திருவேங்கடத்தந்தாதி – பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்.
அந்தாதி என்பது யாது:
சிற்றிலக்கிய வகைகளில் ஒன்றுதான் “அந்தாதி“. அந்தம் – இறுதி என்றும். ஆதி – முதல் என்றும் பொருள்படும்.
ஒவ்வொரு பாடலின் இறுதி எழுத்தோ, அசையோ, சீரோ, அடியோ அடுத்து வரும் பாடலின் முதலாக வரும்படி அமைத்துப் பாடுவது அந்தாதி எனப்படும்.
அந்தாதி – சொற்றொடர் நிலை என்று அழைக்கப்படுகிறது.
திருவேங்கடத்தந்தாதி என்பது யாது:
திருவேங்கடத்தில் கோயில் கொண்டிருக்கும் திருமாலின் அருளை வேண்டி பாடப்பெற்ற அந்தாதி நூல் தான் “திருவேங்கடத்தந்தாதி”.
தெய்வ கவிஞர் என்று பொருள்படும் திவ்யகவி என்று அழைக்கப்பட்ட 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அழகிய மணவாளதாசர் என்ற புனைப்பெயர் கொண்ட திருவேங்கடத்தந்தாதி என்ற சிற்றிலக்கிய நூலினை இயற்றிய “பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் இயற்றிய நூல்கள் மற்றும் நூல் குறிப்பு ஆகியவற்றைத் தெளிவாக இங்கு காணலாம்.
பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்:
பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் இயற்றிய எட்டு நூல்களின் தொகுதியை “அஷ்டப் பிரபந்தம்”என்றுுு கூறுவர்.
“அஷ்டபிரபந்தம் கற்றவன் அரை பண்டிதன்”என்பதுு பழமொழி. இப்பழமொழிி இந்நூல்களின் உயர்வை உணர்த்துகிறது. இவரதுு பாடல்கள் அனைத்தும் சொல் நோக்கும், பொருள் நோக்கும், தொடை நோக்கும், நடை நோக்கும் கொண்டுுு ஒளிர்கின்றன.
பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் இன் சிறப்பு:
கிபி 1623 முதல் கிபி 1659 வரை மதுரையை ஆண்ட “திருமலை நாயக்கர்”மன்னரின் அவையில் அலுவலராக அமர்ந்துு தன் வாழ்க்கை நடத்தினார்.
அஷ்டப்பிரபந்தம் என 8 சிற்றிலக்கியங்களை இயற்றியவர் “இரு மொழிப் புலமை பெற்றவராக”இருந்தார்.
நாலாயிர திவ்யப் பிரபந்தத்திற்கு பிறகு வைணவ சமய சார்பாக எழுந்த இத்தொகுதியை திவ்யப் பிரபந்தசாரம் என்றுுு அழைக்கப்படுகிறதுு. இதில் சிறப்பு என்னவென்றால் சொல்லணிகள் உள்ள “யமகம், திரிபு, சிலேடை முதலியன இதில் சிறந்துுு விளங்குகின்றன.
பிள்ளை பெருமாள் ஐயங்கார் எழுதிய எட்டு சிற்றிலக்கியங்கள்:
1. அஷ்ட பிரபந்தங்கள்
2. திருவரங்கக் கலம்பகம்
3. திருவரங்கத்து மாலை
4. திருவரங்கத்து திருவந்தாதி
5. சீரங்க நாயகர் ஊசல்
6. திருவேங்கட மாலை
7. திருவேங்கடத்தந்தாதி
8. அழகரந்தாதி
9.108 திருப்பதி அந்தாதி.