நாலாயிர திவ்ய பிரபந்தம் - பன்னிரு ஆழ்வார்கள் - தமிழ் விக்கிமூலம்


இந்து மதத்தில் வைணவ சமயத்தின் ஓர் ஆதாரமாக மற்றும் தமிழ் மறையாக கொண்டாடப்படுகின்ற பெருமாளை குறித்து பாடப்பட்ட பக்திி பாடலான நாலாயிர திவ்ய பிரபந்தம் பற்றி விரிவாக இங்கு காணலாம்.

12 ஆழ்வார்களால் கிபி ஆறாம் நூற்றாண்டு முதல் கிபி ஒன்பதாம் நூற்றாண்டுக்குள்  வைணவ சமயத்தால் இயற்றப்பட்ட இந்தப் பாடல்களை பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த நாதமுனிகள் என்பார் ஆழ்வார்கள் அருளிச் செயல்கள் எனத் தொகுத்தார். பின்னர் வந்த மணவாள மாமுனிகள் , நாதமுனிகள் தொகுத்த ஆழ்வார்களின் பிரபந்ததோடு திருவரங்கத்தமுதனார் செய்த இராமானுச நூற்றந்தாதியும் சேர்த்து நாலாயிர திவ்ய பிரபந்தம் என அழைக்கும்படி அருளினார்.

"திவ்ய"எனும் சொல் "மேலான"என்றும் பிரபந்தம் எனும் சொல் "பல பாடல்களின் தொகுப்பு" எனவும் அழைக்கப்படுகிறது.


நாலாயிர திவ்ய பிரபந்தம் நூலின் தனிச்சிறப்பு:

இந்த நூல் ஆன்ற தமிழ் மறை, ஐந்தாவது வேதம், திராவிட வேதம், திராவிட பிரபந்தம் என்றெல்லாம்் வர்ணிக்கப்படுகிறது. மேலும் தமிழ் பேசும் வைணவர்கள் மட்டுமல்லாது "தெலுங்கு மற்றும் கன்னடம்"பேசும் வைணவர்களாளும் தினமும் படிக்கப்பட்டு வருகிறது என்பது இதன் தனிச்சிறப்பு.


நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் இடம்பெறும் பாடல்களின் எண்ணிக்கை:

முதலாயிரம் - 947 பாடல்கள்.

பெரிய திருமொழி- 1134 பாடல்கள்.

திருவாய்மொழி -1102 பாடல்கள்.

இயற்பா -817 பாடல்கள். என நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.


திவ்ய பிரபந்தங்கள் எத்தனை வகைப்படும் அவை யாவன பின்வருமாறு:

திவ்விய பிரபந்தங்கள் 24 வகைப்படும்.

1. திருப்பல்லாண்டு

2. பெரியாழ்வார் திருமொழி

3. திருப்பாவை

4. நாச்சியார் திருமொழி

5. பெருமாள் திருமொழி

6. திருச்சந்த விருத்தம்

7. திருமாலை

8. திருப்பள்ளி எழுச்சி

9. அமலனாதிபிரான்

10. கண்ணிநுண் சிறுத்தாம்பு

11. பெரிய திருமொழி

12. திருக்குறுந்தாண்டகம்

13. திருநெடுந்தாண்டகம்

14. முதல் திருவந்தாதி

15. இரண்டாம் திருவந்தாதி

16. மூன்றாம் திருவந்தாதி

17. நான்முகன் திருவந்தாதி

18. திருவிருத்தம்

19. திருவாசிரியம்

20. பெரிய திருவந்தாதி

21. திருஎழுகூற்றிருக்கை

22. சிறிய திருமடல்

23. பெரிய திருமடல்

24. ராமானுஜ நூற்றந்தாதி


நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் இடம்பெறும் பன்னிரு ஆழ்வார்கள் பெயர்கள்:

1. பொய்கை ஆழ்வார்

2. பூதத்தாழ்வார்

3. பேயாழ்வார்

4. திருமழிசை ஆழ்வார்

5. நம்மாழ்வார்

6. மதுரகவியாழ்வார்

7. குலசேகர ஆழ்வார்

8. பெரியாழ்வார்

9. ஆண்டாள்

10. தொண்டரடிப்பொடி ஆழ்வார்

11. திருப்பாணாழ்வார்

12. திருமங்கையாழ்வார்


நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் இடம்பெறும் பாடல்கள் பற்றி முழுமையான விளக்கம்:

இந்நூலில் இடம்பெறும் பாடல்கள் அனைத்தும் பெருமாளையும் அவன் எடுக்கும் அவதாரங்களையும் பற்றி கூறுகிறது. பெரும்பாலான பாடல்கள் 108 திவ்ய தேசங்களில் பாடப்படுகிறது. மேற்கூறிய தொகுப்பில் சுமார் 1100 பாடல்கள் நம்மாழ்வாரால் பாடப்பட்டுள்ளது. இபாசுரங்களின் மொத்த எண்ணிக்கை 3892 ஆகும்.

ராமானுஜர் காலத்தில் வாழ்ந்த திருவரங்கத்து அமுதனார் இயற்றிய ராமானுஜ நூற்றந்தாதி யும் (108 பாசுரங்கள் கொண்டது) சேர்த்து 4000 என்பர். இவற்றுள்  பெரும்பாலானவை பண்ணுடன் கூடிய இசை பாடலாகும்.


ஆழ்வார்களும் அவர் இயற்றிய நூலின் பெயர்களும்:

முதலாயிரம்:

* பெரியாழ்வார் - திருப்பல்லாண்டு.

* ஆண்டாள் - திருப்பாவை.

* குலசேகர ஆழ்வார் - பெருமாள் திருமொழி.

* திருமழிசை ஆழ்வார் - திருச்சந்த விருத்தம்.

* தொண்டரடிப்பொடி ஆழ்வார் - திருமாலை.

* திருப்பாணாழ்வார் - அமலனாதிபிரான்.

* மதுரகவிஆழ்வார் - கண்ணிநுண் சிறுத்தாம்பு.


இரண்டாவது ஆயிரம்:

* திருமங்கை ஆழ்வார்- பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம்.


மூன்றாவது ஆயிரம்:

* பொய்கையாழ்வார் - முதல் திருவந்தாதி.

* பூதத்தாழ்வார் - இரண்டாம் திருவந்தாதி.

* பேயாழ்வார் - மூன்றாம் திருவந்தாதி.

* திருமழிசையாழ்வார் - நான்முகன் திருவந்தாதி.

* நம்மாழ்வார் - திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி.

* திருமங்கையாழ்வார் - திருஎழுகூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல்.

* திருவரங்கத்தமுதனார் - ராமானுஜர் நூற்றந்தாதி.


நான்காவது ஆயிரம்:

* நம்மாழ்வார் - திருவாய்மொழி.

Post a Comment

Previous Post Next Post