கலித்தொகை நூல் குறிப்பு மற்றும் குறிப்பு வினாவிடைகள்

1. எட்டுத்தொகை நூல்களுள் பாலைத் திணையை முதன்மையாக கொண்டு பாடப்படும் நூல்
   "கலித்தொகை"

2. பல்வேறு அறிஞர்களால் கலித்தொகை எவ்வாறு பாராட்டுப் பெற்றது
   "கற்றறிந்தோர் ஏத்தும் கலி"
   'கல்விவலார் கண்ட கலி"

3. தொகை நூல்களுள் முதன்முதலாக பதிப்பிக்கப்பட்ட நூல்
    "கலித்தொகை"

4. தொகை நூல்களில் பாண்டியர்களைப் பற்றி குறிப்புகள் மிகுந்து காணப்படும் நூல்
    "கலித்தொகை"

5. எட்டுத்தொகை நூல்களுள் காமக்கிழத்தி பேசுவதாக அமைந்த ஒரே ஒரு சங்கநூல்
    "கலித்தொகை"

6. தமிழர்களின் மரபுவழி விளையாட்டான ஏறு தழுவுதல் (மஞ்சள் விரட்டி - ஜல்லிக்கட்டு) கூறும் நூல்
    "கலித்தொகை"

7. சங்ககால வழக்கங்களில் ஒன்றான மடலேறுதல் குறித்து கூறும் சிறப்புத்தன்மை வாய்ந்த நூல்
    "கலித்தொகை"

8. பெருந்திணை மற்றும் கைக்கிளை போன்ற பாடல்கள் இடம் பெற்ற ஒரே ஒரு சங்கநூல்
    "கலித்தொகை"

9.புராணங்களிலும், இதிகாசங்களிலும் இடம் பெரும் செய்திகளை மிகுதியாக கூறும் ஒரே நூல்
     "கலித்தொகை"

10. பெண்கள் பிறந்த வீட்டிற்கு உரியவர் அல்ல என்ற இக்கால சிந்தனையை கூறும் ஒரே நூல்
     "கலித்தொகை"

11. ஒரு பாடலுக்கு இசையோடு பாடுவதற்கு ஏற்ப துள்ளலோசை கொண்டு நாடகப் பாங்கில் அமைந்த ஒரே நூல்
      "கலித்தொகை"

12. நான்கு வகை பாக்களில் கலிப்பா விற்கு இலக்கியமாக திகழும் ஒரே நூல்
       "கலித்தொகை"

13. கலித்தொகை பாடிய புலவர்களின் எண்ணிக்கை
       "5"

14. கலித்தொகை அடிவரையர
      "11 அடிச் சிற்றெல்லையும்
      "80 அடிப் பேரேல்லையும்"

15. கலித்தொகை ஒரு
      "அகப்பொருள் நூலாகும்"

16. கலித்தொகைப் பாடல்கள் எண்ணிக்கை
      "149"மற்றும் கடவுள் வாழ்த்துடன் சேர்க்கும் போது மொத்தம் 150 பாடல்களாகும்.

17.புலவர்களையும் அவர்கள் பாடிய திணைகளையும் விளக்கும் ஒரு பழம்பெரும் பாடல் பின்வருமாறு
 "பெருங்கடுங்கோன்  பாலை  கபிலன் குறிஞ்சி
மருதன்இள  நாகன் மருதம் -அருஞ் சோழன்
நல்லுறித்தி  ரன்முல்லை  நல்லந்  துவன்நெய்தல்
கல்விவலார்  கண்ட  கவி.

அதாவது
பாலை(35)                 - பெருங்கடுங்கோண்
குறிஞ்சி (29)             - கபிலர்
மருதம் (35)                - மருதம் இளநாகனார்
முல்லை (17)             - சோழன் நல்லுருத்திரன்
நெய்தல் (33)            - நல்லந்துவனார்


18. கலித்தொகையை தொகுத்தவர்
      "நல்லந்துவனார்"

19. கலித்தொகையை தொகுப்பித்தவர்
     "யார் எனத் தெரியவில்லை"

20. கலித்தொகையில் இடம்பெறும் கடவுள் வாழ்த்துப் பாடலில் குறிப்பிடப்படும் கடவுள்
      "சிவபெருமான்"

21. கலித்தொகையின் வேறு பெயர்கள்
      "கலி"
      'குறுங்கலி"
      "கற்றறிந்தார் ஏத்தும் கலி"
      "கல்விவலார் கண்ட கலி"
      'அகப்பாடல் இலக்கியம்"

22. கலித்தொகையை முதலில் பதிப்பித்தவர்
      "தமிழ் தந்தை ராவ் பகதூர் சி. வை. தாமோதரம்பிள்ளை"

Post a Comment

Previous Post Next Post