கிபி நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான 50 அகப்பொருள் பாடலை கொண்ட நூல் தான் “திணைமொழி ஐம்பது”இந்நூலினை சாத்தந்தையார் என்ற பெரியாரின் மகனாகிய கண்ணன் சேந்தனார் என்ற புலவரால் இயற்றப்பட்டது.
பண்டைய தமிழ் இலக்கியங்களில் காணும் வழக்கிற்கு அமைந்த அகப்பொருள் இலக்கியமான இது ஐந்துு வகையான திணைகளை (குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை) பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்டதுு என்பது குறிப்பிடத்தக்கது.
திணைமொழி ஐம்பது திணைவைப்பு முறை பற்றி விரிவாக காண்போம்:
முதலில் குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம்,நெய்தல் ( கடைசியில் முடிகிறது).
திணைமொழி ஐம்பது முக்கிய குறிப்புகள்:
* திணைமொழி ஐம்பது உள்ள பாடல்களின் எண்ணிக்கை 50 பாடல்கள்.
* திணைக்கு பத்து பாடல்கள் மூலம் 50 பாடல்களைக் கொண்டதால் “திணைமொழி ஐம்பது” என பெயர் பெற்றது.
* இந்நூலின் அனைத்து பாடல்களும் எதுகை, மோனை கொண்டு அமையப் பெற்றது.
திணைமொழி ஐம்பது இல் இடம்பெறும் முக்கிய பாடல் வரிகள்:
புன்னை பொரி மலரும் பூந்தண் – பொலிலெல்லாம்
செங்கன் குயில்அக வும்போழ்து -கண்டும் பொருள்நசை உள்ளம் துரப்பத் -துறந்தார் வருநசை பார்க்கும்என் நெஞ்சு.