* பெத்தலேகம் குறவஞ்சி என்ற பெயர் அமைய காரணம் பெத்தலேகம் எனும் ஊரில் பிறந்த இயேசு நாதரின் மீது பாடப்பட்ட நூல் தான் "பெத்தலேகம் குறவஞ்சி".

* பெத்தலேகம் குறவஞ்சியில் உலாவரும் தலைவரின் பெயர்"இயேசுநாதர்".

* பாட்டுடைத் தலைவி மோகினியான சீயோன் மகள்.

* பெத்தலேகம் குறவஞ்சி இயற்றியவர் தஞ்சை வேதநாயகம் சாஸ்திரியார்.

* வேதநாயகம் சாஸ்திரியார் மற்றொரு பெயர் ஸ்விதேசோ சாஸ்திரியார், ஞான தீபக் கவிராயர்.

* வேதநாயக சாஸ்திரியாரின் காலம் 18 ஆம் நூற்றாண்டு.

* வேதநாயக சாஸ்திரியின் பெற்றோர்கள் வேத சகாயம், ஞானப்பூ அம்மையார்.

* ்ஸ்விதேசோ கவிராயர் என சிறப்பு பெயர் பெற்றவர் வேதநாயகம் சாஸ்திரியார்.

* முதன்முதலில் தமிழில் கிறிஸ்துவ வழிபாட்டிற்காக பாக்கள் அமைத்தவர் வேதநாயகம் சாஸ்திரியார்.

* எந்தப் பாடலை பாடியதால் ஞான தீபக் கவிராயர் என்ற பட்டத்தை வேதநாயகம் சாஸ்திரியார் பெற்றார் பெத்தலேகம் குறவஞ்சி.

* பெத்தலேகம் குறவஞ்சி எனும் பாடலை சென்னை வேப்பேரியில் உள்ள கிறிஸ்தவ சபை அரங்கில் அரங்கேற்றினார்.

* பெத்தலேகம் குறவஞ்சி பாடல் ஒரு இசை நாடகமாகும்.

* ஞானக் குறவஞ்சி என்னும் பெயர் பெற்ற நூல் பெத்தலேகம் குறவஞ்சி.




Comments

Popular posts from this blog

சீறாப்புராணம் - உமறுப் புலவர்.

  தமிழில் எழுதப்பட்ட தலைசிறந்த இஸ்லாமிய இலக்கியம் "சீறாப்புராணம்" ஆகும். சீராபுராணம் இறைத்தூதர் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றினை மையமாகக்கொண்டு தமிழ் மரபுகளைப் பின்பற்றி எழுதப்பட்ட ஒரு காவியம் ஆகும். இத்தகைய நூலை இயற்றியவர் பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த உமறுப் புலவர் இயற்றிய நூல்தான் சீறாப்புராணம். மேலும் உமறுப்புலவர் அதே காலத்தில் வாழ்ந்த சீதக்காதியின் ஆதரவைப் பெற்றார். உமறுப் புலவர் வள்ளல் சீதக்காதியின் பெருமையை " செத்தும் கொடுத்தான் சீதக்காதி" என  சொற்றொடர் விளக்கும். சீறாப்புராணம் அமைவிடம்: சீராபுராணம் இரண்டு பாகங்களாக அமைந்துள்ளது. முதல் பாகத்தில் 44 படலங்களும், இரண்டாம் பாகத்தில் 47 பக்கங்களும் உள்ளன. சீறாப் புராணத்தில் இடம் பெறும் முதல் பாகம்: முதல் பாகத்தில் 3 காண்டங்கள் உள்ளன. இப்பாகத்தில் மொத்தம் 44 படலங்கள் உள்ளன. 1. விலாதத்துக் காண்டம். 2. நுபுவ்வத்துக் காண்டம். 3. ஷீலாஷது காண்டம். * விலாதத்துக் காண்டம்: 1. கடவுள் வாழ்த்துப் படலம் 2. நாட்டுப் படலம் 3. தலைமுறைப் படலம் 4. நபியவதாரப் படலம் 5. அலிமா முலையூர் படலம் 6. இலாஞ்சனை தரித்த படலம் 7. ...

தமிழ்விடு தூது - எத்தனை கண்ணிகள்.

தமிழ்விடு தூது - ஆசிரியர் பெயர் தெரியவில்லை. தமிழ் விடு தூது நூல் அமைப்பு: தமிழ் சிற்றிலக்கிய வகைகளுள் தூது என்பதும் ஒருவகை இலக்கியமாகும். இது வாயில் இலக்கியம், சந்து இலக்கியம் என்று வேறுு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இது 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று ஆகும். தமிழ்விடு தூது பாடல் அமைந்த விதம்: தமிழ்விடு தூது மதுரையில் கோயில் கொண்டிருக்கும் சொக்கநாதர் மீது காதல் கொண்ட பெண் ஒருத்தி தன் காதலி கூறி வருமாறு தமிழ் மொழியை தூது விடுவதாக அமைந்துள்ளதுதான் தமிழ்விடு தூது. தமிழ்விடு தூது சிறப்பு; தமிழின் பெருமையை பாட கவிஞர்கள் கையாளும் உத்திகள் பற்பல. கவிதை அதற்கு ஒரு கருவி, கிளி, அன்னம், விரலி, பணம், தந்தி என்று பல தூதுு வாயில்களை அறிந்துள்ளோம். ஆனால் தமிழையே தூதுப் பொருளாக்கிிி உள்ளது தமிழ்விடு தூது. தமிழின்   இனிமை,இலக்கிய வளம், சுவை,அழகு, திறன், தகுதி, ஆகியவற்றைை இச்சிற்றிலக்கியத்தில் தெளிவாக விளக்கியுள்ளது. தமிழ்விடு தூது முக்கிய வினா விடை குறிப்புகள்: * தமிழ்விடு தூது ஒரு சிற்றிலக்கிய வகையைச் சார்ந்தது. * தமிழ்விடு தூது வில் இடம்பெறும் கண்ணி என்பதன் பொருள் இரண்டு கண்களை போல் இ...

நாலடியார் நூல் விளக்கம் மற்றும் ஆசிரியர்கள் முழு விளக்கம்

  1. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் முதன்மையான பாடப்படும் நூல் "நாலடியார்" 2. தமிழ் மொழிகளில் திருக்குறளோடு ஒப்பிட்ட பாடப்படும் நூல் "நாலடியார்" 3. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் உள்ள ஒரே ஒரு தொகை நூல் "நாலடியார்" 4 . முப்பெரும் அற நூல்களில் ஒன்றாக திகழும் நூல் "நாலடியார்" 5. முப்பெரும் நூல்கள் யாவை "திருக்குறள்" "நாலடியார்" "பழமொழி நானூறு" 6. துறவறத்தையும், நிலையாமையும் அதிகமாக வலியுறுத்தி பாடப்பட்ட நூல் "நாலடியார்" 7. திருக்குறளைப் போன்று வகை தொகை கொண்டு வடிவமைக்கப்பட்ட நூல் "நாலடியார்" 8 . நாலடியார் பிரித்து எழுதுக "நாலடி  + ஆர்" 9. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் அறம் சார்ந்த நூல் எது "நாலடியார்" 10 . நாலடியார் என பெயர் வரக் காரணம் "நாலடி கொண்ட வெண்பாவால் எழுதப்பட்டதால் நாலடியார் என பெயர் பெற்றது" 11. நாலடியார் பாடலைப் பாடியவர்கள் "சமணமுனிவர்கள் பலரால்" 12 . நாலடியார் அடி எல்லை "4 அடிகள்" 13. நாலடியார் பாடல் உணர்த்தும் பொருள் "அறம் -...