கிபி நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த மாறன் பொறையனார் என்னும் புலவரால் அகப்பொருள் குறித்துக் கூறும் நூல்களுள் இவை பதினெணகீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான ஐந்திணை ஐம்பது நூலைப் பற்றி சற்றுு விரிவாக காண்போம்.
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் பாலை என நிலங்களை 5 திணைகளாாகப் பிரிப்பது பண்டையகால தமிழ் வழக்கு. அக்கால தமிழ் இலக்கியங்களிலும் அத்தகைய இலக்கியங்களில் எடுத்தாளப்படும் விடயங்களுக்கு பின்னணியாக இத் திணைகள் எடுத்துக்கொள்ளப்பட்டன.
ஐந்திணை ஐம்பதில் மேற்காட்டிய ஒவ்வொரு திணையின் பின்னணியிலும் பத்துப் பத்துப் பாடல்களாக 50 பாடல்கள் உள்ளன.
எடுத்துக்காட்டாக:
பாலை திணையை பின்னணியாக கொண்ட ஒரு பாடல் இது. வாழ்ந்த சூழலின் வசதிகளையும் பசுமையான நினைவுகளையும் விடுத்து காதலருடன் வறண்ட பாலைநில பகுதியூடாக செல்கிறாள் தலைவி. பாலை நிலத்துக்கு இயல்பான கடுமைை வாடடும் எனினும் காதல் வயப்பட்ட உள்ளங்களுக்கு இயல்பான விட்டுக் கொடுப்புக்கள் அவர்களைை மேலும் நெருக்கமாகும். இக்கருத்தை விளக்கும் இனிய பாடல் பின்வருமாறு
சுனைவாய்ச் சிறுநீரை எய்தாதென்
றேண்ணிப்
பிணைமான் இனிதுண்ண வேண்டிக்
-கலைமாத்தான்
களத்தின் ஊச்சும் சுரமேன்பர் காதலர்
உள்ளம் படர்ந்த நெறி.
ஆணும் பெண்ணுமான இரு மான்கள் (கலைமான், பிணைமான்) பாலை நிலத்துு நீர்ச்சுனை ஒன்றின் முன்னே நிற்கின்றன. வரண்டுுு போன சுனையில் இருக்கும் நீர் இரண்டிற்கும் போதுமானதாக இல்லை. தான் அருந்தாவிட்டால் பெண்மானும் அருந்தாது என்பது ஆண்மானுக்கு தெரியும் எனவே பெண்மான் அருந்தட்டும் என தான் அருந்துவது போல் பாசாங்கு செய்கிறதாம் ஆண்மான். இதுவே காதல் உள்ளங்களின் ஒழுக்கம் என்கிறார் புலவர்.
ஐந்திணை ஐம்பது முக்கியக் குறிப்பு வினா விடைகள்:
* ஐந்திணை ஐம்பது இயற்றிய நூல் ஆசிரியர் மாறன் பொறையனார்.
* ஐந்திணை ஐம்பதில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை 50 பாடல்கள்.
* ஐந்திணை ஐம்பதில் உள்ள திணைகள் எத்தனை 5 திணைகள்.
* ஐந்திணை ஐம்பதில் உள்ள திணை வைப்புமுறை முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல்.
* முல்லைத் திணையைச் முதலாவதாக கொண்ட ஒரே ஒரு பதினெண்கழ்க்கணக்கு நூல் “ஐந்திணை ஐம்பது”ஆகும்.
* ஐந்திணை ஐம்பது என பெயர் வரக் காரணம் இதிலுள்ள ஒவ்வொரு திணையிலும் பத்துப் பத்துப் பாடல்கள் இடம்பற்றுள்ளன ஆகையால் ஐந்திணை ஐம்பது என பெயர் பெற்றது.