Categories
Uncategorized

முதுமொழிக்காஞ்சி – பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்

பதினெட்டு நூல்களின் தொகுப்பான பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என அழைக்கப்படும் தமிழ் தொகுதியில் மிகவும் சிறிய பாடலான முதுமொழிக்காஞ்சி பற்றிி விளக்கமாக காண்போம்:

 

கிபி ஐந்தாம் நூற்றாண்டில் சங்கம் மருவிய காலத்தைச் சார்ந்த மதுரைக் கூடலூர் கிழார் என்பவரால் முதுமொழி என்ற பழமொழி உடன் திகழும்“முதுமொழிக் காஞ்சி” என்ற நூலைை இயற்றினார்.
இதில் குறிப்பிடப்படும் “முதுமொழி”என்பது “பழமொழி”என்ற சொற்்  பொருளோடு தொடர்புடையது. மற்றும் “முதுமொழி”என்பது “மூதுரை”மற்றும்” முதுசொல்”எனவும் பொருள்் தருகின்றது.மேலும் இதில்் குறிப்பிடப்படும் காஞ்சி” என்ற சொல்லானது காஞ்சித் திணையில் தொல்காப்பியம் காட்டும் ஒரு துறையை” விளக்குகிறது. 
 
அத்துறையை பற்றி கூறும் வரிகள்
“கழிந்தோர் ஒழிந்தோர்க்கு காட்டிய முறைமை” எனும் துறைை விளக்கப்பட்டுள்ளது.
 
முதுமொழிக்காஞ்சி 10 பாடல்களைக் கொண்ட “பத்து பதிகம்”கொண்டது. அதாவது 100 பாடல்கள் உள்ளது. இதில்் குறிப்பிடப்படும் ஒவ்வொரு பதிகமும் “ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம்”எனும்் தரவு அடியோடு தொடங்குகிறது.
 
அடுத்து ஓர் அடி பாடல்கள் பத்து ஒவ்வொன்றிலும் “தாழிசை”போல அடுக்கி வருகின்றன.
முதுமொழிக் காஞ்சியில் பத்து அடிகளைக் கொண்ட ஒவ்வொரு பாடலுக்கும் தனித்தனிப் பெயர் வழங்கப்பட்டு உள்ளன அவைகள் முறையே
 
 சிறந்த பத்து
அறிவுப் பத்து
பழியாப் பத்து
துவ்வாப் பத்து
அல்ல பத்து
இல்லைப் பத்து
பொய்ப் பத்து 
எளிய பத்து
நல்கூர்ந்த பத்து
தண்டாப் பத்து
 
முதுமொழிக்காஞ்சியில் குறிப்பிடப்படும் சிறந்த பத்து பாடல் வரிகள்:
 
ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம்
ஓதலில் சிறந்தன்று ஒழுக்கம் உடைமை
 
* காதலில் சிறந்தன்று கன்னஞ்சப் படுதல்
 
* மேதையில் சிறந்தன்று கற்றது மறவாமை
 
* வன்மையில் சிறந்தன்று வாய்மை உடைமை
 
* இளமையில் சிறந்தன்று மெய்பிணி இன்மை
 
* நலனுடை மையின் நாணுச் சிறந்தன்று
 
* குலனுடை மையின் கற்புச் சிறந்தன்று
 
* கற்றலின் கற்றாரை வழிபடுதல் சிறந்தன்று
 
* செற்றரை செருதலில் தற்செய்கை சிறந்தன்று 
 
* முன்பெரு கலின்பின் சிருகாமை சிறந்தன்று
 
சொற்பொருட்கள்:
ஆர்கலி  – நிறைந்த ஓசை உடைய கடல்
காதல் – அன்பு, விருப்பம்
மேதை – அறிவு நுட்பம்
வண்மை – ஈகை, கொடை
பிணி  நோய்
மெய் – உடம்பு
நாணம் – செய்யக்கூடாததை செய்ய அச்சப்படுதல்
சிறந்தன்று – சிறந்தது
வழிபடுதல் – போற்றி வணங்குதல்
 
முதுமொழிக்காஞ்சியின் சிறப்பு:
*  மதுரை கூடலூர் கிழார் இயற்றிய பாடல்களை நச்சினார்க்கினியர் முதலிய நல்லூரையாசிரியர்கள் மேற்கோள் நூல்களாக பயன்படுத்தினர்.
 
* அறம் பொருள் இன்பம் ஆகிய வற்றை அடைவதற்காக வழிமுறை நெறிமுறைகளை பற்றி கூறும் நூல் முதுமொழிக்காஞ்சி.
 
அறவுரைக்கோவை என்று மதுரைக்காஞ்சியும் கூறலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *