சிற்றிலக்கியம்:
அகப்பொருள் மற்றும் புறப்பொருள் இல் ஏதேனும் ஒரு துறையை மட்டும் அமைவதாக இருக்கும்.(கோவை போன்ற சில சிற்றிலக்கியங்கள் பல துறைகளைக் கொண்டு அமைவது உண்டு)
பாடப்பெறும் மன்னன் அல்லது கடவுள் அல்லது வள்ளல் ஆகியோரின் உடைய வாழ்வின் ஒரு சிறு கூடு மட்டுமே விளக்கப்பட்டிருக்கும் எடுத்துக்காட்டாக: உலா இலக்கியம் தலைவன் உலாவரும் காட்சியை மட்டுமே சிறப்பித்துப் பாடப்படுவது.
அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு உறுதிப் பொருள்கள் ஏதேனும் ஒன்றை தருவதாக அமைவது சிற்றிலக்கியங்கள் ஆகும்.
இவ்வகையில் பள்ளு, தூது, உலா, பிள்ளைத்தமிழ், கலம்பகம், கோவை, குறவஞ்சி போன்ற பல வகைை இலக்கியங்கள் சிற்றிலக்கியங்கள் என்ற வகையில் அமைந்து.
சிற்றிலக்கியங்கள் வடமொழியில் பிரபந்தங்கள் எனவும் அழைக்கப்படுகின்றன. பிரபந்தம் என்பது இலக்கிய வகைகள் பலவற்றை குறிக்கும் ஒரு பொது சொல்லாகவே கருதப்படுகிறது.
சமஸ்கிருதத்தில் பிரபந்தம் என்ற சொல் “கட்டப்பட்டது”என்றுு பொருள்படும்.சிற்றிலக்கியம் தோற்றமும் வளர்ச்சியும்:
தமிழில் சிற்றிலக்கியம் தோன்றி வளர்ந்த வரலாற்றினை முன்வைக்கும் முனைவர் ந. வி. ஜெயராமன்.இவர் தொல்காப்பியர் காலத்தில் இடம்பெற்ற சிற்றிலக்கிய வித்து சங்க காலத்தில் ஆற்றுப்படையாக முளைவிட்டு, ஐந்தாம் நூற்றாண்டில் அந்தாதியாக துளிர்ந்து, ஏழாம் நூற்றாண்டில் கோவையாகிச் செடியாகி, எட்டாம் நூற்றாண்டில் உலாவாக மரமாகி, ஒன்பதாம் நூற்றாண்டில் கலம்பகமாக கிளைத்து, பதினோராம் நூற்றாண்டில் சதகமாகவும், பரணியாகவும் அரும்பி, 12ஆம் நூற்றாண்டில் பிள்ளைத் தமிழாக மொட்டாகி, 14ஆம் நூற்றாண்டில் பள்ளாகக் காய்த்து, 18ஆம் நூற்றாண்டில் குறவஞ்சியாக கனிந்தது என்று குறிப்பிடுகிறார்.
சிற்றிலக்கியக் காலம்:
ஆற்றுப்படை இலக்கியங்கள் தோன்றிய சங்க காலத்திலிருந்தே சிற்றிலக்கியங்கள் தோற்றம் பெற்றாலும் சிற்றிலக்கியம் உச்சநிலையில் இருந்த காலத்தை நாம் கணக்கில் கொள்ள வேண்டி உள்ளது. பல்லவர் காலத்தை பக்தி இலக்கிய காலம் என்றும், இடைக்கால சோழர் காலத்தை காப்பியக் காலமென்றும், அதன் மேலோங்கிய தன்மையால் கூறுகிறோமே, அதுபோல நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்று அழைக்கலாம் என்கிறார் டாக்டர் தமிழண்ணல். அதாவது கிபி 15, 16, 17 ஆம் நூற்றாண்டுகளை நாம் சிற்றிலக்கியக் காலம் என்று அழைக்கலாம்.
நாயக்கர் காலத்தில் தமிழ் சிற்றிலக்கியங்கள் மிகுதியாகத் தோன்றி வளர்ந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
சிற்றிலக்கியங்கள் மொத்தம் எத்தனை வகைப்படும்:
சிற்றிலக்கிய வகைகளின் எண்ணிக்கை 96 என மரபு கூறப்படுகிறது. இந்த 96 வகைகளையும் தாண்டி பல வகை சிற்றிலக்கியங்கள் வளர்ந்தும் விரிந்தும் 96 என எண்ணிக்கை கடந்து பிற்காலத்தில் கூடிவிட்டது. இதன் எண்ணிக்கை குறித்து அறிஞர்களிடையே எண்ணிக்கை மாறுபாடு உள்ளது. இந்த எண்ணிக்கையானது குறைந்தபட்சம் 186 என்றும், 417 என அதிகபட்சமாக வும் கூறப்படுகிறது.
சிற்றிலக்கியத்தின் சிறப்புகள்:
1. சிற்றிலக்கியங்கள் மூலம் ஓரளவு தமிழ்ப் பண்பாட்டினை, தமிழக வரலாற்றினை அறிய முடிகிறது.
2. கற்பனை ஆற்றலைப் பெருக்குவதில் சிற்றிலக்கியங்கள் பேருதவி புரிகின்றன.
3. பள்ளு போன்ற சிற்றிலக்கியங்கள் மூலமாக அக்கால மக்களின் சமூக வாழ்வியலை நம்மால் அறிய முடிகிறது.
4. பிள்ளைத் தமிழ் போன்ற சிற்றிலக்கியங்கள் அழகியல் தன்மையோடு காணப்படுகின்றன.
5. தெய்வங்கள் மீது அமைந்த சிற்றிலக்கியங்கள் மூலம் ஊர் வரலாறு, புராண கதைகள், மக்களின் வழிபாட்டு முறைகள் ஆகியவற்றை அறியலாம்.
6. மொத்தத்தில் சிற்றிலக்கியங்கள் தமிழ் வளர்ச்சிக்கு பேருதவி செய்பவையாக அமைந்துள்ளன.
7. அளவிலே சிறியதாக இருந்தாலும் பெரும் சுவையை தருவனவாய் சிற்றிலக்கியங்கள் அமைந்துள்ளது.
96 சிற்றிலக்கிய வகைகளின் பெயர்கள்:
1. அகப்பொருட்கோவை
2. அங்க மாலை
3. அட்டமங்கலம்
4. அரசன் விருத்தம்
5. அலங்கார பஞ்சகம்
6. அனுராக மாலை
7. ஆற்றுப்படை
8. இணைமணி மாலை
9. இயன்மொழி வாழ்த்து
10. இரட்டை மணிமாலை
11. இருபா இருபது
12. உலா
13. பவனிக்காதல்
14. உலாமடல்
15. உழத்திப் பாட்டு
16. உழிஞை மாலை
17. உற்பவ மாலை
18. ஊசல்
19. ஊர் நேரிசை
20. ஊர் வெண்பா
21. ஊர் இன்னிசை
22. என் செய்யுள்
23. ஐந்திணைச் செய்யுள்
24. ஒருபா ஒருபது
25. ஒலியந்தாதி
26. கடைநிலை
27.கண்படைநிலை
28. கலம்பகம்
29. காஞ்சி மாலை
30. காப்பு மாலை
31. குழமகன்
32. குறத்திப்பாட்டு
33. கேசாதி பாதம்
34. கைக்கிளை
35.கையருநிலை
36. சதகம்
37. சாதகம்
38. சிறு காப்பியம்
39. சின்னப்பூ
40. செருக்களவஞ்சி
41. செவியறிவுறூஉ
42.தசங்கத்யல்
43.தசங்கப்பத்து
44. தண்டக மாலை
45. தாண்டகம்
46. தாரகை மாலை
47. தானை மாலை
48. எழுகூற்றிருக்கை
49. தும்பை மாலை
50. தியிலேடை நிலை
51. தூது
52. தொகைநிலைச் செய்யுள்
53. நயனப்பத்து
54. நவமணி மாலை
55. நாம மாலை
56. நாழிகை வெண்பா
57. நான்மணிமாலை
58. நான் நாற்பது
59. நூற்றந்தாதி
60. நொச்சி மாலை
61. பதிகம்
62. பதிற்றந்தாதி
63. பரணி
64. பல்சந்த மாலை
65. பன்மணி மாலை
66. பாதாதி கேசம்
67. பிள்ளைக் கவி
68. புகழ்ச்சி மாலை
69. புற நிலை
70. புறநிலை வாழ்த்து
71. பெயர் நேரிசை
72. பெயர் இன்னிசை
73. பெருங்காப்பியம்
74. பெருமகிழ்ச்சி மாலை
75. பேருமங்கலம்
76. போர் கேளு வஞ்சி
77. மங்கல வள்ளை
78. மணி மாலை
79. முதுகாஞ்சி
80. மும்மணிக்கோவை
81. மும்மணி மாலை
82. முலைப் 10
83. மெய்கீர்த்தி மாலை
84. வசந்த மாலை
85. வரலாற்று வஞ்சி
86. வருக்கக் கோவை
87. வருக்க மாலை
88. வளமடல்
89. வாகை மாலை
90. வாதோரணம் மஞ்சரி
91.வாயுரை வாழ்த்து
92.விருதவிலக்கணம்
93.விளக்குநிலை
94.வீரவெட்சிமலை
95.வெட்சிகறந்தைமஞ்சுறி
96.வெனில்மலை
மற்றும் வண்ணம்.